Saturday, December 16, 2006

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால்

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால் மாண்டுபோன பாலசிங்கம்

- எஸ். மனோரஞ்சன்

-எவ்வாறாயினும், எனது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பெரும் அவலங்களொடு ஒப்பிடுகையில் எனது நோயானது ஒரு வெறும் துரும்பென்றே சொல்ல வேண்டும். - -அன்ரன் பாலசிங்கம்-

ஒரு மாதத்திற்கு முன்னர்; பாலசிங்கம் கடும் சுகயீனமுற்றிருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற தமிழ் நெற் ரிப்போட்டர் ஒருவரிடம் பாலசிங்கம் கூறியதாக அந்த இணையத்தளம் நவம்பர் 22ம் திகதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாலசிங்கத்திற்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப்பற்றியும் அவ் இணையத்தளம் பினவருமாறு எழுதியிருந்தது.

இந்தமோசமான புற்றுநோய் மிக அரிதாகவே வரக்கூடியதென்றும், இந்தப் புற்றுநோயால் அவரது உடலின் மிக முக்கிய பாகங்களான ஈரல், நுரையீரல். வயிற்றுப் பகுதி மற்றும் எலும்பு மச்சைகள் என்பன பாதிக்கப் பட்டிருந்ததாகவுமே இச்செய்தியின் சாராம்சம் குறிப்பிட்டிருந்தது.
பாலசிங்கத்தின் இழப்பு வேறெல்லாரையும் விட வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பேரிழப்பாக தெரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களும் அவரின் இழப்பால் சற்று கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். காரணம் புலிகளின் பிரதம பேச்சாளரும் மதியுரைஞருமாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி வெளியே உதிர்த்துவிடும் கருத்துக்களால் புலிகளுக்கு ஏற்பட்ட அவமானங்களும் இடைஞ்சல்களும் பலரும் அறிந்ததே.

புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அவ்வாறான கருத்துக்களை அவர் ஏன் எதிர்க்கின்றார் என்று பலரும் தலையைச் சொறிந்து கொண்டனர். ஆனால், பாலசிங்கம் அவற்றை அறியாமல் செய்யவில்லை, அறிந்து வேண்டுமென்றேதான் செய்கின்றார் என்பதுதான் பாலசிங்கத்தை நன்கு அறிந்த பல முன்னாள் புலி ஆதரவாளர்களின் கருத்தாகும்.
தனது புற்றுநோய் பற்றியும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அவலம் பற்றியும் அவர் நோய்ப் படுக்கையில் இருந்து இறுதியாக வெளியிட்ட கருத்துப்பற்றி பிரான்சிலும் கனடாவிலும் வசிக்கும் இரு முன்னாள் தீவிர புலி ஆதரவாளர்கள் என்னிடம் பேசும்போது இப்படிக் கருத்துக்கூறினர்.
-பாலா அண்ணை அந்தக் கதைக்குள்ளையும் ஒரு முக்கிய விசயத்தை நாசூக்;காகச் சொல்ல வருகிறார். அதாவது தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் புலி அரசியல் என்னும் புற்றுநோயும் அதனால் தமிழர்கள் பட்டுவரும் அளவில்லா துன்பங்களுடனும் பார்க்கும்போது தனக்கு பிடித்திருக்கும் நோய் சர்வ சாதாரணமானது - என்பதைத்தான் பாலா அண்ணா கூற முற்படுகின்றார் என்றனர். அவ்விருவரினதம் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் மனவோட்டம் நன்றாகப் புரிந்திருந்தது. அதேபோலத்தான் பாலசிங்கத்துக்குத்தான் பிரபாகரனின் மனவோட்டமும் மிக நன்றாகப் புரிந்திருந்தது. பிரபாகரனின் சிந்தனைப் போக்கைப்பற்றி பாலசிங்கம் அடிக்கடி பல்வேறு விதமாக பல்வேறு தொனிகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

பாலசிங்கத்தோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டிருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவருடன் பேசும்போது, இந்த முடியரசனிட்ட இருந்தும் வெடியரசனிட்ட இருந்தும் தமிழ் சனத்துக்கு இனி விமோசனமில்லை நானாவது கெதியா உவங்களிட்டையிருந்து கழரவேணும் என்றாராம் பாலசிங்கம்.

யார் பாலா அண்ணை முடியரசன்;? யார் வெடியரசன்? என்று மற்றவர் வினவ...
என்னடாப்பா முடியரசனைத் தெரியாதே. அதுதான் எங்கட கட்டைக் குத்தியன்;. வெடியரசன் தான் உந்த நாசமாய்ப்போவான் பொட்டன். அட.. தம்பி இவன் முடியரசனை திருத்தினாலும் திருத்தலாம்போல கிடக்கு. ஆனால் அந்த வெடியரசனோடயெல்லா ஒண்டும் செய்ய ஏலாமக் கிடக்கு. அவன் சுட்டுத்தள்ள நான் எல்லா உலகத்துக்க பதில் சொல்வேணும். இது இந்த முடியரசன் கட்டைக் குத்தியனுக்கும் இது விளங்குதில்லை. அவனுக்கு ஏதாவது சொல்லப்போனா...

ஒண்டுக்கும் யோசியாதையுங்கொ பாலா அண்ணை...எல்லாம் சரிவரும்.. எண்டுபோட்டு ஹீ..ஹீ..என்டு இளிக்கிறான் அந்த மூதேசி... நாய்... என்று பாலா அண்ணை அரை மணித்தியாலமாக தொலைபேசியிலை பொரிந்து தள்ளினராம்.

அன்று பாலா அண்ணை தொலைபேசியில கதைச்சதை அப்பிடியே ரெக்கோட்; பண்ணி வன்னிக்கு அனுப்பினால் அதோட பாலா அண்ணையிட கதை சரியாப் போயிருக்கும். என்றார், அந்த முன்னாள் புலி ஆதரவாளர் என்னிடம். பாலா அண்ணையொடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள் பலரிடமும் கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை அவர்கள் இரகசியமாக வைத்திருந்த நல்ல காரியத்தால்தான், பாலா அண்ணை இவ்வளவு காலமும் உயிரோடு இருந்தார் என்று சொன்னாலும் தப்பில்லைதான்.

மற்றொரு சம்பவம்

1990ல் இருந்து 1994வரை யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு பிரேமதாசா அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவட்டு அங்கு சென்றுவந்தனர். அவ்வாறு சென்ற ஒரு இந்திய தமிழ் பத்திரிகையாளருக்கும் பாலசிங்கத்திற்கும் நடந்த உரையாடல் மிக சுவாரசியமானது.

பாலசிங்கம் இந்தியாவில் இருந்த காலத்திலேயே அப்பத்திரிகையாளரை பாலசிங்கத்திற்கு நன்கு அறிமுகமாதலால் அப்பத்திரிகையாளருக்கு பாலசிங்கத்தின் வீட்டில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. அங்கும் வழமைபோல் பாலசிங்கம் தனது பிளாக் அன்ட் வைற் விஸ்கியை உடைத்துப் பரிமாறினார். பாலா அண்ணருக்கு ஓரிரு சுற்று விஸ்கி தாராளமாக உள்ளே இறங்கியதும் பத்திரிகையாளர்; பாலசிங்கத்திடம் இப்படிக் கேட்டார்.

ஆமா இப்பிடியே தொடர்ந்து யுத்தத்தை புடிச்சிக்கிட்டிருந்து ஒங்க தலைவர்; என்னதான் பண்ணப்போறாரு..மக்கள்தானே அதிகமா அழிஞ்சு போறாங்க...எனக்குன்னா ஓங்க தலைவரு என்னா சிந்திக்கிறாரன்னெ புரியமாட்டேங்குது.. என்றார்.

உடனே பாலா அண்ணர்; இடை மறித்து அடேயப்பா...அவர் மற்றவைக்குத்தான் தலைவர் எனக்கொண்டும் தலைவரில்லை நானில்லாட்டி இம்மட்டுக்கு அவர் எப்பவோ சரி. அதைவிடு... என்ன சொன்னீர் உமக்கு அவர் என்ன யோசிக்கிறார் என்றே விளங்க இல்லையோ..? அடே தம்பி... அவனோட 15 வருசத்துக்கு; மேல ஒண்டா இருக்கிற எனக்கே அவன் எந்த நேரம் என்ன செய்வான் எண்டு விளங்குதில்லை. உனக்கென்ணென்டு விளங்கிறது? என்றாராம்.

அதில்லீங்க மிஸ்டர்; பாலா... இந்தியாவையும் எதிர்த்துக்கிட்டு... உலக நாடுகளிட்டையும் கெட்ட பேர்; எடுத்திக்கிட:டு எப்பிடி ஒரு போராட்டம் வெற்றி பெறப்போவுது. யாராவது ஒருத்தரோட நட்பா இருக்க வேணாமா? என்றார் பத்திரிகையாளர்.

அட நீர் ஒண்டப்பா... காட்ட மிருகங்களை பற்றி படிச்சிருக்கிறீரா? எல்லா மிருகமும் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்துதான் வாழும். இந்தப் புலி இருக்குதே அது மட்டும் எப்பவும் தனியாத்தான் வாழ்க்கை நடத்தும். அதவேறந்த மிருகத்தையும் நம்பாது. அதை நம்பி வேறெந்த மிருகமும் கிட்டவும் வராது. அதமாதிரித்தான் இவங்களும்...என்றார் பாலசிங்கம்.
அப்பிடீன்னா இவங்கள நம்பி யார்தான் உதவி பண்ணப் போறாங்க. இந்தப் போராட்டம் என்னாகிறது? என்ற கேட்டார் பத்திரிகையாளர்.
இவங்களை நானே நம்பிறதில்லை...வேற யார் நம்புவான் சொல்லு பாப்பம். அட தம்பி நாங்கள் பிரேமதாசாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவரோட போய் கதைக்கச் சொன்னவனும் இவன்தான்.ஆனால் நாங்கள் முக்கியமான 6,7 பேர் அங்க கொழும்பில நிக்கையிக்க இவன் சண்டையை துவக்கி விட்டிட்டான். அண்டைக்கு அமைச்சர் ஹமீட் இல்லாட்டி நாங்கள் துலைஞ்சிருப்பம். இவனை நம்பேலாது தம்பி... என்று பாலசிங்கம் சொல்வதை பரிதாபமாக கேட்டவிட்டு அந்த பத்திரிகையாளர் திரும்பி வந்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகின்றது? பாலசிங்கம் ஒன்றும் விளங்காமல் புலிகளோடும் பிரபாகரனோடும் இருந்தவரல்ல. நன்றாக எல்லாவற்றையம் தெரிந்து கொண்டு புலிகளின் சகல நாசகார அரசியலுக்கும் துணைபோனதுடன் அந்த நாசகார அரசியலை நியாயப்படுத்தி வந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே தமிழ் சமுகத்தைப் பீடித்திருக்கும் புலி அரசியல் என்னும் சமூகப் புற்றுநோயினால் தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு அவரும் பிரதான காரணகர்த்தாவாகும்.

பாலசிங்கம் பற்றி பழைய கதையொன்று

பாலா அண்ணர் என்கின்ற பாலசிங்கம் மதியுரைஞர் என்ற இந்த நிலைக்கு உயருவதற்குள் சந்தித்த சோதனைகள் பல. அவர் ஒரு சிறுநீரகத்தை இழந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் யாவரும் அறிந்த சோதனை@ அறியாத சோதனைகள் பல. அவற்றில் சில மிகச் சுவாரசியமானவை.
1985ம் ஆண்டு சென்னை வடபழனியில் நுNடுகு என்று அழைக்கப்படும் ஈழதேசிய விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திம்புப் பேச்சு வார்த்தைகளுக்கு போவதற்கு சில நாட்களுக்கு முன் இது நடந்தது. ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர இந்தியா முயன்று, இறுதியில் திம்பு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு போவதா விடுவதா என்பதில் ஆயுதமேந்திய தலைவர்களுக்குள் இழுபறி நடந்தது.

இச் சம்பவம் நடந்த அன்று திம்பு மாநாட்டுக்கு போவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நான்கு இயக்க தலைவர்களும் அங்கு கூட சம்மதித்து இருந்தனர். சிறீ சபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா ஆகிய மூவரும் தத்தமது இயக்கங்களின் முடிவுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திம்பு பேச்சுக்கு போவது ~சரி என்ற முடிவுடன் வந்திருந்தனர். அங்கிள் பாலாவும் தம்பி பிரபாகரனும் சற்று நேரம் தாமதித்தே அங்கு வந்தனர்.

எல்லோரும் அவரின் முடிவை சொல்லும்படி கேட்டனர். தம்பி பிரபாகரன் கூறியது இதுதான் நான் இப்பொழுதுதான் எனது பிள்ளையின் தலையில் (சார்ள்ஸ் அன்ரனி) பிஸ்டலை வைத்து சத்தியம் பண்ணிவிட்டு வருகிறேன். எனக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நான் இந்த மாநாட்டுக்கு வரப்போவது இல்லை. என்ற முடிவை சொன்னார். உடனே சிறீ சபாரத்தினமும் தம்பி போகா விட்டால் நானும் போகப்போவது இல்லை என்றார். இதைச் சொன்னதும் சகலருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அடுத்ததாக பத்மநாபாவும், தம்பியும் சிறியும் போகாவிட்டால் நானும் போகவில்லை என்றவுடன் பாலகுமார் சற்று கொதித்துப் போனார். அவர் சிறீ சபாரத்தினத்தையும் பத்மநாபாவையும் நோக்கி பொறுப்பு இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் போவதாகவே தீர்மானித்தீர்கள், இப்போது உங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். போகாவிட்டால் வரும் விளைவு உங்களுக்கு தெரியுமா? என்று இரைய ஆரம்பித்தார்.

தொடர்ந்து சகலரும் தம்பி பிரபாகரனுக்கு நிலைமையை விளக்கி, அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்போது பாலா அண்ணர் பேசத் தொடங்கினார். தம்பி, இவையள் எல்லாரும் சொல்லுறதைப் பார்த்தால் நாங்கள் போகாமல் விடுவது சரியில்லை. நாங்கள் எல்லாருமாக திம்புவுக்கு போய் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துவிட்டு வருவோம் என மதியுரை வழங்க முயற்சித்தார்.
உடனே வெகுண்டெழுந்த தம்பி பாலா அண்ணை தயவு செய்து வாயை மூடிக்கொண்டு இருங்N;கா என்ர தீர்மானத்தை சொல்லத்தான் உங்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து நீங்கள் நினைத்ததை பேச முடியாது. உங்களைப்போல எத்தனை பேரையும் நான் விலைக்கு வாங்குவேன். என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கர்ச்சித்தார். தம்பியின் கை அவரை அறியாமலே இடுப்பை நோக்கி போய்வந்ததை அவதானித்த பாலசிங்கம் ஒருமுறை வெலவெலத்துப் போனாராம்.

அசடு வழிய பத்மநாபாவையும் சிறீ சபாரட்ணத்தையும் பாலகுமாரையும் பார்த்த பாலா அண்ணர் நாய்க்குட்டிபோல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். மறுநாள் பாலா அண்ணரைக் கதைத்து சமாதானப் படுத்தி மீண்டும் சகலரும் ஒற்றுமையாக திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் விடயத்தை மேற்கொள்வதற்காக பத்மநாபா பாலசிங்கத்தைச் சந்திக்க சென்றார். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சென்னையில் ஒரு தொங்கலிலிருந்த கோடாம்பாக்கத்திலிருந்து மறு தொங்கலிலிருந்த அடையாறை நோக்கி தன் சக தோழர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர்ந்தார் பத்மநாபா.

பாலா அண்ணரும் ஆன்டி அடேலும் பத்மநாபாவை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கிள் பாலா வழமைபோல் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க தனக்கு பிடித்தமான கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி போட்ட விஸ்கியை சுவைத்த வண்ணம் வாரும் நாபா உம்மட்ட கதைக்க வேண்டும் எண்டுதான் இருக்கிறன் என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். புத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலெயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது... விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி எப்படிக் காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் ப+மிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை.
அனரறி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை! இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அனரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்படடிருந்த சிறுவன் மூலமாகவும் அவரது வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும்; கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம்.

இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால் அவர்; நக்கிப் பிழைக்கும் நாய்தான். தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும்; ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை.
பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம்

இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவாhத்தைக்கு சென்ற பாலசிங்கம் இப்படிக் கூறினார். றுந றடைட மடைட. வுhயவ ளை ழரச தழடி... புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய உருவத்தைக் காட்டி நிற்பார்.

பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல.
கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பால சிங்கத்தின் மதியுரைஞர் பணி. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.
ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்;க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின் விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கபடும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே.

தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார். எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி. மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.
பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன. இதுதொடர்பான விடயங்களை மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

Monday, December 04, 2006

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?

1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது தீவட்டி ஊர்வலம் கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் து}ண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் து}ண்டி ஒரு பெரிய கலவரத்தைத் து}ண்முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை இலங்கைத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும் நேசத்தையும் பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. அதே தமிழகம் பற்றி எரிந்தது மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.
ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம் அறிவு ரீதியாக இல்லாமல் உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் து}ண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும் ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு களுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக து}ண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும் பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி.க. நெடுமாறன் பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.


அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சு10ழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சு10ழலில் எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ து}ண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள் ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும் தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும் துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ அஸ்ஸாம் போலவோ ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி.க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள் நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி.மு.க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா.ம.க விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சு10ழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.

1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை து}க்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சு10ழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சு10ழல் எம்.ஜி.யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும் மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார். எஸ்.பி.சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவன் மீண்டும் வந்தான். அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.
பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட பிந்தரன்வாலே விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம் அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும் பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும் பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.
தனது அன்னை துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது உரிய அறிவு இல்லாமல் அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ்காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.
ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும் வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும் சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சு10ழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும் உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.


ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினைசக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி.மு.கவின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி.வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களை உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால் இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி இனம் மூலம் மக்களை து}ண்டும் அரசியலை அவ்வளவாக விரும்பமாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சு10ழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர்.

மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சு10ழலில் 1983ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்குதமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் து}ண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்ணம் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?
இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும். இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும்? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா.ம.க விடுதலைச் சிறுத்தைகள், தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் து}ண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால் பொது மக்களின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களைப் புறக்கணித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும் மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும் பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும் நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் து}ண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களையும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை.


அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால் பழைய 1983போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. விடுதலைசிறுத்தைகள்,பாமக, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும் புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும். அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர். மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.
புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.


ரரக்கெட் லாஞ்சரில் இருந்து விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ்நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.
தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள் கன்னடர்கள் மலையாளிகள் அடித்து துரத்தப்படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை. தமிழ்நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது.
இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ ஒரு நாகலாந்தையோ ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா? நமக்கென்றால் வெண்ணை இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும் அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாகிஸ்தானை எதிர்க்க முடியும்? இரட்டை வேடமாகி விடாதா நமது கோரிக்கை. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம் தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது.
ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.
இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால் இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல நிதர்சனம் இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ளநரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும் இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும்இ சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் 1.இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன் சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.4. அந்த மாநிலத்துக்கு கல்வி அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்துஇ தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.


ஜெய்ஹிந்த்வந்தே மாதரம்.

http://jataayu.blogspot.com

Monday, November 27, 2006

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள்

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள் விரோதமானது

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பாதை மூடப்பட்டதால் யாழ் குடாவில் வாழுகின்ற சுமார் 5லட்சம் மக்கள் மோசமான உணவு,மருந்து,எரிபொருள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், சுதந்திரமான போக்குவரத்து தகவல் தொடர்பு இன்மையாலும் அல்லப்படுவது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

நோக்கங்கள் வௌ;வேறாக இருப்பினும் இப்பாதையைத் திறக்கும்படி யாழ்ப்பாணமக்கள், விடுதலைப் புலிகள், தென்னிலங்கை மனிதாபிமான சக்திகள் என்பன வேண்டுகோள் விடுத்தவ்ணம் உள்ளன. இப்பொழுது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் வாசிங்டனில் கூடிய பொழுது இவ்வாறானதொருவேண்டுகோளை விடுத்துள்ளன.
ஏ - 9 வீதிய10டாக பொருட்கள் கொண்டு செல்லும் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடுவதையும், தமக்கு விரோதமானவர்களைக் கடத்துவதையும் கைவிடுவதாக உறுதியளித்தால் பாதையைத் திறக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. பலிகளைப் பொறுத்தவரை இவை இரண்டையும் அவர்கள் என்றுமே கைவிடப்போவதில்லை. அப்படிப்பார்த்தால் இப்பாதை என்றுமே திறக்கப்படப்போவதில்லை என முடிவாகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது தானா?
புலிகள் அமைப்பு ஒரு பாசிச இயக்கம். அதற்கு அதன் சொந்த மக்களைப் பற்றியே எந்தவித அக்கறையும் கிடையாது. தேசியஇன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ள இயக்கம் என்றால் அது விடுதலைப் புலிகள் மட்டும்தான். சமீபத்திய ஆய்வொன்றின்படி இலங்கை இராணுவம் கொலை செய்த தமிழ் மக்களைவிட புலிகள் கொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு எனத் தெரியவருகின்றது. (அரசாங்கப் படைகளுடன் போரிட்டு மடிந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை)

எனவே இப்பாதை திறப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமது கட்டப்பாட்டிலிருக்கும் தனது சொந்தக் குடிமக்களான 5 லட்சம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றது என்பதே கேள்வியாகும். ஏனெனில் இம் மக்கள் 1995 அக்டோபர் 30ம் திகதி புலிகளால் பலவந்தமாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் வேண்டுகோளை ஏறறு வன்னி செல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு வந்து மீளக் குடியேறியவர்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
ஏ- 9 பாதை மூடப்பட்டிருப்பதால் புலிகளுக்கு மாதாந்தம் கிடைத்துவரும் சுமார் 30 கோடி ரூபா இழப்பு ஏற்படும், அது புலிகளைப் பாதிக்கும் என அரசாங்கம் தான் பாதையை மூடிவைத்திருப்பதற்கு நியாயம் கூறுகின்றது. புலிகளின் மாதாந்த வருமானம் ஆக இந்த 30 கோடி ரூபா தானா? இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்கிடமானதுமான கருத்தாகும்.

புலிகளின் வருடாந்த நிகர வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாக்கள் என மேற்குநாட்டு உளவு அமைப்புகளே கூறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற லட்சக் கணக்கான தமிழ் மக்களிடமிருந்து புலிகள் மிரட்டிக் கறக்கின்ற பணம் கோடிக்கணக்கான ரூபா. இதுதவிர புலிகள் சர்வதேச hPதியாக நடாத்துகின்ற போதைவஸ்து வியாபாரம், ஆயுத வியாபாரம், கப்பல் போக்குவரத்து வியாபாரம் என்பனவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபா (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு கூலியாக மேற்கு நாடொன்றிடமிருந்து பலநு}று கோடி ரூபாவை புலிகள் பெற்றதாக கூறப்படுகிள்றது)
இதுதவிர நோர்வேயும் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் புலிகளுக்கு ஒழுங்கான முறையில் பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்.

கொழும்பு, யாழ்பாணம் போன்ற அரசாங்கக் கட்டுப்பாட்டு நகரங்களிலும் ஏன் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும்கூட புலிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் பலகோடி ரூபா முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். (இலங்கையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இராணுவ ரகசியங்களை புலிகள் கறப்பதும் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளுக்கே புலிகள் லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் புலிகளின் அசுர உள்நாட்டு வெளிநாட்டு பணபலத்துக்குச் சான்றாகும்) கனடாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பெரும் சுப்பமார்கேட்டுக்களை புலிகள் நிர்மாணித்திருக்கிறார்கள்.
கனடாவில் கடந்த லிபரல் அரசாங்கத்தில் அதிமுக்கிய பதவி வகித்த ஒருவரின் மகன் நாடாத்தும் சர்வதேச கப்பல் கம்பனி ஒன்றில் புலிகளும் ஒரு பங்குதாரர்கள் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர புலிகளின் முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகம் முழுவதும் பலகோடி ரூபாவை புலிகளுக்காக திரட்டி வருகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் மக்களுக்கு அரசாங்கமே நிவாரணப்பொருட்களை அனுப்புகின்றது. புலிகள் அங்குள்ள கிராமசேவகர்கள் மூலம் கூடுதலான ஆட்களின் பெயர்களை பதிவு செய்து தமது உறுப்பினர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுப்பது ரகசியமானது அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றினதும் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனுப்பும் பணத்தை புலிகளே சூறையாடுகிறார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற்படும் அரச ஊழியர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட, அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.
இத்தனை வழிகளிலும் புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் எத்தனைகோடி ரூபாவாக இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள். இவையெல்லாவற்றையும் அரசாங்க நியாயப்படி நிறுத்தவல்லவா வேண்டும்.உண்மையில் புலிகளின் மொத்த மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா அவர்களது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே ஏ-9 பாதையை அரசாங்கம் மூடிவைத்திருப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கம் கூறுவதுபோல புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. இராணுவ hPதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

புலிகளைப் பொறுத்தவரையில் ஏ- 9 வீதியைத் திறப்பதால் வரிப்பணம் கிடைப்பது மாத்திரமின்றி போதிய பொருட்களைப் பெறமுடியும் என்பதும் மாத்திரமின்றி தென்னிலங்கைக்கும் யாழ்பாணத்திற்கும் தமது புலனாய்வாளர்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஆயுதங்கள் என்பனவற்றை கடத்த முடியும் என்பதும் பிரதானமானது. ஆனால் ஏ - 9 பாதை இல்லாவிட்டாலும் (சற்றுச் சிரமம் இருப்பினும்) புலிகளால் அவற்றைச் செய்ய முடியும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். எனவே ஏ - 9 பாதையை மூடியதன் மூலம் பொருளாதார hPதியிலும் இராணுவ hPதியிலும் புலிகளை முடக்கிவிட முடியும் என அரசாங்கம் கருதுமாக இருந்தால் அது தப்பான கருத்தாகும்.

உண்மையில் ஏ- 9 பாதையை மூடியதால் புலிகளைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாழ் குடாநாட்டு மக்களே. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டுள்ளது. போதாததற்கு புலிகளுக்கு லட்சகணக்கில் கப்பம் செலுத்தும் யாழ் வர்த்தகர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து பொது மக்களிடம் ஈவிரக்கமின்றி கொள்ளை லாபம் அடித்துவருகின்றனர். வெளிநாட்டு வருமானம் உள்ள யாழ் குடாநாட்டு மக்களே இன்றைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் கதி என்ன? அரசாங்கத்தின் இந்தவகையான சமயோசிதமற்ற, மக்கள் விரோத செயற்பாடுகள் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களை அரசுக்கு எதிராக திரும்பவும் வைத்துள்ளது. புலிகளின் செயற்பாடுகளுக்காக யாழ் குடாநாட்டு மக்களை அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் பழிவாங்குவதற்கு முற்படுவதுபோல் தெரிகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அதன் இன்றைய வளர்ச்சிக்கும் காரண கர்த்தாக்கள் யாழ் குடாநாட்டு மக்கள் அல்ல. புலிகளை வளர்த்துவிட்டவர்கள் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே.

தமிழ் மக்கள் தமது தேசியப் பிரச்சினைகளை சாத்வீகமாக தெரிவித்தபோது அதை தீர்ப்பதற்கு பதிலாக இராணுவ ஒடுக்குமுறையை பிரயோகித்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது அரசாங்கமே. குறிப்பாக 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர், ஜெயர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே இன்றைய யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி ஆகும். இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் என்ற உலகின் மிகக் கொடூரமான பாசிச இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தின் தோற்றத்தினாலேயே செயற்பாடுகளினாலும் உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் அல்ல, தமிழ் - முஸ்லீம் மக்களே. இந்த இயக்கத்தின் செயற்பாடுகளால் தமிழினம் தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து நாடோடி அகதிகளாக மாறியுள்ளதுடன் சாதாரண மனித வாழ்வையும் இழந்துள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறுமனே இராணுவ hPதியான நடவடிக்கைகளால் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என கருதிச் செயற்படுவது ஒருபோதும் வெற்றியளிக்ப்போவதில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கமாக இருந்த போதிலும் அவர்கள் தமது இருப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவே அரசின் தவறான செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் கணிசமான ஒரு பகுதியினர் புலிகளின் பக்கமே நிற்கின்றனர். அத்துடன் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற போர்வையில் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக சர்வதேச சக்திகளுகம் நுழைந்துவிட்டன.

எனவே உண்மையில் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கவும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்குமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே. அரசியல் தீர்வுடன் இணைத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் வெற்றி பெறுவது நிட்சயம். அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் இவ்வாறான ஏ- 9 வீதி மூடுவதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும். எது எப்படியிருப்பினும் தனது பிரசைகளான யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களைப் போல பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்வதும், அவர்களது சுதந்திரமான போக்குவரத்தை உத்தரவாதம் செய்வதும் புலிகளின் கைகளில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை அரசாங்கம் எக்காரணம் கொண்டு தட்டிக்கழித்துவிட முடியாது.

Thanks: Thenee.com

Thursday, November 23, 2006

உதவி கோருகிறார்கள்!

உதவி கோருகிறார்கள்
- நமது நிருபர்

ஜேர்மனியிலுள்ள தமிழ் நண்பர்கள் பரோபகார சிந்தையுள்ள இலங்கை தமிழ் அன்பர்களிடமிருந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தமது நண்பர் ஒருவரின் வைத்திய செலவுக்காக உதவி கோருகிறார்கள். பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன் என்னும் இயற்பெயருள்ள இந்த நண்பர், நோய் அதிகரிக்கும் நேரங்களில் ப.வி.சிறீரங்கன் அல்லது எண் சோதிடரின் ஆலோசனைப்படி மாற்றிய ப.வி.ஸ்ரீரங்கன் என்னும் பெயர்களால் இணையத்தளங்களில் நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவராவர்.

மேற்படி நண்பர் நீண்ட காலமாக ~புலிக்குனியா தேனீபோபியா என்னும் விலங்குகளை மட்டும் பீடிக்கும் ஒருவித மனநோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், ஜேர்மனியில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எவையும் பலன் தராமையால் இறுதி முயற்சியாக கேரளாவிற்கு வைத்தியத்திற்கு அழைத்துச் செல்ல அன்னாரது நண்பர்கள் விரும்புவதாகவும் அதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும் பரோபகார சிந்தையுள்ள நண்பர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.

ஸ்ரீரங்கனின் நோய்குணம் பற்றி மேலும் அறியவருவதாவது, இவர் நீண்ட காலமாக மேற்படி நோயினால் பீடிக்கபட்டு வந்துள்ளதாகவும், இவ்வருட நடுப்பகுதியிலிருந்து இந்நோய் அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலி எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிவந்த இவர் திடீரென புலிகள் தன்னைக் கொலை செய்ய வருவதாக கடடுரைகள் எழுதி வந்ததாகவும், பின்னர் வன்னிக்கு வர டிக்கற் தருமாறு கோரி இணையத்தளங்களில் கட்டுரைகள் எழுதியதாகவும் கூறப்;படுகிறது. இவ்வாறான கட்டுரைகளை இவர் இரவில் திடீரென நித்திரையிலிருந்து எழும்பி எழுதுவதாகவும், குறிப்பாக 31.5.2006 அன்று நடுச்சாமம் 2.11 மணி என இவரே குறிப்பிட்டு ~என்னைத் தேடும் புலிகள் என்ற தலைப்பில் தமிழ் அரங்கம் என்னும் இணையத்தளத்தில் இவர் எழுதிய கட:டுரையை இவ் இணையத்தளத்தில் இப்போதும் பார்வையிடலாமென இவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

மேற்படி புலிகள் தன்னைக் கொலை செய்ய மிரட்டுவதாக ஸ்ரீரங்கனின் முறைப்பாடுதலைத் தொடர்ந்து, புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பொறுப்பாளர்களுடன் அன்னாரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இப்படியொரு நபரைப்பற்றி தாம் முன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டது இல்லை எனவும், தாம் கேள்விப்படாத ஒருவரிற்கு எதிராக தாம் எவ்வாறு கொலைப்பயமுறுத்தல் விடலாம் என கேட்டதாகவும் தெரிய வருகிறது.

மேற்படி நண்பரிற்கு கேரள வைத்தியம் பலனளிக்கும் பட்சத்தில் தமிழ் அரங்கம் இணையத்தள ஆசிரியரையும் சிகிச்சைக்காக கேரளாவிற்கு அழைத்துச்செல்ல அவர்களது நண்பர்கள் விரும்புவதால், தாராள சிந்தையுள்ளவர்கள் சமூக நலன் கருதி மனம் உவந்து உதவுமாறு கோரப்படுகிறார்கள்.

Sunday, November 05, 2006

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப்

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப் புளுகர்கள்

பேரறுஞர்; கல்லாநிதி கியூறியஸ் ஜி

புலிகள் ஆபத்தான பிராண்pகள் என்றால் அவர்களின் ஆதரவாளர்கள் இன்னொரு ரகம்,,, வினோதமான பிராண்pகள், இவர்களை எல்லாம் விழுங்கி விடக் கூடிய ரகம் ஒன்றுணடு,, அது தான் புலிகளின் ஊடகங்களில் அரசியல் ஆய்வு எழுதும் ஆய்வாளர்கள், விஷ ஜந்துக்கள்? வினோதமான பிராண்pகளைத் தொற்றும் விஷக் கிருமிகள், சீமான்கள் வஞ்சகமில்லாமல் வாசிப்பவன். கேட்பவன் எல்லாம் காதில் பூ வைத்த இளிச்சவாயன் என்ற நினைப்பில் கவலையே இல்லாமல் எழுதிக் குவிப்பார்கள், அல்லது வானலைகளில் முழங்கித் தள்ளுவார்கள், இணையம். வானலை. அச்சு வழி ஊடகங்கள் எல்லாம் தமிழ் எழுத்துடன் கூடிய கணனி வைத்திருக்கும் எல்லோரையுமே அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கித் தொலைத்திருக்கின்றன, அதற்குள் சில மாஜிப் பேராசிரியப் பெருமக்களும் புனைபெயருக்குள் ஒளிந்திருந்து எம் பெருமான் கடைக்க பார்வை திரும்பாதா என தினமும் குரல் எழுப்புவதாக வேறு வதந்திகள்,

புலிகளை விமர்சிப்பவர்களுக்குத் தான் உயிர்ப் பயம் என்று இல்லை, புலிகளுக்கு ஆதரவாக எழுதித் தொலைப்பதைக் கூட சொந்தப் பெயரில் எழுதப் பயந்து புனைபெயரிற்குள் மறைந்திருப்பவர்களும் கூட ஏதோ தங்களை சிங்கள புலனாய்வாளர்;களோ. ஒட்டுக்குழுக்களோ மண்;டையில் போட்டு விடக் கூடும் என்ற பயத்தில் தான் வாழுகின்றனர்;, இவர்;களுடைய ஆய்வுக் கட்டுரைகள்,, இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் தான், சம்பூரில் புலிகள் அடி வாங்கி தப்பியோடிய முழுப்பூசண்pக்காயை சோற்றில் புதைத்து டிசம்பூரில் பின்வாங்கல் நோர்;வேயை பொறிக்குள் சிக்க வைத்த புலிகளின் தந்திரம் என்று புதினத்தில் ஆய்வுக்கட்டுரை எழுத இவர்;களால் மட்டுமே முடியும்,
புலிகளின் ஆதரவாளர்;களை அழுது கொண்;டே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி புல்லரிக்க வைப்பது தான் இவர்;களின் முதன்மையான நோக்கம், அப்புறமாய். அதை தமிழ்ச்செல்வனோ மற்றும் முக்கியஸ்தர்;கள் வாசித்து தங்களைப் பாராட்ட வேண்;டும் என்றோ. அல்லது தலைவரின் காதில் போட்டு (பின்னே என்ன தலைவருக்கு இதெல்லாம் வாசிக்க எங்கே நேரமிருக்கிறது இங்கிலிசுப் படம் பார்;க்கவே அவருக்கு நேரம் போதாது,) வன்னிக்கு வரவழைத்து தேசப்பற்றாளராக்க வேண்டும் என்ற நோக்கம், அப்புறமாய். இதை வைத்தே காசு பண்ணும் ஒரு கூட்டம்,, கனடாவில் பக்கத்திற்கு நு}று டொலர்; என்று ஆலையில்லா ஊரில் சக்கரையாக பத்திரிகைகளுக்கு ஆய்வு சப்ளை பணணிpய யாசகனும் உண்;டு, மற்றும்படி முயக்கம். ஈனநாடு எல்லாம் இழுக்க இழுக்க இறுதிவரை,,,

சிரைச்சேதம் செய்யப்போன கடையில் கிடைத்த ஈனநாட்டில்,, சம்பூரில் யுத்தத்தில் பெரும் திருப்பம்,, தலையங்கம்? புறமுதுகு காட்டியது கூட புலிகளின் புத்திசாலித் தனத்தால் எழுந்த திருப்பம்,, ம்,, சிக்கல் என்னவென்றால்,, ஒரே விசயத்திற்கே புலிகளின் ஒவ்வொரு ஊடகமும் தன் புத்திக்கெட்டியவரையில் வியாக்கியானம் கொடுக்கும்,, ஆய்வாளர்;களின் அளப்பு இன்னொரு பக்கம்,, ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், அது பொதுவானதாக இருக்க வேண்;டும் என்ற கவலை யாருக்கும் இல்லை,
உதாரணம்,,, வெகுது}ரம் போகத் தேவையில்லை,, நம்ம நிதர்;சனம் இருக்கிறதே,,,
புலிகள்; கண்;டி வீதியைத் திறக்கும்படி ஜெனிவாவில் கேட்டுத் தான் பேச்சுவார்;த்தையை முறித்துக் கொண்;டு வந்தார்;கள்,, குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவை எதிர்;நோக்குவதாகக் கூறி. அரசியல் தீர்;வு பற்றிய பேச்சே இல்லாமல் வெற்றிகரமாக பின்வாங்கினார்;கள், குழந்தைகள் இராணுவத்தினரின் எச்சில் சாப்பாட்டுக்காக தவம் கிடப்பதாக வீரகேசரி தகவல் வெளியிட்டது, மொத்தத்தில் குடாநாடு எதியோப்பியாவின் நிலைக்கு வருவது போன்று தான் எல்லா ஊடகங்களும் விளாசித் தள்ளின, தாங்கள் தமிழ் மக்களிடமும் வர்;த்தகர்;களிடமும் பறிக்கும் வரிகளை எல்லாம் மூடி மறைத்து. மக்களின் அவலத்தை நீக்க பாடுபடுவது போல. இந்த பட்டினிச் சாவு அபாய அறிவிப்புச் சங்கு உலகெங்கும் புலிகளால் ஊதப்பட்டது,
இதையெல்லாம் பொருட்படுத்தாமல். இலங்கைக் கடல் நீர்; சிங்களவனுக்கு மட்டும் தான் சொந்தமா சிங்களவன் ஏ9 பாதையைப் பூட்;டி கடல் வர்;த்தகம் மூலமாக பல கோடி தமிழரின் பாணத்தைச் சுருட்டுகிறான் என்று. புலிகளின் கூக்குரல் எல்லாம் அந்தப் பணத்தை தாங்கள் சுருட்ட முடியவில்லையே என்ற அங்கலாய்ப்புத் தான் என்று புட்டுப் புட்டு வைத்திருக்கிறது, தற்போது எட்டுக் கப்பல்களின் உண்வு கொண்;டு செல்லப்படுவதையும் அதன் மூலம் சிங்களவன் மாதம் எட்டாயிரம் கோடி ருபா சம்பாதிப்பதாகவும் பாதையைத் திறந்தால் தமிழ் வர்;த்தகர்;கள் பத்துக் கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பார்;கள் என்றும் நிதர்;சனம் அழுதிருக்கிறது, (அருவருக்கத் தக்க வகையில் இந்த ஆய்வுக் கட்டுரையில் வந்த தாயின் தகாத உறவுகள் பற்றிய உரையாடல் ஒன்று பின்னர்; நிதர்சனத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது)
ஒருபுறத்தில் புலிகள் உண்வு போகவில்லை. பட்டினிச் சாவு தான் முடிவு என்று பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு வர. மறுபுறத்தில் நிதர்;சனம் லாப நட்டக் கண்க்குப் பார்க்கிறது, இது தான் புலி ஆதரவு ஆய்வாளர்;களின் இலட்சண்ம், முன்பு அரசியல் அவதானிகள் தான் எங்கும் இருந்தார்;கள், நல்லு}ர்;திருவிழாவில் நேர்முகவர்ணர்னை செய்யும் வானொலிக்காரர்;கள் மாதிரி,, எம் பெருமான் இப்போது தெற்கு வீதியில் வலம் வந்து கொர்;டிருக்கிறார்;, பக்தகோடிகளின் அரோகரா கோஷம் விண்;ணை;ப் பிளந்த வண்ண்ம் இருக்கிறது, அந்தக் கோஷத்திலே. வானமும் பெருக்கெடுக்குமோ என்ற பயம் தரும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்த வண்ண்ம் இருக்கின்றன, மக்கள் வெள்ளம் கடல் அலை போல மோதிக் கொண்;டிருக்க. தேர்; கப்பல் போல மிதந்து வரும் காட்சியைக் காணக்; கோடி கண்;கள் வேண்;டும்,, இதோ,, பக்தை ஒருவர்; மலர்;களை தட்டிலிருந்து வீசிய வண்ணம்…..
ம்,, ரேடியோவைக் கொஞ்சம் கூட்டி வைத்து அங்கப்பிரதிட்டம் செய்ய வேண்டியது தான்,, முடிந்தால். முன்னால் விபூதியையும் வைத்து உண்டியலையும் வைத்து விடலாம், பக்தியை வானலைகள் ஊடாக அனுப்பிய சாதனை அது,
பின்னால் ஆய்வாளர்;கள் வந்து விட்டார்;கள்,, செய்தியை ஆராய்ச்சி பணணி பகுத்தும் தொகுத்தும் தருவதற்கு,, எம்,ஜி,ஆர்; விஞ்ஞானியாகி மின்னலைக் குளிசைக்குள் அடைத்த விளையாட்டு மாதிரி,, செய்தியை சோதனைக் குழாய்களுக்குள் போட்டு உப்பும் புளியும் கலந்து கொதிக்க வைத்து குடுவையில் ஒடுங்க வைத்து,,, செய்தியும் அதன் மீதான பகுப்பாய்வும் புல்லரிக்க வைக்கும்,
இப்போது அது கூர்;ப்படைந்து. செய்தியில் புலனாய்வு கூட நடக்கிறது, சி,ஐ,டி மூசா மாதிரி. பூதக்கண்ணாடியுடன் செய்தியை உருப்பெருக்கும் வித்தை நடக்கிறது,முன்பு இதற்கெல்லாம் மொத்தக் குத்தகை ஏஜண்;டாக மாமனிதர்; சிவராம் இருந்தார்;, அவர்; தான் இதை முழுநேரத் தொழிலாகவே செய்து வந்தவர்;, இப்போது மூலைக்கு மூலை ஆளாளுக்கு கிளம்பி,, நுண்ணாய்வு. புலனாய்வு என்று புலிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் வியாக்கியானங்களும் பொழிப்புகளும் து}ள் பறக்கிறது,, பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரைக்கும், இவர்;களுக்கு செய்தி மூலம் சப்ளை செய்யும் அண்;டப்புழுகர்;கள் பொயிண்;ட் எடுத்துக் கொடுப்பார்;கள், துக்ளக்கின் அரசில் மந்திரிப் பதவிக்காக கட்சி மாறியவர்;கள் இலாகா இல்லாத மந்திரிகளாக எப்படி இருப்பது என்று கேட்ட போது. திறப்பு விழாக்களுக்கு சென்று வாருங்கள் என்ற மாதிரி. தேசியத் தலைவரின் தளபதிகளும். யுத்த நிறுத்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் துணை;ப்படைகளின் கிறாஜுவேஷன் விழாக்களில் பன மட்டைகளைப் பரிசளித்து பேருரை நிகழ்த்தும் போது. சிங்கள அரசு முதல் இந்தியா. சர்;வதேச சமுகம் வரைக்கும் எச்சரிக்கை விடுத்து. தலைவரின் தீர்;க்கதரிசனத்தை புகழ்ந்து விளாசுவார்;கள், தமிழ்ச்செல்வன் முதல் பாலகுமார்;. பால்ராஜ். சூசை. பொட்டம்மான் என்று நினைத்த மாதிரிப் முழங்கித் தள்ளுவார்;கள், அப்புறம் நம் முப்படை. விமானப்படை. ஈருடகப் படை புகழ் இளந்திரையன் பாதுகாப்புப் கவுன்சில் கதை மாதிரி நாளுக்கொரு கதையைக் கிளப்ப,,, கடைசியில் வந்து இறங்கிய குழந்தைகள் படைச் சேர்;ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பெரிய புழுகுக் குண்;டு வரைக்கும்,,,

இந்த ஆகாயப் புழுகுக் கூட்டம் ஈரைப் பேனாக்கி. பேயைப் பெருமாளாக்கும் தொழிலில் அமோகமாய் ஈடுபடும், புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிய இந்த ஆய்வாளர்;களின் வர்ண்னைகளைக் காது கொண்;டு கேட்க முடியாது, அப்புறமாய். அது புஷ்வானமானதும் இவர்;கள் வெட்கமேயில்லாமல் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தை ஆதாரம் காட்டி. புலிகள் இப்போது பிள்ளைகளைக் கடத்துவதில்லை என்பதால் சர்;வதேச சமுகம் புலிகளை அங்கீகரிக்க வேண்;டும் என்று ஆய்வு செய்யப் புறப்படுவார்;கள், அப்புறமாய்,, தட்டச்சித் தட்டச்சித் தினவெடுத்த தோள்களுக்கு வீரம் பிறந்தால்,, இருக்கவே இருக்கிறது திறந்த கடிதம்? வாழ்க்கையில் மொட்டைக்கடிதம் தவிர வேறெதுவும் எழுதியறியா ஆய்வாளர்;கள் ரொனி பிளயருக்கு ஓர்; திறந்த கடிதம். கோபி அர்ண்ண்னுக்கு ஓர்; திறந்த கடிதம் எல்லாம் எழுதி புலிகளை கொக்கென்று நினைத்தாயோ. கொங்கண்வா? என்று எச்சரிக்கை விடுவதைப் பார்;த்தால்,, அடி வயிற்றில் பயம் பற்றிக் கொள்ள,, அட,, சவால் விட்டிருக்கிறானே பாவி,, என்ன நடக்கப் போகிறதோ என்று கலங்கிப் போயிருப்பீர்;கள், ஆய்வாளரோ அடுத்த வாரம் தமிழினத் துரோகி கருhணாநிதிக்கு ஒரு திறந்த மடல் வரையப் போய் விடுவார்;,,

உடன்பிறப்பே,, ஈழத்தமிழனின் இரத்த வெள்ளத்தை கண்;ட பின்னாலும் கரையாத இரக்கமில்லாத இதயமோ உனக்கு,,
இந்த வெத்து வேட்டுக் கூட்டத்தில் ஒன்று சமீபத்தில் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவுக்கு சவால் விட்டிருக்கிறது, எப்,பி,ஐயின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை என்ற தலைப்பில் நிதர்;சனத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில்,, வள்ளிபுனத்தில் நடைபெற்ற குண்;டுவீச்சில் இறந்த உயிர்;களைக் கண்;டு உணர்;ச்சி பொங்கிய அப்பாவித் தமிழர்;களை ஏவுகணை;களைக் காட்டி அவர்;களை வாங்கத் து}ண்;டி விட்டு அவர்;களை அமெரிக்கா கைது செய்து விட்டு தங்கள் புலனாய்வு வெற்றியாகக் காட்டுகிறது என்று அறிவுக்கொழுந்து ஒன்று கதை அளக்கிறது,

இந்த அளப்பை புலிகளின் ஆதரவாளர்;களைத் தவிர வேறெந்த இளிச்சவாயன் நம்புவான்? எனவே கைது செய்யப்பட்டவர்;கள் அப்பாவிகளாம், அந்த அப்பாவிகள் ஏவுகணை; வாங்கி புலிகளுக்கு அனுப்ப விரும்பினார்;களாம், அவர்;களுக்கும் புலிகளுக்கும் தொடர்;பு இல்லையாம் என்பது தான் அந்த அறிவுக்கொழுந்துவின் வாதம், சரி,, வள்ளிபுனம் தாக்குதல் நடந்து ஓரிரு மாதங்கள், ஆனால் கைது செய்யப்பட்டவர்;களுடன் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு கடந்த நான்கு ஆண்;டுகளாகத் தொடர்;பு வைத்திருந்ததே என்ற கேள்வியைப் புலிகளின் ஆதரவாளர்;கள் கேட்க மாட்டார்;கள் என்பது அந்த அ,கொவுக்கு நன்றாகவே தெரிந்ததால். இழுத்து முழக்கியிருக்கிறது, இந்த வாதத்தை அமெரிக்காவில் இருந்து புலிகளுக்கு அரசியலமைப்பு வரையும் வழக்கறிஞர்; குறித்து வைத்துக் கொள்ளலாம், சந்தேக நபர்;களுக்காக ஆஜராகும் போது இதை ஆதாரமாகவும் காட்டலாம், வ,பி,கோ 304 படி (வன்னி பீனல் கோட்) நீதிபதி உடனடியாகவே அவர்;களை விடுதலை செய்வார்;, இவர்;கள் இதையெல்லாம் தமிழில் தானே எழுதுகிறார்;கள், ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை அங்கே தானே பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலத்தில் சம்பூர்; பின்வாங்கல் நோர்;வேயைப் பொறிக்குள் சிக்க வைத்த தந்திரம் என எழுதி விட்டு. நிபந்தனையற்ற பேச்சுக்கு சம்மதம். தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள் என்று நோர்;வேயிடம் மன்றாட முடியுமா?

சமீபத்திய சண்;டை நம்ம ஆய்வாளர்;களுக்கு ஒரே அவல் சப்ளை தான், புலிகள் வாங்கிக் கட்டிக் கொர்;டிருந்த போதெல்லாம் வெற்றிகரமாகப் பின்வாங்கிக் கொர்;டிருக்கிறார்;கள், தலைவர்; நிஷ்டை கலைக்கப் போகிறார்;, கண்டு கலங்கப் போகிறது என்று,,, குடுகுடுப்பைக் காரர்;கள் போல தலைவர்; ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, அவருடைய எதிரிகள் எல்லாம் அழியப் போகிறார்;கள் என்று உடுக்கு அடித்துக் கொண்;;டிருக்கிறார்;கள்,
எம்,ஜி,ஆர்; தன் ஆஸ்தான வில்லன்களான அசோகன். வீரப்பா. நம்பியார்; போன்றோரிடம் அடி வாங்கும் போது. இன்னாபா. இந்த கட்டையிலே போவான் வாத்தியாரை மொத்துறானே என்று குமுறும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஆறுதல் சொல்ல. மெதுவான சிரிப்புடன் பாருங்கடா. வாத்யார்; குடுக்கப் போறார்; என்று கியூறியஸ் உட்கார்;ந்திருந்த கலரிப் பக்கம் இருந்து. ரசிகர்; மன்றத் தலைவர்; பின்னால் பார்;த்துக் கூவ. காத்திருந்தது போல. உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு பொங்கி வரும் பகைவர்; கூட்டத்தை வாத்யார்; தனியே துவம்சம் செய்வார்;,,
அதுபோல. துவண்;டு நின்ற ரசிகர்; கூட்டத்தை உற்சாகப்படுத்தி இந்த ஆய்வாளர்; கூட்டம் சமாளிக்க,, தலைவரும் ரத்தத்தை துடைத்து விட்டு பந்தாடி வந்திருக்கிறார்; பகைவர்; கூட்டத்தை,விசிலடி காதைப் பிளக்கிறது, ரசிகர்;கள் கலரியில் இருந்து துள்ளிக் குதிக்கிறார்;கள், முதலாவதாக ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர்; ஆக்கிரமிப்பு நோக்கம் என புதினம் தொடக்கி வைத்திருக்கிறது, இனியென்ன,, இந்த ஆகாசப் புழுகர்;களும்,,
கொக்கென்று நினைத்தாயே கொங்கணவா,, நம்ம தலைவரைமக்கென்று நினைத்தாயோ மகிந்த சிங்களவா,, என்று பரண்p பாடித் தொலைக்கப் போகிறார்;கள்

நன்றி: தாயகம்

Friday, October 20, 2006

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த மான் முத்தையா

வெகுஜனன்- வட புலத்து சங்கானைப் பட்டின சபையின் முன்னாள் தலைவரும் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் சமூக விடுதலைப் போராளியுமான நாகலிங்கம் முத்தையா தனது எண்பத்து நான்காவது வயதில் கடந்த 22-07-2006 அன்று சங்கானையில் காலமானார். மான் முத்தையா என்ற பெயர் வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பலராலும் அறியப்பட்ட பெயராக இருந்து வந்தது. உறுதியான உடற்கட்டும் நிமிர்ந்த நடையும் மட்டும் மான் என்ற அடைமொழிக்கு காரணமாக அமையவில்லை. சமூக அநீதிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவும் ஆற்றலும் அவரது இளமைக்காலம் முதல் இருந்து வந்தமை அவரை மனிதர்களிடையே மனிதனாக அடையாளம் பெறவைத்தது.

மான் முத்தையா இளமைக்காலம் முதல் பொதுவுடமைவாதியாகவும் அதன் காரணமாக சமூக விடுதலைப்போராளியாகவும் வாழ்ந்து வந்தவர். பொது வாழ்வில் சங்கானைப் பட்டின சபை உறுப்பினராகவும் பின்பு ஒரு பதவிக் காலத்தின் தலைவராகவும் பதவி வகித்து மக்களுக்குப் பணியாற்றியவர். நா. (மான்) முத்தையா சங்கானையில் அக்காலத்திய மலேயாத் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். அதன் காரணமாக இளைமைக்காலத்தில் மலேசியாவில் கல்வி கற்றவர். ஆங்கிலத்தில் போதிய புலமையும் பெற்றவர். மலையா கம்யூனிஸ்ட் கட்சி கொலனித்துவத்தையும் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வந்த அன்றைய கால கட்டத்தில் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களில் முத்தையாவும் ஒருவராகிக் கொண்டார். அதன் மூலம் அவர் மாக்சிசத்தை ஏற்று பொதுவுடமை இலட்சியங்களைக் சுமந்தவாறு இலங்கைக்கு தனது இளமைக் காலத்தில் திரும்பினார். தான் பிறந்த சங்கானை மண்ணில் தனது வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்.

அக் காலத்தில் வடபுலத்திலே பொதுவுடமை இயக்கம் தோழர் மு.கார்த்திகேசன் மற்றும் ஆரம்ப முன்னோடிகளின் தலைமையில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தது. அப் பொதுவுடமை இயக்கத்தில் இளைஞனாக முத்தையா இணைந்து கொண்டார். அவர் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார தலைமை நிர்வாகிகளின் கீழ் அத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகள் சலுகைகள் இன்றி வேலை செய்து வந்த சூழலில் முதன் முதலில் தொழிற்சங்கம் கட்டும் முன் முயற்சி எடுக்கப்பட்டது. அதனை அங்கு தொழிலாளியாகக் கடமைபுரிந்த பொதுவுடமைவாதியான எஸ்.சந்தியாப்பிள்ளை முன்னின்று செயல்படுத்தினார்.

அத்தகைய தொழிற்சங்க உருவாக்கத்திற்கு முத்தையாவும் ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களது முயற்சியில் பயிலுனராக நியமனம் பெற்ற கே.ஏ. சுப்பிரமணியமும் இணைந்து கொண்டார். இம் மூவரும் ஏனைய தொழிலாளர்களை இணைத்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ஆரம்ப தொழிற்சங்கத்தைதோற்றுவித்து கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. அதன் விளைவு இம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நிர்வா கத்தினால் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கே.ஏ. சுப்பிரமணியம் பொதுவுடமை இயக்கத்தின் வடபுலத்து முழுநேர அரசியல் ஊழியராகினார். முத்தையா வேறு தொழில் தேடினார். பின்பு சுய தொழில் முயற்சியிலும் ஈடுபட்டு திருமணமாகி குடும்ப வாழ்விலும் ஈடுபட்டார். சந்தியாப்பிள்ளை தொடர்ந்து ஒட்டுநராக தொழில் செய்ததுடன் கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டார்.

முத்தையா சங்கானைப் பிரதேசத்தில் பொதுவுடைமை கட்சியை விஸ்தரித்து வாலிபர் இயக்கத்தை கட்டினார். அக் காலத்தில் பல இளைஞர்கள் முத்தையாவின் வழிகாட்டலில் அணி திரண்டனர். அத்துடன் வட புலத்தில் பொதுவுடைமை வாலிபர் இயக்கத்தின் முதலாவது மாநாடு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கும் முத்தையா முன்னின்று செயல்பட்டார். வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பொதுவுடைமை இயக்கம் வளர்ச்சி பெற்ற சூழலில் உள்ளூராட்சி சபைகளுக்கு பல பொதுவுடைமைவாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். சங்கானை கிராமசபையிலும் பின்பு பட்டின சபையாக தரம் உயர்ந்த நிலையிலும் பொதுவுடைமை வாதிகள் உறுப்பினர்களாகினர். அதன் காரணமாக அறுபதுகளின் முற்கூறிலே சங் கானைப் பட்டின சபையின் தலைவராக மான் முத்தையா பதவி பெற்று அப்பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அக்கால கட்டத்தில் சுன்னாகம் காங்கேசன்துறை வல்வெட்டித்துறை கட்டைவேலி யாழ்ப்பாணம் பருத்தித்துறை போன்ற உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக தலைவர்களாக இடதுசாரி செயற்பாட்டாளர்கள் பதவி வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி வட புலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உரிய வழிகாட்டியாக அமைந்தது.
சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அந்த எழுச்சியும் அதன் பாதையில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. உயர்த்தப்பட்டவர்கள் என்போர் மத்தியில் பொதுவுடைமை வாதிகள் இடது சாரியினர் ஜனநாயக சக்திகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டோர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று போராடிய போராட்டங்களாகவே அவை அமைந்து கொண்டன.

அந்த வகையில் சங்கானைப் பிரதேசத்தில் தேநீர் கடைகளிலான சமத்துவம் கோரிய வெகுஜனப் போராட்டத்தில் மான் முத்தையா முன்னணியில் நின்றார். 1967 இல் இடம்பெற்ற அவ் வெகுஜனப் போராட்டத்தில் சமத்துவத்தை மறுத்து நின்ற தமது உறவினர்களான உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றார். அதன் காரணமாக அவர் பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்வெளிக் காயங்களுக்கும் ஆளாகினார். அத்துடன் சங்கானையில் அவரது வீடு சாதி அகம்பாவம் கொண்டவர்களால் அடித்து உடைக்கப்பட்டதுடன் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத உயிராபத்துச் சூழலில் குடும்பத்துடன் இடம்பெயரவும் வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் மான் முத்தையா அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் அடிபணிந்து விடவில்லை. ஒரு பொதுவுடைமைப் போராளிக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பதில் உறுதியுடனும் துணிவுடனும் செயல்பட்டமை அன்றைய நிலையில் முன்னுதாரணமாக அமைந்தது. 1966-71 கால கட்டத்தில் மான் முத்தையா ஏனைய பொதுவுடைமை வாத முன்னோடிகளுடன் இணைந்து வடபுலத்தில் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெற்றன.

தோழர் மான் முத்தையா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து கொள்ளும் இவ்வேளை அவர் விட்டுச் சென்ற பொதுவாழ்வினதும் போராட்டங்களினதும் அடிச் சுவடுகள் தெளிவாகக் கண்முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. அவரது எண்பத்திநாலு வருட வாழ்விற்கு மிகக் கனதியான அர்த்தங்களும் அடையாளங்களும் உண்டு. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் சமூக நீதி மறுப்பு களும் கொண்ட இன்றைய சமூக அமைப்பில் ஒரு பொதுவுடைமைவாதி தனது ஆற்றலைப் பயன்படுத்தி மனிதத்துவத்திற்காகப் போராடுவதில் பொதுவுடைமை பாரம்பரியத்தை இறுதிவரை மான் முத்தையா கொண்டிருந்தார் என்பது அவருக்குரிய தனித்துவச் சிறப்பாக அமைந்து கொண்டது. அதன் காரணமாகவே புதிய - ஜனநாயக கட்சி 2003 இல் தனது 25 ஆவது ஆண்டு விழாவின் போது மான் முத்தையாவையும் ஏனைய ஐந்து தோழர்களையும் மூத்த பொதுவுடைமைப் போராளிகள் முன்னோடிகள் என கௌரவித்து நினைவு விருதுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன முரண்பாடும் தேசிய இனப்பிரச்சினையும் உச்ச நிலை நெருக்கடியாகி நிற்கும் இன்றைய சூழலில் மான் முத்தையா போன்ற பொதுவுடைமைவாதிகளின் உறுதிமிக்க அரசியல் சமூகப் போராட்டங்களின் அனுபவங்கள் படிக்கப்படுவது பன்முகப் பயன்கள் தரக்கூடியனவாகும். மறைந்த நா.முத்தையா அவர்களுக்கு எம் அனைவரினதும் அஞ்சலியும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபமும் உரித்தாகுக.

Thursday, October 19, 2006

நரகபடுகுழியை நோக்கி தமிழர்களின் வாழ்வு

நரகபடுகுழியை நோக்கி தமிழர்களின் வாழ்வு

காந்தரூபன் அறிவுச்சோலை மீது கிபீர் விமானக் குண்டுகள் விழாததையிட்டு தமிழ் நெட் இணையத்தளம் தனது செய்தி குறிப்பொன்றில் தெரிவித்திருப்பது அதையிட்டு கவலையடைந்திருப்பதை புலப்படுத்துகிறது. கிபீர் விமானக் குண்டுகள் காந்தரூபன் அறிவுச்சோலைக்கு அருகாமையில் விழுந்ததாகவும் ஒரு சில பொதுமக்கள் குழந்தைகள் காயமடைந்ததாகவும் அது தெரிவித்திருந்தது. வண்ணங்களில் பலநு}ற்றுக்கணக்கான குழந்தைகளின் படங்களை பிரசுரிப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது போல் அங்கலாய்க்கிறது.

வன்னிபுலத்தில் விமான குண்டுவீச்சில் கொல்லப்பட்ட புலிகளால் தமது படையணிகளுக்கென பலாத்காரமாக கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதை வண்ணங்களில் காட்டி விற்று புலிகளின் கொலை மூலதனத்திற்கு உலகளாவியளவில் உபரி தேடிக்கொடுத்த வர்கள் ,காந்தரூபன் அறிவுச்சோலை குழந்தைகள் சாகவில்லையென இந்த சாவு வியாபாரி கள் அங்கலாய்க்கிறார்கள். இனிமேல் புலிகள் குண்டு வீச்சுக்களில் படுகொலை நிகழுமாறு ஆபத்தான இடங்களில் பிள்ளைகளை இருத்தலாம். பிணக்காட்டு ராசா பிரபாகரனும், போடுற ராசா பொட்டம்மானும் திட்டமிடலாம்.

ஜெனீவாவில் வடக்;கு கிழக்கில் நிகழ்ந்த படுகொலைகளை புலிகள் பட்டியலிடலாம். பெரும்பாலான படுகொலைகள் புலிகளாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் படுகொலைகளும் புலிகளின் பட்டியலில் பிரச்சார நோக்கத்திற்காகவும், கப்ப வரி வசு10லிப் பிற்காகவும் இடம்பெறலாம். தற்போது நடைபெறும் படுகொலைகள் பல எல்லாளன் படையினால் உரிமை கோரப்பட்டும் உள்ளன. மட்டக்களப்பு பகுதியில் பரவலாக கொள்ளைச் சம்பவங்கள் நிகழுகின்றன. இன்று செல்வநாயகபுரத்தில் உள்ள வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை பொலிசாருக்கு அடையாளம் காட்டியதற்காக குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவங்களில் புலிகளே பிரதானமாக சம்பந்தப்பட்டிருப்பதாக அரசல் புரசலாக சங்கதிகள் கசியத் தொடங்கியுள்ளன.

புலிகளின் நிதர்சனம் ஒலி, ஒளிபரப்பு கோபுரம் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்தது தொடர்பாக புலிகள் விசனமடைந்துள்ளனர்.அது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலென கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறக்கூடிய பெரிய பகிடியை புலிகள் விட்டுள்ளார்கள். ஊடக சுதந்திரம் என்பது என்னவென்றே தெரியாத ஊடக கைநாட்டுக்காரர்கள் இவ்வாறு சொல்வதையிட்டு தமிழ் மக்கள் சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் இருக்கிறார்கள்.

நிதர்சனம் யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் பொருட்கள் போனால் தாக்குதல் நடத்துவோம், மக்கள் பிரயாணம் செய்தால் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல்களை விடுவதற்கும் யாழ்ப்பாணத்தில் கூட்டுறவு சங்க கடைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது முதலாவது கூட்டுறவுச் சங்கம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது இரண்டாவது சங்கம் கொள்ளையடிக்கப்பட்டது என்று மனமகிழ் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு திரித்தும், உருட்டியும், புரட்டியும், பொய் புரளிகளை அவிழ்த்து விடுவதற்குமே பயன்பட்டு வந்தன. வன்னி மக்களை உலகம் தெரியாதவர்களாக பாமரர்களாக வாழ வைப்பதற்குமே அது எப்போதும் சேவகம் செய்தது.

பாடசாலை மாணவர்களின் இறப்பையிட்டு குது}கல பிரச்சாரம் செய்வதும், பாடசாலைகளுக்கு மாணவர்களை செல்லாமல் தடுப்பதற்கும் புலிகளின் ஜனநாயக விரோதப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கும் தற்கொலை குண்டு பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் ஏற்றிப் போற்றுவதற்கும் பெரும் பிரச்சார பங்களிப்புச் செய்து வந்தது. இப்போது அந்தப் பங்களிப்புக்களுக்கு தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளதென்று பிணக்காட்டு ராசாவின் திருக்கூட்டத்தார் அங்கலாய்க்கிறார்கள்.

இதற்கிடையே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது பற்றி இப்போது இவர்கள் கூக்குரலிடுகிறார்கள். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பின்னர் அதனடிப்படையில் வடக்கு கிழக்கை இணைத்து அதற்காக தம்மை அர்ப்பணித்த வடக்கு கிழக்கின் ஜனநாயக வழிக்கு வந்த கட்சிகளை சேர்ந்தோரை கொன்றொழித்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சகல பெறுபேறுகளையும் நாசமாக்குங்கள், என்று பிரேமதாசாவின் காலடியில் மண்டியிட்டு நின்ற புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிதாமகர் ராஜீவ்காந்தி அவர்களை தற்கொலை குண்டுதாரி மூலம் படுகொலை செய்த புலிகள் இப்போது வடக்கு கிழக்கு பிரிவு தொடர்பாக பாசாங்கு பண்ணுகிறார்கள்.

வடக்கு கிழக்கு பிரிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான தார்மீக தகுதி மாற்று தமிழ் கட்சிகளுக்குத்தான் உண்டு. புலிகள் உண்மையில் கடந்த கால் நு}ற்றாண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றிருக்கக் கூடிய சகல பலாபலன்களையும் நாசம் செய்திருக்கிறார்கள். வாகரையில் பல்லாயிரம் மக்கள் மரங்களின் கீழ் வாழும் நிலையையும் யாழ் குடாநாட்டின் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார கஷ்டங்களுக்கும் அவர்களே வழிவகுத்தார்கள். ஹபரணையில் நிராயுதபாணிகளாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதன் மூலம் பல தெற்கின் ஏழைக்குடும்பங்களின் வீடுகளை சோகத்தில் மூழ்கடித்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தி இனவன்முறையென்ற நெருப்பில் தமிழ் மக்களை பலியிடுவதற்கான காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஹபரணை தாக்குதல் மூலமும் காலி துறைமுகத் தாக்குதல் மூலமும் தாம் வீராதி வீரர்கள் சு10ராதி சு10ரர்கள் என்ற மிதப்பில் புலிகள் இருக்கலாம். பாமரத் தமிழர்களும் அந்த மிதப்பில் இருக்கலாம். இதன் விபாPத விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது பகுத்தறிவுள்ள எந்த மனிதனுக்கும் விளங்கும்.
இத்தகைய தாக்குதல்களால் எந்த விமோசனமும் ஏற்படப்போவதில்லை. கடந்த கால் நு}ற்றாண்டுகளில் புலிகள் இதுபோன்ற எத்தனையோ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். இத் தாக்குதல்களால் தமிழர்களின் வாழ்வும் இலங்கையின் அனைத்து மக்களின் வாழ்வும் நரகப்படுகுழியை நோக்கியே இட்டுச்செல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கையடையவும், துரிதமாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென எண்ணு வதற்குமே வழிவகுக்கும்.

நாசகார சக்திகளான புலிகளுக்கு இதுவொன்றும் புரியப் போவதில்லை. பயங்கரவாதம் பற்றிய விழிப்புணர்வு அதனை உலக வரைபடத்தில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகின் நாகாPகமான அத்தனை சமூகங்களிடமும் ஏற்பட்டுள்ளது. உலகில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் புலிகள் முன்னணியில் இருப்பதை அமெரிக்காவின் நியூஸ் வீக் சஞ்சிகை சில மாதங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை உல்லாச பயணத்துறையை நாசமாக்குவதை இலங்கை முழுவதும் பாதுகாப்பில்லாத ஒரு சு10ழ்நிலையொன்று ஏற்படுவதை நாகாPக உலகம் ஏற்றுக்கொள்ளாது. அருவருப்புடனேயே அதனை பார்க்கும்.

இலங்கையின் பொருளாதார கட்டமைப்புக்கள் சீர்குலைக்கப்படுவது தற்போது உணவுப் பற்றாக்குறை, இடம் பெயர்வு, அகதிநிலை என வாழும் மக்களின் வாழ்வில் மேலும் மேலும் துன்பங்களையே ஏற்படுத்தும். ஒருவிதமான பாதிப்பும் இல்லாமல் ஐசுவரியங்களுடன் வாழும் முட்டாள் தமிழர்களுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சு10ழ்நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
நாளும் பொழுதும் படுகொலைகளுக்கு மத்தியில் மோதல்களுக்கு மத்தியில் வாழும் தமிழர்களுக்கு கண்ணீரும், மரநிழலும் தான் மிச்சமாகும். இதைப்பற்றி பிணக்காட்டு ராசா பிரபாகரனுக்கோ அவரது திருக்கூட்டத்தாருக்கோ எந்த அக்கறையும் கிடையாது. சராசரி தமிழரின் கண்ணீரும், மரணமும் இவர்களின் உப்பரிகையில் வாழ்பவர்களுக்கு லாபகரமானதே. டப்ளினிலும், ஒஸ்லோவிலும் தமது பிள்ளைகளை கற்க வைப்பவர்களுக்கு ஏழைத் தமிழ் குழந்தைகளின் சாவு ஒரு பொருட்டல்ல. இவர்களது உப்பரிகை வாழ்க்கையின் மூலதனமது.
தமிழர்கள் மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆக்கபூர்வமான சிந்தனை செயற் பாடுகளே தமிழர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் சமூகங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவதில் புலிகள் கால் நு}ற்றாண்டுகால பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அனுராதபுரம் போதிமரத்தின் கீழ் வழிபாட்டில் ஈடுபட் டிருந்த சிங்கள மக்களை படுகொலை செய்ததில் இருந்து காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலைகளிலிருந்து மூது}ர் மக்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தது நிராயுதபாணிகளான படைவீரர்களை கொன்றுதள்ளியது வரை இன மோதல்களுக்கான களத்தை அமைப்பதற்கு புலிகள் மேற்கொண்ட சதிநாசகார வேலைகளுக்கு எண்ணிறந்த உதாரணங்களை குறிப்பிடலாம். தமிழ் மக்கள் மீது இடியாகத் துன்பம் இடையறாது இறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென பிணக்காட்டு ராசா பிரபாகரன் எதிர்பார்க்கிறார். அப்போதுதான் அவர்களின் பிழைப்பு நடக்கும். உண்மையில் எமது பிரதேசங்களில் ஆயுதங்களற்ற, வெடிமருந்து வீச்சமற்ற, மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழும் காலமொன்று உருவாக வேண்டும்.

அகதி தமிழன்

Wednesday, October 18, 2006

'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்...


'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்; விரிந்துள்ள அவர்களின் வலைப்பின்னலும்

டொமினிக் வைட்மன்
2006 ஒக்டோபர் 18

(Global Politician இணையத்தில் வந்த கட்டுரை. தமிழாக்கம:;. இலங்கை சமாதானச்செயலகம்)

லண்டனில் அமைந்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான LLSS அமைப்பின் பேச்சாளராக டொமினிக் வைட்மென் செயற்படுகிறார் - இவ்வமைப்பு முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் மொழித்தேர்ச்சி பெற்றோர் முதல் வங்கியாளர்களை உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தடயங்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களைக் கொண்ட சர்வதேச வலைப்பின்னலொன்றாகும்.

2001 பெப்ரவரி 28ஆம் திகதி ஐக்கிய இராஜதானியில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும் அல்-குவைதா இயக்கத்துக்கும் இடையில் தளிர்விட்டு வரும் தொடர்புகள் பற்றி லண்டனில் உள்ள சர்வதேச உத்தி ஆய்வுகள் நிறுவனத்தின் வருடாந்த வெளியீடு '2005- 2006 இராணுவ சமநிலை" குறிப்பிட்டிருந்தது. இது கொள்கை அடிப்படையிலான தொடர்பாகவல்லாது, கள்ளக்கடத்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பதாகவிருந்தது என இராஜதந்திரிகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் இரகசியமாகப் பின்பு தெரிவித்தனர். இப்பல்வேறுபட்ட விடுதலைப்புலிகள் மற்றும் அல்-குவைதாவுக் கிடையிலான தொடர்புகளை நிபுணர்கள் இப்போது ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். கடல்சார்ந்த கொடுக்கல் வாங்கல்களிலும் இத்தொடர்பு நிலவுகிறது எனவும் நம்பப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் ஏந்தியிருக்கும் தமிழ் புலிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குத் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பாவித்த முதலாவது பயங்கரவாத அமைப்பாகும். கடந்த 23ஆண்டுகளில், அது இலங்கையில் பல அரசியல் தலைவர்களையும், முன்னாள் இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்துள்ளதோடு, அநேகமாக அப்பாவிப் பொதுமக்களை உள்ளிட்ட சுமார் 60,000உயிர்களை பலிகொள்வதிலும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2006 ஆகஸ்ட் 21ஆம் திகதி, பிரித்தானியப் பிரஜையான டாக்டர் முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் அவரது மனைவி டாக்டர் புஷ்பம்; ஆகிய இருவரையும் நிய10யோர்க்கில் வைத்து எப்பிஐ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் இனை ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்க நீதித் திணைக்கள அதிகாரயொருவருக்கு 01மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி செய்த ஏவுகணைகளையும் பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பம் தொழில்நுட்பத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காகக் கொள்வனவு செய்வதற்கு வசதிபடைக்க முயன்ற குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.

ஐக்கிய இராஜதானியில் பரந்து வாழும் தமிழ் சமூகத்திடம் இருந்து பயமுறுத்தியும் அதட்டியும் பெறப்படும் மிக அதிக அளவிலான பணத் தொகை பற்றி இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்டது பல அவதானிகளின் கண்களைத் திறந்து விட்டுள்ளது. இப்படியாக வசூலிக்கப்படும் பணம் ஆட்களைக் கொண்டு இலங்கைக்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்படுகிறது அல்லது மூன்றாம் நாடுகளில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பாவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராஜதானியில் பணம் வசூலித்தல் : முறை பற்றிய விடயம் சார்ந்த ஆய்வு

'இறுதி யுத்தத்திற்காகப் பணம் திரட்டல் - பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்கு எதிரான விடுதலைப்புலிகள்pன்; பயமுறுத்தல் (ய10.கே மற்றும் கனடாவில் விடயம் சார்ந்த ஆய்வொன்று)" என்ற தலைப்பிலான ஆய்வொன்றை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிய10மன் ரைட்ஸ் வொச் இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டது. இவ்வாய்வின் படி, பல குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிடம் இருந்து 2000ய10ரோ முதல் 100,000 ய10ரோ வரையிலான தொகைகள் கேட்கப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் முகப்பு அமைப்பான 'பிரித்தானிய தமிழ் இயக்கம்" நெட்வெஸ்ட் வங்கியிலுள்ள அதன் கணக்குக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்போது அவர்கள் கேள்விக்கொத்தொன்று மூலம் தமிழ் சமூகத்தினரிடம் அவர்கள் குடும்ப விபரம், வருமானம், இலங்கையில் அவர்கள் குடும்பம் பற்றிய விவரம் போன்றவற்றைக் கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். கொடுப்பனவுகளைச் செய்ய மறுத்தால் பின்வரும் விளைவுகளில் ஏதுமொன்றை எதிர்நோக்க நேரிடும். இலங்கையிலுள்ள உறவினர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவார். பணம் கொடுக்க மறுப்பவரே கொலை செய்யப்படுவார்.

சுருக்கம்

விடுதலைப்புலிகள் 2001 இல் ஐக்கிய இராஜதானியில் தடை செய்யப்பட்டதானது அவர்களின் நடவடிக்கைகளில் ஒரேயொரு மாற்றத்தையே விளைவித்தது. அவர்களது செயலகம் மற்றும் முகப்பு அமைப்புக்களின் பெயர்களை அவர்கள் மாற்றி வழமை போல் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.இன்று அவர்கள் கடன் அட்டைக் களவு முதல் கள்ளப் பணத்தைச் சுத்திகரித்தல், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் போன்ற இன்னோரன்ன துறைகளுக்கு வியாபித்துள்ளதோடு, இலாபகரமான கப்பல் போக்குவரத்துப் பின்னலொன்றையும் பேணி வருகின்றனர். முக்கியமாக ஐக்கிய இராஜதானி மற்றும் கனடாவில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அபகரித்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைளின் மூலம் ஐக்கிய இராஜதானியில் இருந்து மாத்திரம் ஆண்டொன்றுக்கு சுமார் 10மில்லியன் ய10ரோ வந்து சேர்கிறது.

ஐக்கிய இராஜதானி நகரப் பொலிஸ் பிரிவின் பயங்கரவாதத்துக்கு எதிரான கட்டளைப் பீடத்தின் கூற்றுப்படி, இந்நடவடிக்கைள் பற்றி அவர்கள் அறிந்திருந்த போதிலும், 'இஸ்லாமிய பயங்கரவாதம்" பற்றிக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஆளணியின் குறைவு காரணமாக முட்டுக்கட்டைகளை எதிர் நோக்க அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயங்கரவாதம் எனப் இப்படிப் பிரித்துப் பார்ப்பதனால், ஐக்கிய இராஜதானி, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இன்னும் பல நாடுகள் தடைசெய்துள்ள பயங்கரவாதக் குழுக்கள் பொதுவாக ஐக்கிய இராஜதானியில் தடையின்றிச் செயற்படுவது வருந்தத் தக்கதொரு விடயமாகும்.

பிரித்தானிய காட்டும் சகிப்புத் தன்மை பயங்கரவாதத்தைப் போசிக்கிறது.

இலங்கையில் தமிழ் புலிகள் மேற்கொண்டு வரும் கிளர்ச்சியினால் ஏற்பட்ட சச்சரவுகள் இப்போது பிரித்தானியாவுக்கும் வியாபித்து, பல பயங்கரத் தாக்குதல்களுக்கு அது வழிவகுத்துள்ளது. ஐக்கிய இராஜதானியில் வசிக்கும் தமிழ் சமூகம் தொடர்புபட்ட 16 கொலைகள் 2005 ஆம் ஆண்டில் மாத்திரம் நேர்ந்திருக்கின்றன,சர்வதேச ரீதியாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் திரு. சார்ல்ஸ் அன்ரனி பெல்பாஸ்ட் பல்கலைக் கழகத்தில் இப்போது கல்வி கற்கும் மாணவன் என்பது கவனிக்கத்தாகும். இப்பல்கலைக் கழகத்துக்குச் சேர்வதற்கு அவருக்கு ஐஆர்ஏ இன் மார்ட்டின் மக்குயின்னிஸ் உதவியுள்ளார். அதற்கான காரணம், இலங்கையில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக 'நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு நடவடிக்கை" என்பதாகும்.

இன்னும் மோசமானது.

1995 ஆம் ஆண்டு முதல், மூன்று விடுதலைப்புலிகளின் பிரத்தானிய தரும ஸ்தாபனங்களும் தமிழர் வீடமைப்பு இயக்கமும் 8மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சேகரித்தன. இவை ஐக்கிய இராஜதானியில் தர்ம ஸ்தானங்கள் மற்றும் ஒரு வீடமைப்பு இயக்கம் என்று பதிவு செய்யப்பட்டு சட்டப்படியான அந்தஸ்தை அவை பெற்றிருந்ததால், உள்நாட்டு மற்றும் மத்திய அரசாங்கத்தின் மான்யங்களை அவை பெறக்கூடியதாக இருந்தது.

1995ஆம் ஆண்டு தொடக்கம் வரி விலக்களிப்புடன் புனரமைப்புக்கான தர்மக்கொடை என்பதன் மூலம் பிரித்தானியாவில் இருந்து விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்கு சுமார் 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் போய்ச் சேர்ந்திருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இக்குழுக்கள் ஓரளவு தொண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதில் சந்தேகமில்லை என்பதோடு, வன்னிக் கானகத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் அகதிகளுக்கான நிவாரண உதவியை வழங்குகிறது. 'ஹொட் ஸ்பிரிங்" என்ற சஞ்சிகைக்கு எழுதிய விடுதலைப்புலிகளின்; செயற்பாட்டாளர் சார்ல்ஸ் சோமசுந்தரம், இந்த தர்மங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் சிந்தனைப் போக்கில் உருவானவையே எனக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய உதவி அமைப்புக்களான ய10என்எச்சிஆர், ஐசிஆர்சி, ஒக்ஸ்பாம் போன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, இவ்வாறான நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன (பிரித்தா னியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற 2.5மில்லியன் ய10ரோவின் சிறியதொரு அளவேயாகும்). இச்சர்வதேச அமைப்புக்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கும் விடுதலைப்புலிகளினருக்கும் இடையேயுள்ள தொடர்பினை அறிந்திருப்பதால், அவை தமிழர் புனர்வாழ்பு கழகத்தை விட்டு விலகிச் செல்கின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் தர்ம நடவடிக்கைகள் அவர்களது முக்கிய நோக்கமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதி சேர்ப்பதை மறைப்பதற்கு மேற்கொள்ளப்படுவதாகும் என பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பற்றிய கனேடிய செனட் சபைக் குழுவின் பாதுகாப்பு நிபுணர் டொன் கிரேசி குறிப்பிடுகிறார். வன்னிப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் சிறிதளவு நடவடிக்கைகளைப் பலவாறாகப் பெரிசு படுத்தி விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஊடகங்கள் பரப்புரையொன்றை மேற்கொண்டு, வன்னிக் காட்டுப் பகுதியில் செயற்படும் மிகப் பெரிய அரச சார்பற்ற அமைப்பு தாங்களே என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்குக் காட்ட முனைகிறது. இப்படிச் செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்காக மேலும் நிதிகளைச் சேகரிக்க அவர்கள் விளைகின்றனர்
www.Thenee.com

Tuesday, October 17, 2006

இது எப்படி இருக்கு...?


இது எப்படி இருக்கு...?

ஆனந்தசங்கரி மீது சீறிப்பாயும் சிவசேகரப் புலி

ஆனந்தசங்கரி மீது சீறிப்பாயும் சிவசேகரப் புலி
- குளக்கோட்டன்

ஐ.தே.கட்சியைச் சேர்ந்த வர்த்தகரான எஸ்.பி. சாமி என்பவரால் வெளியிடப்படும் ~தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் ~மறுபக்கம் என்னும் பகுதியில் கோகர்ணன் என்னும் பெயரில் பேராசிரியர் சி. சிவசேகரம் பத்தி ஒன்றை வாரவாரம் எழுதிவருகின்றார் (திருகோணமலைக்கு கோகர்ணம் என்ற பெயரும் முன்னைய காலத்தில் வழங்கப்பட்டதால் அவ்விடத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவசேகரம் அப்பெயரை புனைபெயராக கொண்டுள்ளார்)
தன்னையொரு து}ய்மையான மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் சிவசேகரம் இப்பத்தியில் எழுதிவரும் விடயங்களோ மார்க்சியக் கண்ணோட்டத்திற்கு முற்றிலும் நேர் எதிரானவையாகும். அவரது எழுத்தின் சாரம்சம் புலிப் பாசிசத்துக்கு ஆதரவு, தமிழ் ஜனநாயக சக்திகள் மீது அவது}று, இடதுசாரிக் கட்சிகள் மீது வசைபாடுதல், மனித உரிமை அமைப்புக்கள் மீது கண்டனம் என்பவையாகும். குறிப்பாக ருவுர்சு(து) என்னும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பு மீது காரசாரமான கண்டனங்களை கோகர்ணன் என்னும் பெயரில் தெரிவித்து வருகின்றார். சிவசேகரம் பல ஆண்டுகளாக பல்கலைக்கழக பேராசிரியராகவும் இடதுசாரி புத்திஜீவியாகவும் இருந்தபோதிலும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில், அவரிடம் கற்ற மாணவர்கள் சிலர் உட்பட இந்த மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பிற்காக காத்திரமாக செயற்படுவது அவருக்குப் பொறுக்க முடியாததாக இருக்கின்றது.
சிவசேகரத்தின் எழுத்துக்கள் மார்க்சிய அடிப்படையிலான ஆக்கப10ர்வமான விஞ்ஞானப10ர்வமான தர்க்க hPதியான விமர்சனங்கள் அல்ல. எவராவது மீது அல்லது ஏதாவது ஒன்றின் மீது வசைபாடுவது அவரது எழுத்தின் பாணியாகும். அந்த வகையில் அக்டோபர் 01ம் திகதியின் தினக்குரல் இதழின் மறுபக்கம் பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
ஆனந்தசங்கரிக்கு ஐ.நாவின் யுனெஸ்கோ விருதி வழங்கி கௌரவித்ததை பொறுக்கமாட்டாமல் கரித்துக்கொட்டியவர்கள் புலிகள் மட்டுமல்ல சிவசேகரமும் கூட என்பதை தனது து}ற்றலில் வெளிக்காட்டியுள்ளார்.
ஆனந்தசங்கரி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இலங்கை இந்திய அரசுகளின் எடுபிடி என்றும் சாரப்பட சிவசேகரம் தனது அவது}றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆனந்தசங்கரி தமிழ்ப் பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து அரசியல் செய்ய முடியாமல் பலவந்தமாக தடுத்தவர்கள் யாரென்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனந்தசங்கரி மட்டுமல்ல வேறெந்த தமிழ்க் கட்சியோ இடதுசாரிக் கட்சியோ ஏன் சிவசேகரத்தின் புதிய ஜனநாயகக் கட்சியோ புலிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் வடக்கு கிழக்கில் சுதந்திரமாகச் சென்று அரசியல் செய்ய முடியுமா என்பதை சிவசேகரம் ஒரு முறை கூறட்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஆனந்தசங்கரியின் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமலும் கள்ளவோட்டு போட்டு தமது பினாமிகளான தமிழ் கூட்டமைப்பினரை வெற்றிபெற வைத்ததும் புலிப் பாசிசவாதிகளின் அடாவடித்தனம் என்பதை சாதராண தமிழ் மக்கள் முதல் ஐரோப்பிய ய10னியன் தேர்தல் கண்காணிப்புக் குழுவரை அறிந்திருக்க, இந்த மெத்தப்படித்த பேராசிரியர் அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. து}ங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் து}ங்குபவர்கள்போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதற்கு சிவசேகரம் ஒரு உதாரணம்.
ஒரு மனிதனின் நடத்தைதான் அவனது தகுதி நிலையைத் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் ஆனந்தசங்கரியின் வாழ்க்கையில் சில எதிர்மறை அம்சங்கள் இருப்பினும் அவரது வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்கு சேவையாற்றுவதிலும் தமிழ் மக்கள் வாழ்வில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் செலவிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ஆனந்தசங்கரி கிளிநொச்சி மாவட்டத்தின் மிகபின்தங்கிய ப10நகரிப் பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் முழுநேர அரசியலுக்காக ஆசிரியர் தொழிலைத் துறந்து கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் கீழ் மட்ட நிலையில் வாழ்ந்த ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் பகுதியில் கரைச்சி கிராமசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகவும் வந்து அப்பிரதேச மக்களின் தேவைகளை முடியுமானவைர நிறைபேற்றினார். கிளிநொச்சியில் முதல் முதலாக பட்டினசபை அமைப்க்கப்பட்டபோது அதன் தலைவராகவும் சேவைபுரிந்தார்.
1966 ஜனவரி 8ம் திகதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி கூட்டரசாங்கத்துக்கு எதிராக இனவாத அடிப்படையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் சமசமாஜக் கட்சியும் பங்குபற்றியதால் அக்கட்சியைவிட்டு விலகி தமிழ் காங்கிரசில் இணைந்து 1970ல் பாராளுமன்ற உறுப்பினரானதுடன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராகி இன்று அதன் தலைவராகவும் இருக்கின்றார்.
பிற்போக்கு தழிழ் தேசியவாத அரசியல் அணியில் அவர் இணைந்தபின் அவரால் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது உண்மையே. பிற்போக்கு தமிழ் தலைமையின் மலட்டு வாய்ச்சவடால் அரசியல் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தராதது மட்டுமின்றி அவர்களை இன்றைய அவல நிலைக்கு இட்டுவந்துள்ளதையும் ஆனந்தசங்கரி இன்று நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலத்தில் சாதித்த முக்கியமான ஒரு சாதனை கிளிநொச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான தனிமாவட்ட கோரிக்கைக்கு நடைமுறை வடிவம் கொடுக்கவைத்ததே. (தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தமிழரசுக்கட்சியின் தலைமை கிளிநொச்சி மக்களின் நிர்வாக பரவலாக்கலான தனிமாவட்டக் கோரிக்கையை தீவிரமாக எதிர்த்தது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்)
ஆனால் ஆனந்தசங்கரி இன்று தன் அரசியல் வாழ்வின் கடைசி காலகட்டத்திலே இதுவரை தழிழ் மக்களுக்கு ஆற்றாத பெரும்பணியை ஆற்றிவருகின்றார் என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் வாழ்வை இன்று சகல வழிகளிலும் அழித்து நாசமாக்கிவருகின்ற புலி மாபியா பாசிசத்தை தயவு தாட்சணியம் இன்றி எதிர்ப்பதில் ஆனந்தசங்கரி இன்று ஒரு முன்னணிப் போராளியாக திகழ்கின்றார். இதற்காக அவர் பாராளுமன்ற உறுப்பினராக வாய்ப்பை இழந்தது மட்டுமின்றி எந்த நேரமும் பெரும் உயிராபத்தையும் புலிகளால் எதிர்நோக்கிவருகின்றார். இதற்காக ஆனந்தசங்கரிக்கு ஒரு யுனெஸ்கோ விருதல்ல ஓராயிரம் விருதுகளைக்கூட வழங்கலாம்.
ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல ஆனந்தசங்கரியும் தனது பதவியையும் உயிரையும் பாதுகாப்பதற்காக புலிகளின் காலடியில் மண்டியிருக்கலாம் ஆனால் தன்மானமும் மனச்சாட்சியும் உள்ள ஒரு மனிதர் என்ற வiயில் அவர் அவ்வாறு செய்யவில்லை. புலிகளின் கொடூரச் செயல்களை எதிhக்கும் தெளிவும் துணிவும் அவருக்கு கைவர பெற்றமைக்குக் காரணம் அவரது ஆரம்பகாலத்தில் அத்திவாரமாக அமைந்த இடதுசாரி அரசியலே இதையாரும் மறுத்துவிடமுடியாது.அதேநேரத்தில் அவரை புழுதிவாரித் து}ற்றும் சிவசேகரம் மக்களுக்காக எதனைச் செய்தார் என்பதற்கு உருப்படியான உதாரணம் எதுவுமே இல்லை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1970களில் சமையல் அறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது அதை முறியடிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாண்வெட்டிக்கொடுத்த போலி தொழிலாளர் நண்பன், நாட்டில் தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறை தீவிரமடைந்த போது இங்கிலாந்து சென்று வருடக்கணக்கில் தங்கியிருந்த வேஷதார தமிழ்த்தேசியவாதி, கொம்ய10னிஸ் கட்சியிலிருந்தபோது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி 1977 பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தல் வேலை செய்த கொள்கைப்பற்றாளன், யாழ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் தொடங்குவதை எதிர்த்த (காரணம் எதுவாக இருப்பினும்) பிரதேசவாதி, படுபிற்போக்கு அரசியல்வாதி குமார்பொன்னம்பலத்துக்கு அஞ்சலிக்கட்டுரை தீட்டிய தர்க்க சமரசவாதி என சிவசேகரத்தின் அரசியல் செயற்பாடுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
ஆனந்தசங்கரியின் அரசியல் பணிகளில் பத்து வீதம்கூடத் தேறாத, மக்கள் மத்தியில் ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாத சிவசேகரம் போன்றவர்கள் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல் குரைப்பது புதுமையானதோ முதற்தடவையன்றோ அல்ல. எல்லா ஏட்டுச் சுரைக்காய்களும் கறிக்குதவாதவைதான்.
(தமிழரசுக் கட்சியில் தனது அரசியலை ஆரம்பித்து, கொம்ய10னிஸ் கட்சியில் புகுந்து அதை சீர்குலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக ~நிர்தன பந்திய பக்ஷய கட்சி என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் புதிய ஜனநாயக் கடசியில் இணைந்து அக் கட்சியையும் இழுத்துக்கொண்டு புலிகளின் கூடாரத்தில் நுழைந்த சிவசேகரத்தின் கதையை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

Monday, October 16, 2006

புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


புலிகளின் மூர்க்கத்தனமான முன்னரங்க தாக்குதல்
129 படையினர் பலி,283 இற்கு மேற்பட்டோர் படுகாயம்
புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


-அர்ச்சுனன்

படையினருடனான பல மோதல்களில் தமது நு}ற்றுக்கணக்கான போராளிகளை இழந்துடன் மாவிலாறு, மூது}ர், சம்பூர், முகமாலை முன்னரங்க காவல் ஆகிய பகுதிகளை இழந்த புலிகள் கடும் விரக்திக்கும், கௌரவ இன்மைக்கும் உள்ளாகியிருந்தார்கள். இதனை ஈடு கட்டுவதற்கு புலிகளின் உயர்மட்ட தலைமை எத்தனை போராளிகளை இழந்தேனும் அரச படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிப்பார்கள் என நான் எனது கடந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தேன். அது மட்டுமல்லாது புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிக்காது போனால் ஆனையிறவு முகாமினை படையினரிடம் இழக்கவேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தேன். அதே போன்று புதன் கிழமை (2006-10-11) நாகர்கோவில், முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க காவல் அரனு}டாக முன்னேறிய படையினருக்கு புலிகள் விளைவித்த உயிர்சேதம் படையினரை குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காவது ஆனையிறவினை கைப்பற்றும் நோக்கத்தினை கைவிடவைத்திருக்கின்றது. அரச தரப்பின் தகவலில் 129படையினர் கொல்லப்பட்டு 283படையினர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 74படையினரின் உடல்கள் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மேர்பார்வையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினு}டாக படையினரிடம் ஒப்படைப்பதற்காக ஒமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது அந்த உடல்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது இவ்வண்ணம் இருக்க படையினரின் மேலும் 42உடல்கள் தம்;வசம் இருப்பதாகவும் அவைகள் உருக்குலைந்த நிலையில் இருப்பதினால் அவைகளை ஒப்படைக்கமுடியாது என்றும் ஆகவே தாம் அந்த உடல்களை தகனம் செய்தாக புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஒரு முற்றிலும் நம்பகதன்மை இல்லாத ஒரு அறிவிப்பாகும். தம்மிடம் இருந்த படையினரின் 74 உடல்களை உலகத்திற்கு பெருமையோடு காண்பித்த புலிகள் அந்த 42உடல்களை காண்பிக்க முடியாது என கூறுவது சற்று அதிகம்தான். இருந்த போதும் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதின் பின்னர் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்ட சமர் இதுவாகும். இந்த தாக்குதலில் கிடைத்த மனபலத்தோடு புலிகள் வியாழக்கிழமை (2006-10-12) காலை கிழக்கில் உள்ள விசேட அதிரடி ப்படையினரின் (ளுpநஉடைய வுயளம குழசஉநஇளுவுகு) கஞ்சிக்குடியாறு முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படையினரால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதோடு நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் விசேட அதிரடிப்படையினரின் முகாமினை புலிகள் வென்றெடுத்தில்லை என்பது குறிப்பிடதக்தாகும்.

இரு பகுதியினருக்கும் தேவைபடும் இராணுவ வெற்றிகள்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில கிழக்கு பிரதேசங்களை மீட்டெடுத்த அரச படையினரின் அவசரமே முகமாலையில் அவர்களுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. புலிகளை படிப்படியாக பலவீனப் படுத்துவதினை விடுத்து, அரசு தெற்கில் அரசியல் நடத்துவதற்கு ஏதுவாக ஆனையிறவினை அவசரப்பட்டு கைப்பற்ற முனைந்ததின் பலாபலனே இந்த அதிக உயிரிழப்பிற்கு காரணமாகும். இரு பகுதியினரும் தமது இழப்புக்களை முதலில் குறைத்து கூறிவிட்டு பின்னர் படிப்படியாக தமது இழப்புக்களை ஒத்துக்கொள்வது வழமையாகிவிட்டது. முதலில் இதனை புலிகள் செய்து காட்டினார்கள், தற்பொழுது அரசு அதனை பின்பற்றுகிறது. கடந்த ஓகஸ்ட்மாதம் மூது}ர் கிழக்கில் உள்ள அனைத்து அரச இராணுவ முகாம்களும் தமது கட்டுப்பாடு பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் படையினரின் 10 உடல்கள் தம்வசம் இருப்பதாகவும் புலிகளின் இராணுவ பேச்சாளர் கூறினார். அவையெல்லாம் பொய்யென பின்னர் தெரியவந்தது. அதே போன்று படையினரும் முகமாலையில் 32படையினரே கொல்லப்பட்டதாக கூறினார்கள். தற்பொழுது 74 படையினரின் உடல்களை பெற்றுக்கொண்ட பின்னர் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். முதலில் கூறப்படும் எண்ணிக்கைகள் பத்திரிகையில் வெளிவரும் பொழுது மக்கள் அதனையே முதலில் நம்புகின்றார்கள். அது உண்மையா அல்லது அந்த எண்ணிக்கையினை மாற்றி கூறினார்களா என்பதையெல்லாம் அவதானித்து ஒப்பீடு செய்வதற்கு மக்களுக்கு நேரம் இருப்பதில்லை இதனால் அரசும், புலிகளும் முதலில் தமக்கு சாதகமான எண்ணிக்கைகளை கூறிவிடுகின்றனர். பின்னர் மக்களை ஏமாளிகளாக்குகின்றனர்.

முகமாலையில் முதலில் 5போராளிகளே கொல்லப்பட்டதாக கூறிய புலிகள் பின்னர் 11 போராளிகள் என கூறினார்கள். இறுதியாக தமது தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 30பேர் காயம் அடைந்துள்ளதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் .அரச தரப்பில் 129படையினர் கொல்லப்படும் பொழுது புலிகள் தரப்பில் குறைந்த பட்சம் 70 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். 150 பேர் வரையில் காயம் அடைந்திருக்க வெண்டும் படையினர் 283 பேர் காயம் அடைந்திருப்பதாக அரசு கூறுகின்ற பொழுது குறைந்த பட்சம் 500 படையினர் காயம் அடைந்திருக்க வேண்டும். காயம் அடைந்தவர்களில் பலர் மீண்டும் இராணுவத்தில் செயல்பட முடியாத அளவிற்கு அங்கங்களை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. கொழும்பில் வீதிகளில் காவல் காக்கும் படையினரை போல் அல்லாது வட கிழக்கில் யுத்த முனையில் போரிடும் படையினர் சிறப்பு பயிற்;சி பெற்ற படையினர் ஆகும். இவர்களில் 129பேரை படையினர் இழந்தமையினை சாதாரணமாக எடுக்கமுடியாது.அ ரசு தமது தரப்பில் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் பொழுது குறைந்த பட்சம் 200 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

முன்னரங்க காவல் அரண் மோதல் ஆரம்பம்

கடந்த சிலவாரங்களாக புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி முகமாலை, நாகர்கோவில், கிளாலி ஆகிய முன்னரங்க காவல் அரண்களில் இருந்து எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வந்தாகவும் தமது தற்பாதுகாப்பிற்காக அந்த பீரங்கி நிலைகளை அழிப்பதற்கு இராணுவம் முயன்றதாக அரச இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் படையினர் ஆனையிறவு முகாமினை கைப்பற்றுவதற்கான ஆயத்;தங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அவதானித்த புலிகள் தமது முன்னரங்க காவல் அரண்களை பலப்படுத்தும் முகமாக மேலதிக போராளிகளை கொண்டுவந்து நிறுத்தியதோடு இராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருந்தனர். புலிகள் ஓகஸ்ட்மாதம் 11ஆம் திகதி படையினரின் முகமாலை முன்னரங்க காவல் அரண்களை தாக்கியது போன்று மீண்டும் தாக்கமுனைகின்றார்கள் என எண்ணிய படையினர் புதன் கிழமை காலை 6மணி 30 நிமிடம் அளவில் புலிகளின் முகமாலை, நாகர்கோவில், கிளாலி முன்னரங்காவல் அரணை உடைந்து கொண்டு முன்னேற முயன்றனர். முன்னேறிய படையினரை தமது பகுதிகுள் சிறிது து}ரம் உட்புகவிட்டபின்னர் புலிகள் கடுமையான எறிகணை தாக்குதல்களையும், மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு படையினரை சுற்றி வழைத்து தாக்கியுள்ளனர். இரண்டரை மணித்தியாங்களில் புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவித்தார்கள். அவர்கள் தமது முழு பலத்தினையும் பிரயோகித்து அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என அரச பேச்சாளர் ஹெகலிய ரம்புக்கெல தெரிவித்துள்ளார். புலிகள் மேற்கொள்ளும் ஆயத்தங்களை விமான தாக்குதல் மூலம் சீர்குலைய செய்து வந்த இராணுவத்தினர் அதே போன்று தமது நிலைகளில் இருந்து சற்று பின்வாங்கி புலிகளின் நிலைகள் மீது விமானத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு முன்னேறியிருந்தால் இந்த உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் .விமானப்படையினரின் உதவியினை கோரிவிட்டு பின்னர் படையினர் முன்னேறியிருப்பார் களாயின் உயிர்சேதங்களை குறைத்திருக்க முடியும். அல்லாது விடில் புலிகள் தமது வடபகுதி முன்னரங்க காவல் அரண்களில் போராளிகளை குவிக்கின்றார்கள் என்பதினை அவதானித்த படையினர் அங்கு தாக்குதல் நடத்துவதினை தவிர்த்துவிட்டு கிழக்கில் ஏஞ்சிய பிரதேசங்களை மீட்கும் வகையில் வாகரை,வெருகல் பகுதிகள் மீது தாக்குதலை நிகழ்தியிருக்கலாம். கிழக்கில் இருந்து புலிகளை முற்றாக விரட்டும் திட்டத்தில் இருக்கும் படையினர் இதனை செய்திருந்தால் படையினரின் மனோபலத்தினை தொடர்ந்து உயர்நிலையில் பேணியிருக்க முடியும். இதனை விடுத்து தெற்கில் அரசியல் ஆதரவு தேடுவதற்காக ஆனையிறவு முகாமினை கைப்பற்ற முனைந்தமை அவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் (2006-10-08) ஞாயிற்றுக்கிழமை அரச படையினர் மூது}ரின் மேற்கு பகுதியினை கைப்பற்ற முனையும் பொழ்து புலிகள் அதிக எதிர்ப்பு காட்டாது பின்வாங்கியிருந்தனர். இதற்கு காரணம் மூது}ர் கிழக்கினையும் சம்பூரையும் இழந்ததின் பிற்பாடு தாம் அங்கிருந்து போரிடுவது பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதற்காக அவர்கள் பின்வாங்கியிருந்தனர். இதே போன்று புலிகள் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பின்வாங்குவார்கள் என படையினர் கணக்கு போட்டமை அவர்களின் தவறாகும் .புலிகள் புண்ணிய பூமியென அழைக்கும் வடபகுதி கட்டுப்பாடு பிரதேசங்களை கிழக்கினை போன்று எளிதில் விடப்போவதில்லை. என்ன விலை கொடுதேனும் கிளிநொச்சியினையும் முல்லதீவினை பாதுகாப்பதற்கு புலிகள் கடும்சிரத்தை எடுப்பார்கள். நாகர் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் கடற்கரை பிரதேசங்களை புலிகள் படையினரிடம் இழக்க நேரிட்டால் அது ஆனையிறவு, பளை, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆகையினால் நகர்கோவில் அரணிலும் புலிகள் மிகவும் அவதானமாக இருப்பார்கள். புலிகளின் முன்னரங்க காவல் அரண்கள் முகமாலை, நாகர்கோவில், கிளாலி போன்ற இடங்களில் இருந்தாலும் அவர்களின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை நிலைகளை(யசவடைடநசல pழiவெள) சில கிலோமீற்றர்கள் பின்நகர்த்தியே வைத்துள்ளார்கள். வட பகுதி கல்முனை, பூனைகரி போன்ற இடங்களில் இருக்கும் புலிகளின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை பீரங்கிகளை புலிகள் படையினரின் முகாம்கள் உள்ள யாழ்நகர், ஊர்காவல்துறை ,மணடைதீவு ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து நிறுத்தியுள்ளார்கள். பூனைகரியில் இருந்து தேவைக்கு ஏற்ப பலாலி விமானதளத்திற்கு இலக்கு வைக்கும் அளவிற்கு அங்குள்ள பீரங்கி தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பளை மற்றும் ஆனையிறவு பிரதேசத்தில் உள்ள புலிகளின் நீண்ட து}ர எறிகணை பீரங்கிகள் பலாலி விமானதளத்தினை ஏட்டும் அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. இவைகளை செயல் இழக்க செய்து ஆனையிறவினை கைப்பற்றுவதே படையினரின் நோக்கமாகும். இதனை நிறைவேற்றுவதற்கு படையினர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். கிழக்கில் புலிகள் தமது இடங்களை விட்டு சென்றது போன்று வடக்கில் இலகுவாக விட்டு செல்லமாட்டார்கள். புலி தனது பாதுகாப்பிற்காக அவ்வப்போது பதுங்கும் இடத்தினை எப்பொழுதும் பாதுகாப்பாகவே வைத்திருக்கும்.

முகமாலையில் கிடைத்தது வெற்றியல்ல, பிழைத்து விட்டேன் எனும் பிரகடனமே (னுநஉடயசயவழைn ழக ளுரசஎயiஎயட)

கடந்த இரண்டு மாதங்களாக படையினரின் தாக்குதலில் காயம் அடைந்த புலிகள் தனது காயங்களை ஆற்றியபடி இருந்துள்ளார்கள். சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் பாய்ந்துள்ளர்கள். மாவிலாற்றில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல தோல்விகளை சந்தித்த புலிகளுக்கு தம்மை சுதாகரித்து கொள்வதற்கு இவ்வகையான தாக்குதல் ஒன்று கட்டாயமாக தேவைபட்டது. கடந்த இரண்டு மாதங்களில் கொண்டு வந்த ஆயுதங்கள் மூழ்கடிக்கப்பட்டன, கடல் பிரயாணங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின, கிழ்க்கு பிரதேசங்கள் இல்லாமல் போயின,ஆயிரம் போராளிகள் உயிரிழந்தார்கள், இவ்வாறாக பல இழப்புக்கள் புலிகளுக்கு ஏற்பட்டன. இந்த இழப்புக்களினால் புலிகளினால் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் சென்று சாதனைகளை கூறி பணம் சேகரிக்க முடியாமல் போனது. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்கள் புலிகளின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை கொண்டு சென்று நீங்கள் வீணாக சாகடிக்கின்றீர்கள் என வேதனையும் வேகமும் கொள்ள ஆரம்பித்தார்கள், புலிகள் தோல்விகளை சந்திக்கும் வேளையியில் கிளிநொச்சியில் இருக்கு மாணவ மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பயிற்;சி கொடுத்தமை அப்பகுதி மக்களுக்கு மேலும் சினத்தினை உண்டு பண்ணியது. இது மட்டும் அல்லாது புலிகளின் வளர்ப்பு தந்தையாக இருக்கும் நோர்வே அவர்களின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தமை புலிகளுக்கு கௌரவ குறைவினை ஏற்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் ஓரளவிற்கு சமாளிப்பதற்கு புலிகளின் முகமாலை தாக்குதல் உதவியுள்ளது. படையினரின் 74 உடல்களை புலிகள் கிளிநொச்சிக்கு எடுத்து சென்று சமாதான பேச்சாளர்கள் வானு}ர்தியில் சென்றிறங்கும் மைதானத்தில் அடுக்கி வைத்து அதனை மக்களுக்கு காண்பித்து தமது வீரத்தினை செப்பியுள்ளார்கள். கடந்த இரு மாதங்களாக ஐரோப்பிய ,அமெரிக்க (கனேடிய) நாடுகளில் தலை குனிந்து நடந்த புலிகளின் முகவர்கள் தற்பொழுது சற்று தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து ள்ளார்கள். அடக்கி வாசித்த புலிகளின் சார்பு இணையதளங்கள் இந்த தாக்குதலை ஒரு பாரிய சாதனையாக காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். புலிகளின் போராளிகளுக்கு உளபலத்தினை இந்த தாக்குதல் கொடுத்திருக்கின்றது. பிரதானமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் உரையினை ஓரளவு தலைநிமிர்ந்து பேசுவதற்கு முகமாலை தாக்குதல் உதவியுள்ளது.

மொத்தத்தில் புலிகளுக்கு இருந்த வந்த சில நெருடல்கள் இந்த தாக்குதலினால் இல்லாமல் போயுள்ளன. ஆனால் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. முகமாலை தாக்குதல் புலிகளுக்கு வெற்றியினை கொடுக்கவில்லை, முன்னேறிய படையினரை தாக்கி விரட்டியடித்திருக்கின்றார்களே தவிர யாழ் பகுதியினை கைப்பற்றவேண்டும் என்கின்ற அவர்களில் இலக்கில் ஒரு இஞ்சினை கூட அவர்களினால் பெறமுடியவில்லை. கடந்த மாதம் முகமாலையில் படையினரிடம் இழந்த ஒரு கிலோமீற்றர் து}ரத்தினை கூட புலிகளினால் மீட்கமுடியாது போயுள்ளது. மாவிலாறு ,மூது}ர், சம்பூர் ஆகிய பிரதேசங்களை படையினர் தாக்கிய பொழுது அவர்களுக்கு அங்கு கிடைத்து வெற்றியாகும், அந்த பிரதேசங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். புலிகள் கடந்த புதன் கிழமை படையினருக்கு ஏற்படுத்திய சேதங்கள் புலிகளுக்கு இருந்த அழுத்தங்களை தற்காலிகமாக விடுவித்து இருகின்றதே தவிர விடுதலைப்பாதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. புலிகள் தமது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வெகுவாக குறைப்பித்து காண்பித்து உள்ளார்கள். புலிகளின் ஆதரவு இணைய தளங்களும், விசுவாசிகளும் உண்மைகளை ஜீரணிக்க முடியாது தம்மை தாமே திருப்தி படுத்தி சந்தோசம் கொள்கின்ற ஒரு வகைநோயிற்கு உட்பட்டவர்களாவர்கள். நான் இங்கு கூறப்போகின்ற சில விடயங்கள் அவர்களினால் ஜீரணிக்க முடியாதவைகள் ஆகும்.

அரச தரப்பு புலனாய்வு துறையின் தகவலின் அடிபடையிலும், கிளிநொச்சியில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பெறப்பட்ட செய்திகளின் அடிபடையிலும் பார்க்கின்ற பொழுது கடந்த புதன் கிழமை முன்னரங்க காவல் அரண் மோதலில் புலிகளுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. முகமாலையில் கொல்லப்பட்ட புலிகளின் 160 உடல்கள் மட்டில் துணுக்காயிலும், கிளிநொச்சிலும் அடக்கம் செய்யப்பட்டதாக (விதைக்கப்பட்டுள்ளது) தெரியவந்துள்ளது. காயம் அடைந்த புலிகளின் 285 போராளிகள் கிளிநொச்சியில் உள்ள அரச வைத்தியசாலையிலும் ,தற்காலிக வைத்தியகூடாரங்களிலும் (அயமநளாகைவ அநனiஉயட உயஅpள) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி அரச வைத்தியசாலை காயம் அடைந்த புலி போராளிகளினால் நிறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் சக இயக்க போராளிகள் மீதும், அரச படையினர் மீதும் தாக்குதலை மேற்கொள்ளும் போது தேவைக்கு அதிகமாக போராளிகளை பயன்படுத்துவதும், அவர்களில் பலரை வீனாக பலி கொடுப்பதும் வழக்கமாகும். இதனையே முகமாலையில் செய்திருக்கின்றார்கள். காயம் அடைந்த புலிகளின் போராளிகளுக்கு இரத்தம் வழங்குமாறு கிளிநொச்சியில் உள்ள மக்கள் கேட்கப்பட்டு வருகின்றார்கள். புலிகளை போன்று அரச தரப்பும் தமது இழப்புக்களை மூடி மறைக்ககின்ற போதும், இறந்தபடையினரின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பொழுது உண்மைகள் தெரிந்து விடுகின்றன. முதலில் 78படையினரை காணவில்லை என தெரிவித்து இருந்த படைதரப்பு புலிகளினால் 74 உடல்கள் கையளிக்கப்பட்ட பின்னர் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து உள்ளார்கள். படையினர் பொயகளை கூறினாலும் அது பின்னர் தெரியவந்து விடுகிறது. ஆனால் இரும்பு திரைக்குள் இருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் ஏற்படும் இழப்புகள் வெளிவருவது இல்லை. சிலர் அதனை ஆராய்ந்து உணமைகளை வெளியிட்டாலும் அதனை புலிகளின் விசுவாசிகள் மட்டும் விளங்கி கொள்ள மாட்டார்கள். படையினர் தரப்பில் படுகாயம் அடைந்தவர்கள் கொழும்பு இராணுவ வைத்திய சாலையிலும் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் பலாலி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 2006-10-13) பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட இராணுவ தளபதி சரத்பொன்சேகா அவரகள் காயம் அடைந்த படையினரை சென்று பார்வையுற்றுள்ளதோடு, படையினரின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வட பகுதி இராணுவ தலைமையுடன் விவாத்தித்து விட்டு சென்றுள்ளார்.

இருதரப்பினரின் படைபலமும்,இழந்த உயிர்சேதங்களும்
அரச படையினரின் தொகையளவினை புலிகளின் போராளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் படையினருக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் அதிகமானவை அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கு பகுதிகளில் மக்களை வாக்களிக்க விடாது படையினருக்கு எதிராக கிளைமோர் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் (2005-01-01) இருந்து இதுவரையில் 664பொதுமக்கள் உட்பட மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அரச படைதரப்பில் இராணுவத்தினர் 624, கடற்படையினர் 104, பொலிசார் 83, ஊர்காவல் படையினர் 36 என்ற எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.புலிகள் தரப்பில் 1546 போராளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கணிப்பீடு இலங்கை தேசிய பாதுகாப்பு துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .(றறற.யெவழையெடளநஉரசவைல.டம) இந்த எண்ணிக்கைகளை முற்றாக மறுக்கமுடியாது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 900 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்ப ட்டுள்ளார்கள். மாவிலாறு, மூது}ர், சம்பூர், தரவை முகாம் மீதான விமானதாக்குதல் ,கரடியனாறு விமானதாக்குதல் போன்ற சம்பவங்களில் புலிகளுக்கு கடும் உயிரழப்பு ஏற்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி புலிகள் யாழ்குடாநாட்டினை கைபற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி இராணுவத்தினரால் முறியடி க்கப்பட்டது. இதில் கடும் உயிழப்பு புலிகளுக்கு ஏற்பட்டதினாலேயெ அவர்கள் அந்த முயற்;சியினை கைவிட்டு இருந்தார்கள்.

தென்கிழக்காசியாவில் உள்ள இராணுவம் பலம் மிக்க நாடுகளான இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாட்டினை காட்டிலும் இலங்கை இராணுவத்தினரில் அதிக படையினர் உள்ளனர். பாகிஸ்தானில் ஒரு மில்லியன் மக்களுக்கு 4 ஆயிரம் படையினரும் இந்தியாவில் 1300படையினரும் உள்ளார்கள். இந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இலங்கையில் ஒரு மில்லியனுக்கு மக்களுக்கு 8 ஆயிரம் படையினர் என்ற வகையில் படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் இலங்கையில் 150,000 இராணுவத்தினர் உள்ளார்கள். இவர்கள் கனரக ஆயுதங்களை (ஆரடவi-டீயசசநட சுழஉமநவள டுயரnஉhநசள,டழபெ சயபெந யசவடைடநசலஇஅழசவயசளஇடியவவடந வயமௌ யனெ யசஅழரசநன pநசளழnநெட உயசசநைசள) பாவிக்ககூடிய வகையில் பயிற்றப்பட்டுள்ளார்கள். இதனைவிட 20,600 கடற்படையினர் உள்ளனர். மேலும் ஆஐபு-23இ ஆஐஊ 24இ முகசை ளரிநசளழniஉ கiபாவநச-டிழஅடிநச, ஆகிய யுத்த விமானங்களை உள்ளடக்கிய விமானப்படையினர் உள்ளார்கள். இலங்கை பாதுகாப்பு செலவீனங்களுக்கு இதுவரையில் 700 மில்லியன் அமெரிக்க டொடலாரக இருந்த செலவீனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொஒருக்கு உயர உள்ளது. சம்பூரை கைப்பற்றுவதற்கு மட்டுமாக இரண்டாயிரம் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டு இருந்தார்கள். இந்த பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு 20ஆயிரம் படையினர் மட்டில் சம்பூரையும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புலிகளும் பெருமளவிலான பணத்தினை ஆயுத கொள்வனவிற்காக ஆண்டு தோறும் செலவு செய்து வருகின்றார்கள். இதுவரையில் அவர்களிடம் செயற்பட கூடிய அளவிற்கு விமானப்படையினரோ அல்லது விமானஎதிர்ப்பு பாதுகாப்புகளோ இல்லை. ஆனால் தரைபடையும், கடற்புலிகளும் கடந்த காலங்களில் பலமாக இருந்து வந்துள்ளன. கடற்புலிகளிடம் 10மைல் கடல்வேகத்தில் இருந்து 40மைல் கடல்வேகம் செல்லக்கூடிய அளவிற்கு தாக்குதல் படகுகள் உள்ளன, இவைகளில் 23 மில்லி மீற்றர் இரட்டை குழல் பீரங்கிகளும் ரடார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை விட பினாமிகளின் பெயர்களில் வர்த்தக கப்பல்கள் இருக்கின்றன. அரச படையினரின் இருக்கும் 150,000 இராணுவத்தினரையும், 20,600 கடற்படையினரையும் ஒப்பிடுகையில் புலிகளிடம் 10,000 ரைவழி போராளிகளும், 2,000 கடற்புலிகளும் மட்டுமே உள்ளார்கள். இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த இரு மாதங்களில் புலிகளுக்கு நேர்ந்த உயிரழப்பு அதிகமேயாகும்.
முகமாலை முன்னரங்காவல் அரண்களில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பட்ட மோதலில் புலிகளை காட்டிலும் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதினை அரச பாதுகாப்பு துறையினரே ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதனை புலிகள் தமக்கு வெற்றியென ஏனையோரை நம்பவைக்க முயற்சிக்கின்றார்கள். படையினருக்கு உயிரிழப்பினை ஏற்படுத்துவதினால் தமிழ்ஈழம் கிடைத்துவிடும் என புலிகள் கிளிநொச்சியில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை நம்பவைத்துள்ளார்கள். புலிகளின் ஊடகங்களை தவிர வேறு எந்த செய்திகளும் எட்டாது வாழும் அந்த மக்களுக்கு இது வெற்றி என புலிகள் காட்ட முனைகின்றனர். அவ்வப்போது புலிகளினால் இவ்வகையான உயிரிழப்பினை படையினருக்கு ஏற்படுத்த முடியுமே தவிர ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்து அவைகளை பாதுகாத்து வைத்திருக்க முடியமா என்பதினை புலிகள் நீரூபிக்க வேண்டும்