Saturday, March 03, 2007

கருணா அம்மான் உடைத்ததால்; மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன ?

கருணா அம்மான் உடைத்ததால்; மட்டும் அது மண்குடம் ஆகிவிடுமா என்ன ? மக்களை நேசிக்கும் அரசியலும், ஆயுதமுமே புலிகளை தோற்கடிக்கும்!

- எஸ். மனோரஞ்சன் -

“எனது பெற்றோர்கள் என்னை புலிகள் இயக்கத்திடம் ஒப்படைக்க மறுத்து விட்டதனால் அவர்கள் பதினைந்து பேர் எங்களின் வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களில் சீருடை தரித்த ஆண்களும் பெண்களும் கைகளில் றைபிள்களுடனும், இடைப்பட்டிகளில் கட்டப்பட்ட துப்பாக்கிகளோடும் வந்திருந்தனர். என்னை கொண்டு செல்வதற்கு அவர்கள் வந்த, அந்த அதிகாலை நேரம் நான் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன்..... .திடீர் என வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் என்னை தற தறவென்று வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்றனர். என்ன செய்கிறீர்கள், என்ன நடக்கிறது இங்கே? என எனது தந்தையார் அவர்களை நோக்கி கத்தினார். ஆனால் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் எனது தந்தையை அருகில் இருந்த புதர்களை நோக்கி இழுத்துச் சென்று அவரை கடுமையாக தாக்கினார்கள் அதை தடுக்க முயன்ற எனது தாயாரை அவர்கள் கீழே தள்ளி விழுத்தினார்கள்.

- 2003 ம் ஆண்டில் தனது 16ம் வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பெண் -
இக் குறிப்பானது, புலிகள் இயக்கத்தின் ஈவிரக்கமற்ற பிள்ளைபிடி செயற்பாட்டை அம்பலப்படுத்தி 2004 டிசம்பரில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (ர்சுறு), வெளியிட்ட அச்சத்துள் வாழ்தல் என்னும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போதும் அதனை


http://www.hrw.org/tamil/reports/2004/lanka111004_full.pdf
என்னும் இணையத் தொடுப்பில் பார்க்கலாம்.
“அவர்கள் எல்லொருமாக 10பேர் மட்டில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரின் சீருடைகளை அணிந்திருந்ததோடு முகங்களையம் மூடிக் கட்டியிருந்தனர். அவர்கள் அணிந்திருந்த சீருடைகளில் பதவித் தராதரங்களைக் காட்டும் சின்னங்களேதும் இருக்கவில்லை. அவர்களில் ஒருவனின் கால்களைப இறுகப் பிடித்து எனது மகனை விட்டுவிடும்படி நான் கெஞ்சினேன். அவன் என்னை முரட்டுத்தனமாக உதைத்துவிட்டான். “நாங்கள் உனது மகனை விசாரிக்கப் போகிறோம் எல்லாம் விசாரித்து முடிந்ததும் விட்டுவிடுவோம், என, அவர்களில் ஒருவன் சொன்னான். அதை அவர்கள் தமிழிலேயெ கூறினார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதபாணிகளாக ரைபிள் துப்பாக்கிகளுடன் நின்றனர். அவை என்ன வகை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள்.
- 2006 ஜூன் - நவம்பர் இடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தப்பட்ட ஒரு இளைஞனின் தாய் -
இந்தக் குறிப்பானது, கடந்த வருட நடுப்பகுதியிலிருந்து மட்டக்களப்பில் கருணா குழுவினர் இலங்கை அரசாங்கப் படையினருடன் இணைந்து, சிறார்களை பலவந்தமாகப் பிடிக்கும் நடவடிக்கையை அம்பலப்படுத்தி, அதே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பால் (ர்சுறு)இ கடந்த மாதம் 24ம்தகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதனைப் பார்க்கhttp://www.hrw.org/tamil/reports/2004/lanka111004_full.pdf இந்த இணையத் தொடுப்புக்குச் செல்லவும்.
இந்த இரண்டு குறிப்புக்களில் இருந்தும் சாதாரண தமிழ் மக்களின் நிலைமை என்ன எனபதை நாம் புரிந்து கொள்ளலாம். அதற்கு பாரிய அரசியல் அறிவு வேண்டும் என்பதில்லை. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அவலமே இங்கு சொல்லப்படுகிறது. தமிழரின் ஆயுதப் போராட்டம்; தொடங்கிய காலம் முதல் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் அவலத்தின் தொடர்சியே இது. கிழக்கில் அரசியல் ஆதிக்கத்தை கட்டியெழுப்ப முனையும் கருணாவின் அரசியல் கட்சியானது இப்போதே சரியாக அதற்கான வழிமுறை நெறிமுறைகளை வகுக்காவிட்டால் அந்த மக்கள் முகம் கொடுக்கப் போகும் அடுத்த சுற்று அவலத்தினை எமக்கு மிகத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றது இந்தக் குறிப்பு.
கிழக்கில் சிறார்களை புலிகள் மட்டுமல்ல கருணா குழுவினரும் பலவந்தமாக கடத்துகிறார்கள் என்று ஐ.நா. பிரதிநிதி அலன் ரொக் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை விடுத்தார். அதை உறுதிப்படுத்துவது போல் இப்போது ர்சுறுவின் அறிக்கையும் வெளிவந்துள்ளது. அதன் உண்மையை அறிவதற்கு இக்கட்டுரையாளர் கிழக்கில் சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டார். கிழக்கில் இக்கட்டுரையாளருக்கு இருக்கும் தொடர்புகள் நீண்டகால புலி எதிர்ப்புத் தொடர்புகள்தான். ஆனால், அலன் ரொக் மற்றும் ர்சுறு கூறிய விடயங்கள உண்மை என்பதை அத்தொடர்புகளும் உறுதிசெய்தன. ‘நாங்கள் அதை கண்ணால் காண்கிறோம்’ என்றும் அத்தொடர்புகள் கூறின. கருணா குழுவினரின் இத்;தகையத நடவடிக்கைகள் கிழக்கு மக்களின் அதிருப்தியையே அவர்களுக்கு சம்பாதித்து தரும் என்றும், சிறு பிள்ளைகளைப் பிடிப்பது அரசியல் தார்மீகமாகாது என்றும், அக்கட்சியினருடன் பேசிப்பார்த்து, அவற்றை நிறுத்த முயற்சிக்க முடியாதா? எனக் கேட்டபோது, அவர் மிக விரக்தியுடன் இப்படிச் சொன்னார்..:
“என்னவோ தெரியேல்லை இப்ப மூணு நாலு மாசமா ஆக மூர்க்கமாய் நிக்கிறாங்கள். பெரியாக்களை புடிச்சாலும் பறவாயில்லை, கஷ்டப்பட்ட சின்னப் பிள்ளைகளைப் புடிக்கிறாங்கள். ஆனா பொம்பிளைப் பிள்ளைகளில கை வைக்கேல்ல... போகப்போக எப்படியோ தெரியாது... புலி வளர்த்து விட்டவங்கள்தானே வேற எப்பிடி செய்வாங்கள்.. எங்களுக்கு விடிவில்லைதான் போலயிருக்கு” என்று பெருமூச்சோடு நிறுத்தினார்.

கருணாவுக்கும், கருணா இன்று வகிக்கும் அரசியல் பாத்திரத்தை ஆதரிக்கும் எமக்கும், மேற் சொன்ன கூற்றுக்குள் பெரிய செய்தி காத்துக்கிடக்கின்றது. சில கேள்விகளும் எம் நோக்கி எழுப்பப்படுகிறது. கருணா எதற்காக அரசியல் செய்கிறார்? அவரது கட்சியன் எதிர்காலம் என்ன? நாங்கள் ஏன் கருணாவின் அரசியலை ஆதரிக்கிறோம்? இன்று ஏன் கட்டாயம் அதை ஆதரிக்க வேண்டும்? இவை சில முக்கிய கேள்விகளாகும்.

நீண்ட காலமாக புலிகளின் காட்டுமிராண்டி அரசியலை கடுமையாக விமாசித்தவர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் கருணா ஆதரவாளர்களாக மாறியவர்கள். கருணா புலிகளில் இருந்த பிரிந்து வந்த நாள்முதல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது உத்தியோகப் பற்றற்ற பிரச்சாரகர்களாக செயற்படுகிறவர்கள். ஆகவே இன்று கிழக்கு மக்களின் அவலம் தொடர்பாகவும் பதில்சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. அங்கு அவலத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களைப் பொறுத்தவரை எமது அரசியல் வியாக்கியானங்ள் அhத்தமற்றவை. அவை அந்த மக்களை மேலும் எம்மிது எரிச்சலடையவே செய்யும் என்பதை நாம் புரிந்து கொள்வதும் மிக மிக அவசியமானது.

2004இல் புலிகளின் பிள்ளைபிடி தொடர்பாக அறிக்கைவிட்ட ர்சுறுவை, இலங்கை அரசாங்கத்தின் உளவுப் பிரிவிடம் ர்சுறு விலை போய்விட்டது என்று புலி ஆதரவாளர்கள்; போட்ட கோமாளித்தனமான கூப்பாடையும், குற்றச்சாட்டையும் உலகில் எவரும் ஏற்றுக்கொள்வில்லை. பின்னர் அது அவர்களுக்கே வினையாக வந்து முடிந்தது. அதே போல்தான்; இம்முறை கருணா அணியினரையும் இலங்கை அரசாங்கத்தையும் அம்பலப்படுத்தி அறிக்கை வந்திருக்கிறது. ர்சுறு புலி ஆதரவாளர்களின் சதி வலைக்குள் விழுந்து விட்டது என நாம் கூப்பாடுபோடுவதால் நட்டம் யாருக்கு? நாங்களும் புலி ஆதரவுக் கோமாளிகள் போல் ஆவதில் பயனென்ன?

புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதால் கருணா குழுவினரின் அரசியலை கண்ணை மூடிக்கொண்டு நாம் ஆதரிக்கலாம் என நாம் கருதலாம். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளுக்கு வந்திருக்கும் நாம் கருதலாம். அப்படியானவர்கள் ஒரு முறை தமது கண்களை மூடிக்கொண்டு, கடத்தப்படும் அந்தப் பிள்ளைகளின் இடங்களில் எங்கள் பிள்ளைகளின் முகங்களையும், நிராதரவாக நிற்கும் அந்த பெற்றோர்களின் இடங்களில் எங்களையும் ஒரே ஒருமுறை நிறுத்திப் பார்த்தோமானால் அந்த அவலமும் வேதனையும் புரியும். அதனைப் பரிந்து கொள்ளும் மனத்துடிப்பு எமக்;கில்லையெனில், நாம் பேசும் ஜனநாயம், மனித உரிமை, மக்கள் அரசியல் என்பவையெல்லாம் வெறும் பம்மாத்துக்களே.

புலி எதிர்புவாதமும் ஒரு பிழைப்பு வாதம் என்று ஒரு குற்றச்சாட்டுண்டு. அக்குற்றச்சாட்டு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதும் எமக்குத் தெரியும். புலிகள் தவறு, ஆகவே மற்றெல்லாம் சரி, என நாம் வாதிடுவதும் அவற்றை நியாயப்படுத்தவதும் ஒரு காரணம். புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்கள் எமது அரசியலில் மக்களின் நலனை மறந்து போய் நாங்களும் இன்னொரு விதத்தில் ‘குட்டிப் புலி’ அரசியலையே செய்ய முனைவது அடுத்த காரணம். இலங்கையில் இருக்கும்போது ~புலி வருது, புலி வருது, என்றும் புலி எங்களை கொல்ல வருது என்றும் பீதி கிளப்பிவிட்டு, (அதில் உண்மையும் இல்லாமலும் இல்லை) அதையே காரணமாக காட்டி எங்கள் குழந்தை குட்டிகளுடன் வெளிநாடு ஓடிவந்துவிட்டு, வெளி நாடு வந்தவுடன் எமது பிழைப்புக்காக ‘புலிகள் தீண்டத்தகாத சக்திகள் அல்ல, அவங்கள் இருப்தால்தான் மோட்டுச் சிங்களவன் எங்களுக்கு ஏதாவது தருவான்’ என்று கூறித்திரிந்து செய்யும் லீலா வினோதங்கள் மற்றுமொரு காரணம். இப்படிப் பல...
எனவே இன்று நாம் கருணா மீதான விமர்சனங்களை அங்குள்ள தமிழ் மக்களின் நலனில் இருந்தும் பார்க்க வெண்டும். எந்த மக்கள் அன்று புலிகளின் பிள்ளைபிடியைப் பற்றி ர்சுறு விற்கு தகவல் சொன்னார்களோ அதே மக்கள்தான் இம்முறை கருணா குழுவினரைப் பற்றியும் அரசாங்க இராணுவத்தைப் பற்றியும் ர்சுறு விற்கு தகவல் கொடுத்துள்ளனர் என்னும் சாதாரண உண்மை, கருணாவுக்கும் அவரது அணியினருக்கும் அவரை ஆதரிக்கும் எமக்கும் நன்கு தெரியும். அந்த மக்களிடையேதான் கருணா அணியினர் அரசியல் செய்யப் போகின்றனர். அந்த மக்களின் குரலுக்கு அவர்கள் செவிகொடுக்காவிட்டால், அவர்கள் யாராவது ஒருவர் மூலம் தங்கள் குரலை வெளிக்கொணர்ந்தே தீருவர். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுவதிலேயே கருணாவின் அரசியல் வெற்றி தங்கியுள்ளது. கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும், அந்த நோக்கில் கருணா அணியினர் கையில் எடுக்கும் ஆயதங்களுமே புலிகளின் அரசியலை தோற்கடிக்க வல்லது. இதில் ஒன்று தவறினாலும் எம் எல்லோருக்கும் தோல்விதான்.
ஆகவே கருணா இன்று கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சில உடனடிப் பிரச்சினைகள் இருக்கினறன.

முதலாவது, சிறார்களை பலவந்தமாகப் பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது. இரண்டாவது, கட்சிக்கு பணம் தேவை என்பதற்காக தமிழர்களைக் கடத்தி பணம் பறிப்பதை நிறுத்துவது. மூன்றாவது, வுசுழு நபர்களைக் கடத்திய சம்பவத்தில் (இதைக் கருணா குழு செய்திருந்தால்) பிரதானமாக நடந்ததாக கூறப்படும் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் பற்றிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது. (பார்க்க : னு.டீ.ளு. ஜெயராஜ் இன் கட்டுரை hவவி:ஃஃவசயளெஉரசசநவெள.உழஅஃவயஅடையையெஃயசஉhiஎநளஃ284 )

இவை மூன்றும் தொடர்பாக கருணா உடனடிக் கவனம் செலுத்தி, அத் தவறுகளை திருத்தாத பட்சத்தில் அவர்களின் அரசியல் அஸ்தமனத்திற்கு இவையே ஆரம்ப படிகளாக அமையப் போகின்றன. கருணாவை நாம் விமர்சிக்கலாமா?தமிழ் அரசியல் சக்திகளால் மட்டுமல்ல, இலங்கை அரசு, இந்திய அரசு எல்லாவற்றுக்குமே தண்ணிகாட்டிய மாபெரும் புலிப்படையின் முதுகெலும்பை தெறிக்க வைத்ததில் கேர்ணல் கருணா என்ற முரளீதரனின் பாத்திரம் மறுக்கப்பட முடியாதது மட்டுமன்றி வரலாற்றில் மறக்கப்படவும் முடியாததாகி, 2004ம் ஆண்டில் அவர் பிரிந்தவுடன் அவரது இராணுவப் படையணி, புலிகளின் மீது பாய்ந்து அதைக் சிதறடிக்க முடியாமல் போனாலும், தாங்கள் யாராலும் அசைக்க முடியாதவர்கள் என புலிகள் காட்டிவந்த பம்மாத்து பயில்வான்தனத்தை, பகிடியாக்கி விட்டவர் கருணா. கிழக்கு மாகாணத்திலிருந்த ஆயிரக்கணக்கான புலி அங்கத்தவர்களை சடாரென உடைத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பி, தானும் சிலருடன் பட்டென்று பின்வாங்கிய தனது பெரும் யுத்த தந்திரத்தின் மூலமே கருணா இதைச் சாதித்தார் என்பது பெரும் உண்மையாகும்.
கருணாவினால் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலேயே பிரபாகரனின் புலிகள் இருக்கின்றனர். கிழக்கைச் சேர்ந்த பல மூத்த புலி உறுப்பினர்கள் ஒத்தாசையாக இருந்தும் வடக்கைச் சேர்ந்த புலிகளின் எந்தத் தளபதியாலும், கருணாவின் மொழியில் சொன்னால், பிரபாகரனின் தொந்தி வளர்ந்த தளபதிகளால் கிழக்கில் தற்போது நின்றுபிடிக்க முடியவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது கருணா புலிகளை விட்டு ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களுடன் பிரிந்தது மட்டுமன்றி, இன்று தனியாக ஒரு படையணியாக நின்று புலிகளுடன் மோதுவது. இரண்டாவது கிழக்கு மக்களின் கணிசமானளவு ஆதரவை வன்னிப் புலிகள் இழந்தது.

கருணாவிடம் புலிகளி;ன் அளவுக்கு பெரும் படையணி இல்லாவிட்டாலும், அவரிடமிருக்கும் சிறு தொகையினரை இறுக்கமாக வழிநடத்தும் திறன் கருணாவுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் அது கருணாவின் பிரதேசம். அங்கு அவர்களால் வன்னிப் புலிகளுக்கு பல இராணுவ வித்தைகளைக் காட்ட முடியும். அது மட்டுமன்றி கருணா இலங்கை அரசாங்கப் படைகளிடம் இருந்து பெறும் ஒத்தாசைகளையும் கொண்டு தனது இராணுவ நடவடிக்கைகளைச் செய்வதால் புலிகளுக்கு கிழக்கில் இனி கஷ்டகாலம்தான். கிழக்கில் அவர்களின் இராணுவ நடவடிக்கைகள், கோயில் ஐயர்மாரைச் சுடும் அளவோடு நிற்க வேண்டியதுதான்.

இவ்வளவு தூரம் புலிககைள பலவீனப்படுத்திய கருணாவையும் அவரோடு நிற்கும் போராளிகளையும் நாம் விமர்சிக்கலாமா? அப்படி விமர்சித்தால் அது வன்னிப் புலிகளை பலப்படுத்தாதா? என்ற கேள்விகள் இப்போது எம்மிடையே கேட்கப்படுகிறது. இவை நியாயமான கேள்விகள்தான். அதனைவிடவும் நியாயமான கேள்வியாக கேட்கப்படுவது என்னவென்றால், புலிகளுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவந்து தனி மனிதர்களாக வெளிநாடுகளில் கிடக்கும் நாம், களத்தில் நின்று போராடும் கருணாவை விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது? இதையும் தாண்டிக் கேட்கப்படும் கேள்வி யாதெனில் கிழக்கின் போராட்டத்தை கேள்வி கேட்கும் அருகதை வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிறதா என்பதே?
இவ்வெல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பக்கமான தார்மீக நியாயங்கள் இருப்பதாக நாம் வாதிடலாம். உண்மைதான் ஆனால் அந்த வாதங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அவையாவன....

கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் இன்னொரு பிரபாகரன் போலவோ, அவரது குழு பொட்டம்மானினது வழிகாட்டலில் இயங்கும் மோசமான கொலைகாரக் கும்பலைப் போன்ற மற்றொரு கும்பலாகவோ மாறுவதை மனதார விரும்பாதவர்கள் என்ற ஆதங்கத்தில் நாம் கருணாவை மாத்திரமல்ல, நிட்சயமாக விமர்சிக்கலாம்.
கருணாவுக்கும், கருணாவோடு நின்று, இன்று புலிகளை எதிர்த்து போராடும் வீரர்களுக்கும், கருணாவுக்கு ஆதரவு வழங்கும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கும் தமது பிரதேசத்து மக்களைப் பற்றிய அக்கறை உண்டு என்று நாம் நம்பலாம். ஆனால் இன்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கருணாவைப் பயன்படுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கோ, கருணாதான் உண்மையான வீரன் என போற்றும் ஜேவீபி. சிஹல உருமய போன்ற கட்சிகளுக்கோ கிழக்கு மாகாணத் தமிழ், முஸ்லிம் மக்களைப்பற்றியோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் நலன்கள் பற்றியோ சாதகமான திசையில் சிந்திக்கும் அரசியல் கிடையாது.
எனவே இன்று கருணாவின் இருப்பை பாவித்துவிட்டடு, கருணா குழுவினர் விடும் தவறுகளுக்கெல்லாம் ஒத்தாசையாக இருந்து விட்டு, பின்னர் காரியம் முடிந்ததும் கருணாவையம் அவரது குழுவினரையும் கிரிமினல்களாக காட்டி அவர்களைக் கழுவேற்றும் கைங்கரியத்தை அரசாங்கமும் சிங்கள பேரினவாதிகளும் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (அண்மையில் இலங்கை சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியாராச்சியும் அரச தரப்பினரால் கருணா கொல்லப்படலாமென எச்சரித்திருக்கின்றார். பார்க்க :
hவவி:ஃஃறறற.டயமெயநநெறள.உழஅஃநுபெடiளாஃநெறள.pரி?னைஸ்ரீ3775 ) அந்த பாதாளத்தில் விழுவதற்கு கருணாவும் அவரது குழுவினரும் தாங்களே பாதை சமைக்க கூடாது என்கின்ற அக்கறையில் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னிப் புலிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பது உண்மை. கிழக்கில் இருந்து மட்டுமல்ல வடக்கிலிருந்தும், அவர்களும் அவர்களின் பாசிச அரசியலும் களைந்தெறியப்பட வேண்டும். அதில் எவருக்கும் முரண்பாடில்லை. ஆனால் அந்த மூர்க்கமான போராட்டத்தில் கருணா தனது படைபலத்தைப் பெருக்குவதற்காக, பல தசாப்தங்களாக பல பக்கத்தாலும் வஞ்;சிக்கப்பட்டு நொருக்கப்பட்ட கிழக்கு மாகாண வறிய மக்களின் பிள்ளைகளை பலவந்தமாக பிடிப்பதன் மூலம், கருணாவுக்கும் அவரது அரசியலுக்கும் இருக்கக் கூடிய தார்மீக உருத்தையும், அதற்கான மக்கள் பலத்தையும் அவர் இழந்து விடக்கூடாது என்கின்ற அக்கறையில் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கருணா அந்த மக்களின் ஆதரவை இழந்து அழிந்து போக மீண்;டும் புலிகள் இயக்கத்தின் மோசமான ஆதிக்க வெறிபிடித்த அரசியலும், அந்த இயக்கத்தின கொலைக்கரங்களும் மீண்டும் கிழக்கில் காலூன்றி அந்த மக்களை சின்னாபின்னப் படுத்தும் நிலைமை வந்துவிடக்கூடாது என்கின்ற அக்கறையுடன் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

யாழ்ப்பாண சமூகத்தில் இருந்த சகல நல்லம்சங்களையும் அழித்தொழித்துவிட்டு அதிகார வெறியும்;, அடாவடித்தனமும், வரட்டுக்கௌரவ குணாம்சமும், மற்றவனின் அழிவே தமது வெற்றிக்கான படிகள் என்று நினைக்கும் நயவஞ்சகப் போக்கும் தமிழரின் சமூக அரசியலின் பெரும்போக்காக கோலோச்சுவதால், இன்றுவரை புலிகளுக்கு எதிரான பொதுப் போராட்டத்தில ஐக்கியப்பட்ட மாற்று தமிழ் சக்தியொன்றை கட்ட முடியாமல் வடக்கு சீரழிந்து போய்க் கிடக்கிறது. இந்தத் தருணத்தில் கிழக்கிலாவது அதைச் செய்யக்கூடிய வலுவான ஒரு அரசியல் சக்தியாக வளருவதற்கு வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும் கருணாவும் அவரது அணியினரும் அவருக்கு ஆதரவான மக்கள் பிரிவினரும் அநியாயமாக சீரழிந்து போய்விடக்கூடாது என்கின்ற அக்கறையுடன் நாம் கருணாவை விமர்சிக்கலாம்.

கருணாவின் மீதான நம்பிக்கை?

கருணாவை விமர்சிக்கும்போது அந்த விமர்சனங்களுக்கான பலாபலன்கள் வரும் என்ற நம்பிக்கையோடு நாம் விமர்சிக்கிறோம். ஏனெனில் புலிகளை விமர்சித்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எமக்குத் தெரியும். இது பரவலான தமிழ் மக்களுக்கும் தெரியும். புலிகளை அம்பலப்படுத்துவதும், எல்லா விதத்திலும் பலவீனப்படுத்துவதுமே எமது பணி. ஆனால் கருணா குழுவினர் மீதான விமர்சனங்கள் அப்படிப்பட்டதல்ல. அவை கருணாவை பலப்படுத்தும், செழுமைப்படுத்தும் நோக்கில் வைக்கப்படுபவை. அந்த வகையில் கருணாவும் அவரது அணியினரும் அவரது அரசியலை ஆதரிப்பவர்களும் அந்த விமர்சனங்களை நட்பு விமர்சனங்களாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும். கருணாவை அழித்துவிட்டு, அவரினதும் அவரது கட்சியையும் அதன் அரசியலையும் அழித்துவிடும் நோக்கில் நடத்தப்படும் சேறடிப்புக்களை கருணா கவனத்திற் கொள்ள தேவையில்லை. அவற்றின் உள்நோக்கம் யாவரும் அறிந்ததே. அவை பலமுகங்களுடன் வரும், சில வேளை தமிழருக்கான ஜனநாயகம், மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பல்கலைக்கழகங்களி;ன கருத்து என பல வேஷங்களோடும் வரும். ஆனால் அவற்றின் ஊற்றுமூலங்களைப் பார்த்தால் உள்நோக்கங்களைப் புரிந்து கொள்லாம். ஏனெனில் இவை எல்லாவற்றையும் புலிகள் தமது நாசகார அரசியலுக்காக பாவித்துள்ளார்கள்.
ஆனால் உண்மையிலேயே தமிழ் சமூகத்தில் ஜனநாயமும், உயர் மானுட விழுமியங்களும் தளைக்க வேண்டும் என்ற நோக்கில் செய்றபட்டு பல்வேறு வகையில் இன்னல்களுக்கு முகம் கொடுத்த நபர்களும் சக்திகளும் இன்னமும் எஞ்சியுள்ளன. அந்தப்பணியில் புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் பாரிய, ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை அவை சந்தித்தும் உள்ளன. அவர்களிடம் இருந்து கருணாவை நோக்கி வரும் விமர்சனங்களை எப்படி பார்ப்பது என்பது தொடர்பாக கருணாவும் அவர் சார்ந்த அரசியல் அணியும் வித்தியாசமாகவே பார்க்க முயற்சிக்க வேண்டும்.

கருணாமீதும் அவரது கட்சியனர் மீதும் விமர்சனங்களை வைக்கும்போது நாம் சில நம்பிக்கைகளுடனேயே வைக்கலாம். அதற்கு காரணங்களும் உண்டு. அதில் குறிப்பாக கடந்த மூன்று வருட அவரது செயற்பாடுகள் பிரதானமானவை. புலிகளில் இருந்து பிரிந்து சொற்ப காலம் சென்றவுடனேயே கருணா தனது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாக வைத்தார். கிழக்கில் ஏனைய தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகளுடன் முரண்படாத வகையில் செயற்படுவதற்கான சூழலை உருவாக்குதில் முயற்சி எடுத்து வருகிறார்.

முஸ்லிம் சமூகத்துடன் அடிக்கடி வரும் முரண்பாடான நிலைமைகளில் இயன்றளவு விரைவாக பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான இணக்கப்பாடுகளை காண முயற்சிக்கிறார்.
கடந்த காலத்தில் தான் புலிகளோடு சேர்ந்திருந்து செய்த தவறுகளுக்கு மனம் வருந்துவதாக பகிரங்கமாக கூறுமளவுக்கு பக்குவப்பட்டுள்ளார். (அண்மையில் பீ.பீ.சீ. பேட்டியில்)
ஐ.நா. சபை, ர்சுறுஇ ருNஐஊநுகு ஆகியவை கருணா குழுவினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக சிறார்களைப் படையில் சேர்ப்பது பற்றி வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, இச்சர்வதேச அமைப்புக்களுடன் உடனடியாக (24 அல்லது 48 மணி நேரத்திற்குள்) தொடர்பு கொண்டு பேசுமளவுக்கு தன்னிடம் அரசியல் நாகரீகமும் தற்றுணிவும் இருப்பதை கருணா வெளிக்காட்டியுள்ளார். (பார்க்க ர்சுறுவின் அண்மைய அறிக்கை)
தனது அமைப்பில் உள்ளவர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மானிட விழுமியங்களுக்கு எதிராக தவறு விடும் பட்சத்தில் அவர்கள் தொடர்பாக எடுக்கும் ஒழுக்க நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை அச்சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கி, அதனை மேலும் செழுமைப்படுத்துவது தொடர்பாக அவ்வமைப்புக்களுடன் பேசிவருகிறார். (பார்க்க ர்சுறுவின் அண்மைய அறிக்கை)
தனது இராணுவ அணிக்கு சமனாக அரசியல் கட்சியையும் ஆரம்பித்து இனிவரும் தேர்தல்களில் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் போட்டியிடுவதற்கும், மக்களின் வாக்குகள் மூலம் அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்குமான முயற்சியில் இறங்கியுள்ளார்
மேலே சொன்ன இந்த அம்சங்கள் எல்லாவற்றிலும் உடனடியாக நுற்றுக்கு நூறு வீதம் கருணா சரியா செயற்படாவிட்டாலும், கிழக்கின் அரசியலை ஒரு ஜனநாயகப் பண்பு மிக்கதாக கொண்டு செல்வதற்கான அத்திவாரங்களை போடுவதற்கு கருணாவை நாம் உந்த முடியும். கருணாவும் அவரது அரசியல் கட்சியும் மேலும் வலுவாக அந்தத் திசையை நோக்கி பயணிக்கச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கிலும் நம்பிக்கையிலும் நாம் கருணாவை விமர்சிக்கலாம்@ விமர்சிக்க வேண்டும். அதில் தப்பில்லை, அதில் அரசியல் தவறுமில்லை. நாம் கருணாவின் எதிரிகள் அல்ல.

ஜனநாயக சக்திகளின் விமர்சனங்களை உள்வாங்குவது கருணா அணியினருக்கு நிட்சயம் பலம் சேர்ககும்


www.Thenee.com

Saturday, December 16, 2006

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால்

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால் மாண்டுபோன பாலசிங்கம்

- எஸ். மனோரஞ்சன்

-எவ்வாறாயினும், எனது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பெரும் அவலங்களொடு ஒப்பிடுகையில் எனது நோயானது ஒரு வெறும் துரும்பென்றே சொல்ல வேண்டும். - -அன்ரன் பாலசிங்கம்-

ஒரு மாதத்திற்கு முன்னர்; பாலசிங்கம் கடும் சுகயீனமுற்றிருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற தமிழ் நெற் ரிப்போட்டர் ஒருவரிடம் பாலசிங்கம் கூறியதாக அந்த இணையத்தளம் நவம்பர் 22ம் திகதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாலசிங்கத்திற்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப்பற்றியும் அவ் இணையத்தளம் பினவருமாறு எழுதியிருந்தது.

இந்தமோசமான புற்றுநோய் மிக அரிதாகவே வரக்கூடியதென்றும், இந்தப் புற்றுநோயால் அவரது உடலின் மிக முக்கிய பாகங்களான ஈரல், நுரையீரல். வயிற்றுப் பகுதி மற்றும் எலும்பு மச்சைகள் என்பன பாதிக்கப் பட்டிருந்ததாகவுமே இச்செய்தியின் சாராம்சம் குறிப்பிட்டிருந்தது.
பாலசிங்கத்தின் இழப்பு வேறெல்லாரையும் விட வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பேரிழப்பாக தெரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களும் அவரின் இழப்பால் சற்று கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். காரணம் புலிகளின் பிரதம பேச்சாளரும் மதியுரைஞருமாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி வெளியே உதிர்த்துவிடும் கருத்துக்களால் புலிகளுக்கு ஏற்பட்ட அவமானங்களும் இடைஞ்சல்களும் பலரும் அறிந்ததே.

புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அவ்வாறான கருத்துக்களை அவர் ஏன் எதிர்க்கின்றார் என்று பலரும் தலையைச் சொறிந்து கொண்டனர். ஆனால், பாலசிங்கம் அவற்றை அறியாமல் செய்யவில்லை, அறிந்து வேண்டுமென்றேதான் செய்கின்றார் என்பதுதான் பாலசிங்கத்தை நன்கு அறிந்த பல முன்னாள் புலி ஆதரவாளர்களின் கருத்தாகும்.
தனது புற்றுநோய் பற்றியும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அவலம் பற்றியும் அவர் நோய்ப் படுக்கையில் இருந்து இறுதியாக வெளியிட்ட கருத்துப்பற்றி பிரான்சிலும் கனடாவிலும் வசிக்கும் இரு முன்னாள் தீவிர புலி ஆதரவாளர்கள் என்னிடம் பேசும்போது இப்படிக் கருத்துக்கூறினர்.
-பாலா அண்ணை அந்தக் கதைக்குள்ளையும் ஒரு முக்கிய விசயத்தை நாசூக்;காகச் சொல்ல வருகிறார். அதாவது தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் புலி அரசியல் என்னும் புற்றுநோயும் அதனால் தமிழர்கள் பட்டுவரும் அளவில்லா துன்பங்களுடனும் பார்க்கும்போது தனக்கு பிடித்திருக்கும் நோய் சர்வ சாதாரணமானது - என்பதைத்தான் பாலா அண்ணா கூற முற்படுகின்றார் என்றனர். அவ்விருவரினதம் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் மனவோட்டம் நன்றாகப் புரிந்திருந்தது. அதேபோலத்தான் பாலசிங்கத்துக்குத்தான் பிரபாகரனின் மனவோட்டமும் மிக நன்றாகப் புரிந்திருந்தது. பிரபாகரனின் சிந்தனைப் போக்கைப்பற்றி பாலசிங்கம் அடிக்கடி பல்வேறு விதமாக பல்வேறு தொனிகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

பாலசிங்கத்தோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டிருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவருடன் பேசும்போது, இந்த முடியரசனிட்ட இருந்தும் வெடியரசனிட்ட இருந்தும் தமிழ் சனத்துக்கு இனி விமோசனமில்லை நானாவது கெதியா உவங்களிட்டையிருந்து கழரவேணும் என்றாராம் பாலசிங்கம்.

யார் பாலா அண்ணை முடியரசன்;? யார் வெடியரசன்? என்று மற்றவர் வினவ...
என்னடாப்பா முடியரசனைத் தெரியாதே. அதுதான் எங்கட கட்டைக் குத்தியன்;. வெடியரசன் தான் உந்த நாசமாய்ப்போவான் பொட்டன். அட.. தம்பி இவன் முடியரசனை திருத்தினாலும் திருத்தலாம்போல கிடக்கு. ஆனால் அந்த வெடியரசனோடயெல்லா ஒண்டும் செய்ய ஏலாமக் கிடக்கு. அவன் சுட்டுத்தள்ள நான் எல்லா உலகத்துக்க பதில் சொல்வேணும். இது இந்த முடியரசன் கட்டைக் குத்தியனுக்கும் இது விளங்குதில்லை. அவனுக்கு ஏதாவது சொல்லப்போனா...

ஒண்டுக்கும் யோசியாதையுங்கொ பாலா அண்ணை...எல்லாம் சரிவரும்.. எண்டுபோட்டு ஹீ..ஹீ..என்டு இளிக்கிறான் அந்த மூதேசி... நாய்... என்று பாலா அண்ணை அரை மணித்தியாலமாக தொலைபேசியிலை பொரிந்து தள்ளினராம்.

அன்று பாலா அண்ணை தொலைபேசியில கதைச்சதை அப்பிடியே ரெக்கோட்; பண்ணி வன்னிக்கு அனுப்பினால் அதோட பாலா அண்ணையிட கதை சரியாப் போயிருக்கும். என்றார், அந்த முன்னாள் புலி ஆதரவாளர் என்னிடம். பாலா அண்ணையொடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள் பலரிடமும் கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை அவர்கள் இரகசியமாக வைத்திருந்த நல்ல காரியத்தால்தான், பாலா அண்ணை இவ்வளவு காலமும் உயிரோடு இருந்தார் என்று சொன்னாலும் தப்பில்லைதான்.

மற்றொரு சம்பவம்

1990ல் இருந்து 1994வரை யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு பிரேமதாசா அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவட்டு அங்கு சென்றுவந்தனர். அவ்வாறு சென்ற ஒரு இந்திய தமிழ் பத்திரிகையாளருக்கும் பாலசிங்கத்திற்கும் நடந்த உரையாடல் மிக சுவாரசியமானது.

பாலசிங்கம் இந்தியாவில் இருந்த காலத்திலேயே அப்பத்திரிகையாளரை பாலசிங்கத்திற்கு நன்கு அறிமுகமாதலால் அப்பத்திரிகையாளருக்கு பாலசிங்கத்தின் வீட்டில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. அங்கும் வழமைபோல் பாலசிங்கம் தனது பிளாக் அன்ட் வைற் விஸ்கியை உடைத்துப் பரிமாறினார். பாலா அண்ணருக்கு ஓரிரு சுற்று விஸ்கி தாராளமாக உள்ளே இறங்கியதும் பத்திரிகையாளர்; பாலசிங்கத்திடம் இப்படிக் கேட்டார்.

ஆமா இப்பிடியே தொடர்ந்து யுத்தத்தை புடிச்சிக்கிட்டிருந்து ஒங்க தலைவர்; என்னதான் பண்ணப்போறாரு..மக்கள்தானே அதிகமா அழிஞ்சு போறாங்க...எனக்குன்னா ஓங்க தலைவரு என்னா சிந்திக்கிறாரன்னெ புரியமாட்டேங்குது.. என்றார்.

உடனே பாலா அண்ணர்; இடை மறித்து அடேயப்பா...அவர் மற்றவைக்குத்தான் தலைவர் எனக்கொண்டும் தலைவரில்லை நானில்லாட்டி இம்மட்டுக்கு அவர் எப்பவோ சரி. அதைவிடு... என்ன சொன்னீர் உமக்கு அவர் என்ன யோசிக்கிறார் என்றே விளங்க இல்லையோ..? அடே தம்பி... அவனோட 15 வருசத்துக்கு; மேல ஒண்டா இருக்கிற எனக்கே அவன் எந்த நேரம் என்ன செய்வான் எண்டு விளங்குதில்லை. உனக்கென்ணென்டு விளங்கிறது? என்றாராம்.

அதில்லீங்க மிஸ்டர்; பாலா... இந்தியாவையும் எதிர்த்துக்கிட்டு... உலக நாடுகளிட்டையும் கெட்ட பேர்; எடுத்திக்கிட:டு எப்பிடி ஒரு போராட்டம் வெற்றி பெறப்போவுது. யாராவது ஒருத்தரோட நட்பா இருக்க வேணாமா? என்றார் பத்திரிகையாளர்.

அட நீர் ஒண்டப்பா... காட்ட மிருகங்களை பற்றி படிச்சிருக்கிறீரா? எல்லா மிருகமும் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்துதான் வாழும். இந்தப் புலி இருக்குதே அது மட்டும் எப்பவும் தனியாத்தான் வாழ்க்கை நடத்தும். அதவேறந்த மிருகத்தையும் நம்பாது. அதை நம்பி வேறெந்த மிருகமும் கிட்டவும் வராது. அதமாதிரித்தான் இவங்களும்...என்றார் பாலசிங்கம்.
அப்பிடீன்னா இவங்கள நம்பி யார்தான் உதவி பண்ணப் போறாங்க. இந்தப் போராட்டம் என்னாகிறது? என்ற கேட்டார் பத்திரிகையாளர்.
இவங்களை நானே நம்பிறதில்லை...வேற யார் நம்புவான் சொல்லு பாப்பம். அட தம்பி நாங்கள் பிரேமதாசாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவரோட போய் கதைக்கச் சொன்னவனும் இவன்தான்.ஆனால் நாங்கள் முக்கியமான 6,7 பேர் அங்க கொழும்பில நிக்கையிக்க இவன் சண்டையை துவக்கி விட்டிட்டான். அண்டைக்கு அமைச்சர் ஹமீட் இல்லாட்டி நாங்கள் துலைஞ்சிருப்பம். இவனை நம்பேலாது தம்பி... என்று பாலசிங்கம் சொல்வதை பரிதாபமாக கேட்டவிட்டு அந்த பத்திரிகையாளர் திரும்பி வந்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகின்றது? பாலசிங்கம் ஒன்றும் விளங்காமல் புலிகளோடும் பிரபாகரனோடும் இருந்தவரல்ல. நன்றாக எல்லாவற்றையம் தெரிந்து கொண்டு புலிகளின் சகல நாசகார அரசியலுக்கும் துணைபோனதுடன் அந்த நாசகார அரசியலை நியாயப்படுத்தி வந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே தமிழ் சமுகத்தைப் பீடித்திருக்கும் புலி அரசியல் என்னும் சமூகப் புற்றுநோயினால் தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு அவரும் பிரதான காரணகர்த்தாவாகும்.

பாலசிங்கம் பற்றி பழைய கதையொன்று

பாலா அண்ணர் என்கின்ற பாலசிங்கம் மதியுரைஞர் என்ற இந்த நிலைக்கு உயருவதற்குள் சந்தித்த சோதனைகள் பல. அவர் ஒரு சிறுநீரகத்தை இழந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் யாவரும் அறிந்த சோதனை@ அறியாத சோதனைகள் பல. அவற்றில் சில மிகச் சுவாரசியமானவை.
1985ம் ஆண்டு சென்னை வடபழனியில் நுNடுகு என்று அழைக்கப்படும் ஈழதேசிய விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திம்புப் பேச்சு வார்த்தைகளுக்கு போவதற்கு சில நாட்களுக்கு முன் இது நடந்தது. ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர இந்தியா முயன்று, இறுதியில் திம்பு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு போவதா விடுவதா என்பதில் ஆயுதமேந்திய தலைவர்களுக்குள் இழுபறி நடந்தது.

இச் சம்பவம் நடந்த அன்று திம்பு மாநாட்டுக்கு போவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நான்கு இயக்க தலைவர்களும் அங்கு கூட சம்மதித்து இருந்தனர். சிறீ சபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா ஆகிய மூவரும் தத்தமது இயக்கங்களின் முடிவுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திம்பு பேச்சுக்கு போவது ~சரி என்ற முடிவுடன் வந்திருந்தனர். அங்கிள் பாலாவும் தம்பி பிரபாகரனும் சற்று நேரம் தாமதித்தே அங்கு வந்தனர்.

எல்லோரும் அவரின் முடிவை சொல்லும்படி கேட்டனர். தம்பி பிரபாகரன் கூறியது இதுதான் நான் இப்பொழுதுதான் எனது பிள்ளையின் தலையில் (சார்ள்ஸ் அன்ரனி) பிஸ்டலை வைத்து சத்தியம் பண்ணிவிட்டு வருகிறேன். எனக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நான் இந்த மாநாட்டுக்கு வரப்போவது இல்லை. என்ற முடிவை சொன்னார். உடனே சிறீ சபாரத்தினமும் தம்பி போகா விட்டால் நானும் போகப்போவது இல்லை என்றார். இதைச் சொன்னதும் சகலருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அடுத்ததாக பத்மநாபாவும், தம்பியும் சிறியும் போகாவிட்டால் நானும் போகவில்லை என்றவுடன் பாலகுமார் சற்று கொதித்துப் போனார். அவர் சிறீ சபாரத்தினத்தையும் பத்மநாபாவையும் நோக்கி பொறுப்பு இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் போவதாகவே தீர்மானித்தீர்கள், இப்போது உங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். போகாவிட்டால் வரும் விளைவு உங்களுக்கு தெரியுமா? என்று இரைய ஆரம்பித்தார்.

தொடர்ந்து சகலரும் தம்பி பிரபாகரனுக்கு நிலைமையை விளக்கி, அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்போது பாலா அண்ணர் பேசத் தொடங்கினார். தம்பி, இவையள் எல்லாரும் சொல்லுறதைப் பார்த்தால் நாங்கள் போகாமல் விடுவது சரியில்லை. நாங்கள் எல்லாருமாக திம்புவுக்கு போய் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துவிட்டு வருவோம் என மதியுரை வழங்க முயற்சித்தார்.
உடனே வெகுண்டெழுந்த தம்பி பாலா அண்ணை தயவு செய்து வாயை மூடிக்கொண்டு இருங்N;கா என்ர தீர்மானத்தை சொல்லத்தான் உங்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து நீங்கள் நினைத்ததை பேச முடியாது. உங்களைப்போல எத்தனை பேரையும் நான் விலைக்கு வாங்குவேன். என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கர்ச்சித்தார். தம்பியின் கை அவரை அறியாமலே இடுப்பை நோக்கி போய்வந்ததை அவதானித்த பாலசிங்கம் ஒருமுறை வெலவெலத்துப் போனாராம்.

அசடு வழிய பத்மநாபாவையும் சிறீ சபாரட்ணத்தையும் பாலகுமாரையும் பார்த்த பாலா அண்ணர் நாய்க்குட்டிபோல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். மறுநாள் பாலா அண்ணரைக் கதைத்து சமாதானப் படுத்தி மீண்டும் சகலரும் ஒற்றுமையாக திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் விடயத்தை மேற்கொள்வதற்காக பத்மநாபா பாலசிங்கத்தைச் சந்திக்க சென்றார். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சென்னையில் ஒரு தொங்கலிலிருந்த கோடாம்பாக்கத்திலிருந்து மறு தொங்கலிலிருந்த அடையாறை நோக்கி தன் சக தோழர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர்ந்தார் பத்மநாபா.

பாலா அண்ணரும் ஆன்டி அடேலும் பத்மநாபாவை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கிள் பாலா வழமைபோல் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க தனக்கு பிடித்தமான கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி போட்ட விஸ்கியை சுவைத்த வண்ணம் வாரும் நாபா உம்மட்ட கதைக்க வேண்டும் எண்டுதான் இருக்கிறன் என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். புத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலெயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது... விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி எப்படிக் காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் ப+மிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை.
அனரறி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை! இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அனரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்படடிருந்த சிறுவன் மூலமாகவும் அவரது வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும்; கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம்.

இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால் அவர்; நக்கிப் பிழைக்கும் நாய்தான். தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும்; ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை.
பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம்

இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவாhத்தைக்கு சென்ற பாலசிங்கம் இப்படிக் கூறினார். றுந றடைட மடைட. வுhயவ ளை ழரச தழடி... புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய உருவத்தைக் காட்டி நிற்பார்.

பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல.
கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பால சிங்கத்தின் மதியுரைஞர் பணி. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.
ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்;க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின் விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கபடும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே.

தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார். எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி. மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.
பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன. இதுதொடர்பான விடயங்களை மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

Monday, December 04, 2006

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?

1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது தீவட்டி ஊர்வலம் கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் து}ண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் து}ண்டி ஒரு பெரிய கலவரத்தைத் து}ண்முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை இலங்கைத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும் நேசத்தையும் பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. அதே தமிழகம் பற்றி எரிந்தது மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.
ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம் அறிவு ரீதியாக இல்லாமல் உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் து}ண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும் ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு களுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக து}ண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும் பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி.க. நெடுமாறன் பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.


அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சு10ழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சு10ழலில் எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ து}ண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள் ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும் தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும் துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ அஸ்ஸாம் போலவோ ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி.க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள் நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி.மு.க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா.ம.க விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சு10ழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.

1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை து}க்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சு10ழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சு10ழல் எம்.ஜி.யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும் மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார். எஸ்.பி.சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவன் மீண்டும் வந்தான். அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.
பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட பிந்தரன்வாலே விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம் அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும் பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும் பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.
தனது அன்னை துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது உரிய அறிவு இல்லாமல் அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ்காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.
ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும் வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும் சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சு10ழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும் உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.


ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினைசக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி.மு.கவின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி.வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களை உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால் இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி இனம் மூலம் மக்களை து}ண்டும் அரசியலை அவ்வளவாக விரும்பமாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சு10ழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர்.

மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சு10ழலில் 1983ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்குதமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் து}ண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்ணம் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?
இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும். இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும்? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா.ம.க விடுதலைச் சிறுத்தைகள், தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் து}ண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால் பொது மக்களின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களைப் புறக்கணித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும் மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும் பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும் நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் து}ண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களையும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை.


அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால் பழைய 1983போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. விடுதலைசிறுத்தைகள்,பாமக, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும் புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும். அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர். மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.
புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.


ரரக்கெட் லாஞ்சரில் இருந்து விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ்நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.
தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள் கன்னடர்கள் மலையாளிகள் அடித்து துரத்தப்படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை. தமிழ்நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது.
இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ ஒரு நாகலாந்தையோ ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா? நமக்கென்றால் வெண்ணை இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும் அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாகிஸ்தானை எதிர்க்க முடியும்? இரட்டை வேடமாகி விடாதா நமது கோரிக்கை. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம் தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது.
ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.
இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால் இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல நிதர்சனம் இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ளநரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும் இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும்இ சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் 1.இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன் சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.4. அந்த மாநிலத்துக்கு கல்வி அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்துஇ தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.


ஜெய்ஹிந்த்வந்தே மாதரம்.

http://jataayu.blogspot.com

Monday, November 27, 2006

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள்

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள் விரோதமானது

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பாதை மூடப்பட்டதால் யாழ் குடாவில் வாழுகின்ற சுமார் 5லட்சம் மக்கள் மோசமான உணவு,மருந்து,எரிபொருள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், சுதந்திரமான போக்குவரத்து தகவல் தொடர்பு இன்மையாலும் அல்லப்படுவது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

நோக்கங்கள் வௌ;வேறாக இருப்பினும் இப்பாதையைத் திறக்கும்படி யாழ்ப்பாணமக்கள், விடுதலைப் புலிகள், தென்னிலங்கை மனிதாபிமான சக்திகள் என்பன வேண்டுகோள் விடுத்தவ்ணம் உள்ளன. இப்பொழுது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் வாசிங்டனில் கூடிய பொழுது இவ்வாறானதொருவேண்டுகோளை விடுத்துள்ளன.
ஏ - 9 வீதிய10டாக பொருட்கள் கொண்டு செல்லும் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடுவதையும், தமக்கு விரோதமானவர்களைக் கடத்துவதையும் கைவிடுவதாக உறுதியளித்தால் பாதையைத் திறக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. பலிகளைப் பொறுத்தவரை இவை இரண்டையும் அவர்கள் என்றுமே கைவிடப்போவதில்லை. அப்படிப்பார்த்தால் இப்பாதை என்றுமே திறக்கப்படப்போவதில்லை என முடிவாகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது தானா?
புலிகள் அமைப்பு ஒரு பாசிச இயக்கம். அதற்கு அதன் சொந்த மக்களைப் பற்றியே எந்தவித அக்கறையும் கிடையாது. தேசியஇன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ள இயக்கம் என்றால் அது விடுதலைப் புலிகள் மட்டும்தான். சமீபத்திய ஆய்வொன்றின்படி இலங்கை இராணுவம் கொலை செய்த தமிழ் மக்களைவிட புலிகள் கொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு எனத் தெரியவருகின்றது. (அரசாங்கப் படைகளுடன் போரிட்டு மடிந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை)

எனவே இப்பாதை திறப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமது கட்டப்பாட்டிலிருக்கும் தனது சொந்தக் குடிமக்களான 5 லட்சம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றது என்பதே கேள்வியாகும். ஏனெனில் இம் மக்கள் 1995 அக்டோபர் 30ம் திகதி புலிகளால் பலவந்தமாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் வேண்டுகோளை ஏறறு வன்னி செல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு வந்து மீளக் குடியேறியவர்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
ஏ- 9 பாதை மூடப்பட்டிருப்பதால் புலிகளுக்கு மாதாந்தம் கிடைத்துவரும் சுமார் 30 கோடி ரூபா இழப்பு ஏற்படும், அது புலிகளைப் பாதிக்கும் என அரசாங்கம் தான் பாதையை மூடிவைத்திருப்பதற்கு நியாயம் கூறுகின்றது. புலிகளின் மாதாந்த வருமானம் ஆக இந்த 30 கோடி ரூபா தானா? இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்கிடமானதுமான கருத்தாகும்.

புலிகளின் வருடாந்த நிகர வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாக்கள் என மேற்குநாட்டு உளவு அமைப்புகளே கூறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற லட்சக் கணக்கான தமிழ் மக்களிடமிருந்து புலிகள் மிரட்டிக் கறக்கின்ற பணம் கோடிக்கணக்கான ரூபா. இதுதவிர புலிகள் சர்வதேச hPதியாக நடாத்துகின்ற போதைவஸ்து வியாபாரம், ஆயுத வியாபாரம், கப்பல் போக்குவரத்து வியாபாரம் என்பனவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபா (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு கூலியாக மேற்கு நாடொன்றிடமிருந்து பலநு}று கோடி ரூபாவை புலிகள் பெற்றதாக கூறப்படுகிள்றது)
இதுதவிர நோர்வேயும் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் புலிகளுக்கு ஒழுங்கான முறையில் பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்.

கொழும்பு, யாழ்பாணம் போன்ற அரசாங்கக் கட்டுப்பாட்டு நகரங்களிலும் ஏன் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும்கூட புலிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் பலகோடி ரூபா முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். (இலங்கையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இராணுவ ரகசியங்களை புலிகள் கறப்பதும் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளுக்கே புலிகள் லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் புலிகளின் அசுர உள்நாட்டு வெளிநாட்டு பணபலத்துக்குச் சான்றாகும்) கனடாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பெரும் சுப்பமார்கேட்டுக்களை புலிகள் நிர்மாணித்திருக்கிறார்கள்.
கனடாவில் கடந்த லிபரல் அரசாங்கத்தில் அதிமுக்கிய பதவி வகித்த ஒருவரின் மகன் நாடாத்தும் சர்வதேச கப்பல் கம்பனி ஒன்றில் புலிகளும் ஒரு பங்குதாரர்கள் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர புலிகளின் முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகம் முழுவதும் பலகோடி ரூபாவை புலிகளுக்காக திரட்டி வருகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் மக்களுக்கு அரசாங்கமே நிவாரணப்பொருட்களை அனுப்புகின்றது. புலிகள் அங்குள்ள கிராமசேவகர்கள் மூலம் கூடுதலான ஆட்களின் பெயர்களை பதிவு செய்து தமது உறுப்பினர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுப்பது ரகசியமானது அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றினதும் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனுப்பும் பணத்தை புலிகளே சூறையாடுகிறார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற்படும் அரச ஊழியர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட, அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.
இத்தனை வழிகளிலும் புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் எத்தனைகோடி ரூபாவாக இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள். இவையெல்லாவற்றையும் அரசாங்க நியாயப்படி நிறுத்தவல்லவா வேண்டும்.உண்மையில் புலிகளின் மொத்த மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா அவர்களது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே ஏ-9 பாதையை அரசாங்கம் மூடிவைத்திருப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கம் கூறுவதுபோல புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. இராணுவ hPதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

புலிகளைப் பொறுத்தவரையில் ஏ- 9 வீதியைத் திறப்பதால் வரிப்பணம் கிடைப்பது மாத்திரமின்றி போதிய பொருட்களைப் பெறமுடியும் என்பதும் மாத்திரமின்றி தென்னிலங்கைக்கும் யாழ்பாணத்திற்கும் தமது புலனாய்வாளர்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஆயுதங்கள் என்பனவற்றை கடத்த முடியும் என்பதும் பிரதானமானது. ஆனால் ஏ - 9 பாதை இல்லாவிட்டாலும் (சற்றுச் சிரமம் இருப்பினும்) புலிகளால் அவற்றைச் செய்ய முடியும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். எனவே ஏ - 9 பாதையை மூடியதன் மூலம் பொருளாதார hPதியிலும் இராணுவ hPதியிலும் புலிகளை முடக்கிவிட முடியும் என அரசாங்கம் கருதுமாக இருந்தால் அது தப்பான கருத்தாகும்.

உண்மையில் ஏ- 9 பாதையை மூடியதால் புலிகளைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாழ் குடாநாட்டு மக்களே. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டுள்ளது. போதாததற்கு புலிகளுக்கு லட்சகணக்கில் கப்பம் செலுத்தும் யாழ் வர்த்தகர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து பொது மக்களிடம் ஈவிரக்கமின்றி கொள்ளை லாபம் அடித்துவருகின்றனர். வெளிநாட்டு வருமானம் உள்ள யாழ் குடாநாட்டு மக்களே இன்றைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் கதி என்ன? அரசாங்கத்தின் இந்தவகையான சமயோசிதமற்ற, மக்கள் விரோத செயற்பாடுகள் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களை அரசுக்கு எதிராக திரும்பவும் வைத்துள்ளது. புலிகளின் செயற்பாடுகளுக்காக யாழ் குடாநாட்டு மக்களை அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் பழிவாங்குவதற்கு முற்படுவதுபோல் தெரிகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அதன் இன்றைய வளர்ச்சிக்கும் காரண கர்த்தாக்கள் யாழ் குடாநாட்டு மக்கள் அல்ல. புலிகளை வளர்த்துவிட்டவர்கள் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே.

தமிழ் மக்கள் தமது தேசியப் பிரச்சினைகளை சாத்வீகமாக தெரிவித்தபோது அதை தீர்ப்பதற்கு பதிலாக இராணுவ ஒடுக்குமுறையை பிரயோகித்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது அரசாங்கமே. குறிப்பாக 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர், ஜெயர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே இன்றைய யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி ஆகும். இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் என்ற உலகின் மிகக் கொடூரமான பாசிச இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தின் தோற்றத்தினாலேயே செயற்பாடுகளினாலும் உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் அல்ல, தமிழ் - முஸ்லீம் மக்களே. இந்த இயக்கத்தின் செயற்பாடுகளால் தமிழினம் தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து நாடோடி அகதிகளாக மாறியுள்ளதுடன் சாதாரண மனித வாழ்வையும் இழந்துள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறுமனே இராணுவ hPதியான நடவடிக்கைகளால் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என கருதிச் செயற்படுவது ஒருபோதும் வெற்றியளிக்ப்போவதில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கமாக இருந்த போதிலும் அவர்கள் தமது இருப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவே அரசின் தவறான செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் கணிசமான ஒரு பகுதியினர் புலிகளின் பக்கமே நிற்கின்றனர். அத்துடன் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற போர்வையில் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக சர்வதேச சக்திகளுகம் நுழைந்துவிட்டன.

எனவே உண்மையில் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கவும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்குமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே. அரசியல் தீர்வுடன் இணைத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் வெற்றி பெறுவது நிட்சயம். அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் இவ்வாறான ஏ- 9 வீதி மூடுவதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும். எது எப்படியிருப்பினும் தனது பிரசைகளான யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களைப் போல பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்வதும், அவர்களது சுதந்திரமான போக்குவரத்தை உத்தரவாதம் செய்வதும் புலிகளின் கைகளில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை அரசாங்கம் எக்காரணம் கொண்டு தட்டிக்கழித்துவிட முடியாது.

Thanks: Thenee.com

Thursday, November 23, 2006

உதவி கோருகிறார்கள்!

உதவி கோருகிறார்கள்
- நமது நிருபர்

ஜேர்மனியிலுள்ள தமிழ் நண்பர்கள் பரோபகார சிந்தையுள்ள இலங்கை தமிழ் அன்பர்களிடமிருந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தமது நண்பர் ஒருவரின் வைத்திய செலவுக்காக உதவி கோருகிறார்கள். பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன் என்னும் இயற்பெயருள்ள இந்த நண்பர், நோய் அதிகரிக்கும் நேரங்களில் ப.வி.சிறீரங்கன் அல்லது எண் சோதிடரின் ஆலோசனைப்படி மாற்றிய ப.வி.ஸ்ரீரங்கன் என்னும் பெயர்களால் இணையத்தளங்களில் நீண்ட கட்டுரைகள் எழுதி வருபவராவர்.

மேற்படி நண்பர் நீண்ட காலமாக ~புலிக்குனியா தேனீபோபியா என்னும் விலங்குகளை மட்டும் பீடிக்கும் ஒருவித மனநோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், ஜேர்மனியில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எவையும் பலன் தராமையால் இறுதி முயற்சியாக கேரளாவிற்கு வைத்தியத்திற்கு அழைத்துச் செல்ல அன்னாரது நண்பர்கள் விரும்புவதாகவும் அதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகவும் பரோபகார சிந்தையுள்ள நண்பர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.

ஸ்ரீரங்கனின் நோய்குணம் பற்றி மேலும் அறியவருவதாவது, இவர் நீண்ட காலமாக மேற்படி நோயினால் பீடிக்கபட்டு வந்துள்ளதாகவும், இவ்வருட நடுப்பகுதியிலிருந்து இந்நோய் அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலி எதிர்ப்பாளர்களை கடுமையாக சாடிவந்த இவர் திடீரென புலிகள் தன்னைக் கொலை செய்ய வருவதாக கடடுரைகள் எழுதி வந்ததாகவும், பின்னர் வன்னிக்கு வர டிக்கற் தருமாறு கோரி இணையத்தளங்களில் கட்டுரைகள் எழுதியதாகவும் கூறப்;படுகிறது. இவ்வாறான கட்டுரைகளை இவர் இரவில் திடீரென நித்திரையிலிருந்து எழும்பி எழுதுவதாகவும், குறிப்பாக 31.5.2006 அன்று நடுச்சாமம் 2.11 மணி என இவரே குறிப்பிட்டு ~என்னைத் தேடும் புலிகள் என்ற தலைப்பில் தமிழ் அரங்கம் என்னும் இணையத்தளத்தில் இவர் எழுதிய கட:டுரையை இவ் இணையத்தளத்தில் இப்போதும் பார்வையிடலாமென இவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

மேற்படி புலிகள் தன்னைக் கொலை செய்ய மிரட்டுவதாக ஸ்ரீரங்கனின் முறைப்பாடுதலைத் தொடர்ந்து, புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் பொறுப்பாளர்களுடன் அன்னாரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இப்படியொரு நபரைப்பற்றி தாம் முன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டது இல்லை எனவும், தாம் கேள்விப்படாத ஒருவரிற்கு எதிராக தாம் எவ்வாறு கொலைப்பயமுறுத்தல் விடலாம் என கேட்டதாகவும் தெரிய வருகிறது.

மேற்படி நண்பரிற்கு கேரள வைத்தியம் பலனளிக்கும் பட்சத்தில் தமிழ் அரங்கம் இணையத்தள ஆசிரியரையும் சிகிச்சைக்காக கேரளாவிற்கு அழைத்துச்செல்ல அவர்களது நண்பர்கள் விரும்புவதால், தாராள சிந்தையுள்ளவர்கள் சமூக நலன் கருதி மனம் உவந்து உதவுமாறு கோரப்படுகிறார்கள்.

Sunday, November 05, 2006

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப்

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப் புளுகர்கள்

பேரறுஞர்; கல்லாநிதி கியூறியஸ் ஜி

புலிகள் ஆபத்தான பிராண்pகள் என்றால் அவர்களின் ஆதரவாளர்கள் இன்னொரு ரகம்,,, வினோதமான பிராண்pகள், இவர்களை எல்லாம் விழுங்கி விடக் கூடிய ரகம் ஒன்றுணடு,, அது தான் புலிகளின் ஊடகங்களில் அரசியல் ஆய்வு எழுதும் ஆய்வாளர்கள், விஷ ஜந்துக்கள்? வினோதமான பிராண்pகளைத் தொற்றும் விஷக் கிருமிகள், சீமான்கள் வஞ்சகமில்லாமல் வாசிப்பவன். கேட்பவன் எல்லாம் காதில் பூ வைத்த இளிச்சவாயன் என்ற நினைப்பில் கவலையே இல்லாமல் எழுதிக் குவிப்பார்கள், அல்லது வானலைகளில் முழங்கித் தள்ளுவார்கள், இணையம். வானலை. அச்சு வழி ஊடகங்கள் எல்லாம் தமிழ் எழுத்துடன் கூடிய கணனி வைத்திருக்கும் எல்லோரையுமே அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கித் தொலைத்திருக்கின்றன, அதற்குள் சில மாஜிப் பேராசிரியப் பெருமக்களும் புனைபெயருக்குள் ஒளிந்திருந்து எம் பெருமான் கடைக்க பார்வை திரும்பாதா என தினமும் குரல் எழுப்புவதாக வேறு வதந்திகள்,

புலிகளை விமர்சிப்பவர்களுக்குத் தான் உயிர்ப் பயம் என்று இல்லை, புலிகளுக்கு ஆதரவாக எழுதித் தொலைப்பதைக் கூட சொந்தப் பெயரில் எழுதப் பயந்து புனைபெயரிற்குள் மறைந்திருப்பவர்களும் கூட ஏதோ தங்களை சிங்கள புலனாய்வாளர்;களோ. ஒட்டுக்குழுக்களோ மண்;டையில் போட்டு விடக் கூடும் என்ற பயத்தில் தான் வாழுகின்றனர்;, இவர்;களுடைய ஆய்வுக் கட்டுரைகள்,, இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் தான், சம்பூரில் புலிகள் அடி வாங்கி தப்பியோடிய முழுப்பூசண்pக்காயை சோற்றில் புதைத்து டிசம்பூரில் பின்வாங்கல் நோர்;வேயை பொறிக்குள் சிக்க வைத்த புலிகளின் தந்திரம் என்று புதினத்தில் ஆய்வுக்கட்டுரை எழுத இவர்;களால் மட்டுமே முடியும்,
புலிகளின் ஆதரவாளர்;களை அழுது கொண்;டே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி புல்லரிக்க வைப்பது தான் இவர்;களின் முதன்மையான நோக்கம், அப்புறமாய். அதை தமிழ்ச்செல்வனோ மற்றும் முக்கியஸ்தர்;கள் வாசித்து தங்களைப் பாராட்ட வேண்;டும் என்றோ. அல்லது தலைவரின் காதில் போட்டு (பின்னே என்ன தலைவருக்கு இதெல்லாம் வாசிக்க எங்கே நேரமிருக்கிறது இங்கிலிசுப் படம் பார்;க்கவே அவருக்கு நேரம் போதாது,) வன்னிக்கு வரவழைத்து தேசப்பற்றாளராக்க வேண்டும் என்ற நோக்கம், அப்புறமாய். இதை வைத்தே காசு பண்ணும் ஒரு கூட்டம்,, கனடாவில் பக்கத்திற்கு நு}று டொலர்; என்று ஆலையில்லா ஊரில் சக்கரையாக பத்திரிகைகளுக்கு ஆய்வு சப்ளை பணணிpய யாசகனும் உண்;டு, மற்றும்படி முயக்கம். ஈனநாடு எல்லாம் இழுக்க இழுக்க இறுதிவரை,,,

சிரைச்சேதம் செய்யப்போன கடையில் கிடைத்த ஈனநாட்டில்,, சம்பூரில் யுத்தத்தில் பெரும் திருப்பம்,, தலையங்கம்? புறமுதுகு காட்டியது கூட புலிகளின் புத்திசாலித் தனத்தால் எழுந்த திருப்பம்,, ம்,, சிக்கல் என்னவென்றால்,, ஒரே விசயத்திற்கே புலிகளின் ஒவ்வொரு ஊடகமும் தன் புத்திக்கெட்டியவரையில் வியாக்கியானம் கொடுக்கும்,, ஆய்வாளர்;களின் அளப்பு இன்னொரு பக்கம்,, ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், அது பொதுவானதாக இருக்க வேண்;டும் என்ற கவலை யாருக்கும் இல்லை,
உதாரணம்,,, வெகுது}ரம் போகத் தேவையில்லை,, நம்ம நிதர்;சனம் இருக்கிறதே,,,
புலிகள்; கண்;டி வீதியைத் திறக்கும்படி ஜெனிவாவில் கேட்டுத் தான் பேச்சுவார்;த்தையை முறித்துக் கொண்;டு வந்தார்;கள்,, குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவை எதிர்;நோக்குவதாகக் கூறி. அரசியல் தீர்;வு பற்றிய பேச்சே இல்லாமல் வெற்றிகரமாக பின்வாங்கினார்;கள், குழந்தைகள் இராணுவத்தினரின் எச்சில் சாப்பாட்டுக்காக தவம் கிடப்பதாக வீரகேசரி தகவல் வெளியிட்டது, மொத்தத்தில் குடாநாடு எதியோப்பியாவின் நிலைக்கு வருவது போன்று தான் எல்லா ஊடகங்களும் விளாசித் தள்ளின, தாங்கள் தமிழ் மக்களிடமும் வர்;த்தகர்;களிடமும் பறிக்கும் வரிகளை எல்லாம் மூடி மறைத்து. மக்களின் அவலத்தை நீக்க பாடுபடுவது போல. இந்த பட்டினிச் சாவு அபாய அறிவிப்புச் சங்கு உலகெங்கும் புலிகளால் ஊதப்பட்டது,
இதையெல்லாம் பொருட்படுத்தாமல். இலங்கைக் கடல் நீர்; சிங்களவனுக்கு மட்டும் தான் சொந்தமா சிங்களவன் ஏ9 பாதையைப் பூட்;டி கடல் வர்;த்தகம் மூலமாக பல கோடி தமிழரின் பாணத்தைச் சுருட்டுகிறான் என்று. புலிகளின் கூக்குரல் எல்லாம் அந்தப் பணத்தை தாங்கள் சுருட்ட முடியவில்லையே என்ற அங்கலாய்ப்புத் தான் என்று புட்டுப் புட்டு வைத்திருக்கிறது, தற்போது எட்டுக் கப்பல்களின் உண்வு கொண்;டு செல்லப்படுவதையும் அதன் மூலம் சிங்களவன் மாதம் எட்டாயிரம் கோடி ருபா சம்பாதிப்பதாகவும் பாதையைத் திறந்தால் தமிழ் வர்;த்தகர்;கள் பத்துக் கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பார்;கள் என்றும் நிதர்;சனம் அழுதிருக்கிறது, (அருவருக்கத் தக்க வகையில் இந்த ஆய்வுக் கட்டுரையில் வந்த தாயின் தகாத உறவுகள் பற்றிய உரையாடல் ஒன்று பின்னர்; நிதர்சனத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது)
ஒருபுறத்தில் புலிகள் உண்வு போகவில்லை. பட்டினிச் சாவு தான் முடிவு என்று பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு வர. மறுபுறத்தில் நிதர்;சனம் லாப நட்டக் கண்க்குப் பார்க்கிறது, இது தான் புலி ஆதரவு ஆய்வாளர்;களின் இலட்சண்ம், முன்பு அரசியல் அவதானிகள் தான் எங்கும் இருந்தார்;கள், நல்லு}ர்;திருவிழாவில் நேர்முகவர்ணர்னை செய்யும் வானொலிக்காரர்;கள் மாதிரி,, எம் பெருமான் இப்போது தெற்கு வீதியில் வலம் வந்து கொர்;டிருக்கிறார்;, பக்தகோடிகளின் அரோகரா கோஷம் விண்;ணை;ப் பிளந்த வண்ண்ம் இருக்கிறது, அந்தக் கோஷத்திலே. வானமும் பெருக்கெடுக்குமோ என்ற பயம் தரும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்த வண்ண்ம் இருக்கின்றன, மக்கள் வெள்ளம் கடல் அலை போல மோதிக் கொண்;டிருக்க. தேர்; கப்பல் போல மிதந்து வரும் காட்சியைக் காணக்; கோடி கண்;கள் வேண்;டும்,, இதோ,, பக்தை ஒருவர்; மலர்;களை தட்டிலிருந்து வீசிய வண்ணம்…..
ம்,, ரேடியோவைக் கொஞ்சம் கூட்டி வைத்து அங்கப்பிரதிட்டம் செய்ய வேண்டியது தான்,, முடிந்தால். முன்னால் விபூதியையும் வைத்து உண்டியலையும் வைத்து விடலாம், பக்தியை வானலைகள் ஊடாக அனுப்பிய சாதனை அது,
பின்னால் ஆய்வாளர்;கள் வந்து விட்டார்;கள்,, செய்தியை ஆராய்ச்சி பணணி பகுத்தும் தொகுத்தும் தருவதற்கு,, எம்,ஜி,ஆர்; விஞ்ஞானியாகி மின்னலைக் குளிசைக்குள் அடைத்த விளையாட்டு மாதிரி,, செய்தியை சோதனைக் குழாய்களுக்குள் போட்டு உப்பும் புளியும் கலந்து கொதிக்க வைத்து குடுவையில் ஒடுங்க வைத்து,,, செய்தியும் அதன் மீதான பகுப்பாய்வும் புல்லரிக்க வைக்கும்,
இப்போது அது கூர்;ப்படைந்து. செய்தியில் புலனாய்வு கூட நடக்கிறது, சி,ஐ,டி மூசா மாதிரி. பூதக்கண்ணாடியுடன் செய்தியை உருப்பெருக்கும் வித்தை நடக்கிறது,முன்பு இதற்கெல்லாம் மொத்தக் குத்தகை ஏஜண்;டாக மாமனிதர்; சிவராம் இருந்தார்;, அவர்; தான் இதை முழுநேரத் தொழிலாகவே செய்து வந்தவர்;, இப்போது மூலைக்கு மூலை ஆளாளுக்கு கிளம்பி,, நுண்ணாய்வு. புலனாய்வு என்று புலிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் வியாக்கியானங்களும் பொழிப்புகளும் து}ள் பறக்கிறது,, பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரைக்கும், இவர்;களுக்கு செய்தி மூலம் சப்ளை செய்யும் அண்;டப்புழுகர்;கள் பொயிண்;ட் எடுத்துக் கொடுப்பார்;கள், துக்ளக்கின் அரசில் மந்திரிப் பதவிக்காக கட்சி மாறியவர்;கள் இலாகா இல்லாத மந்திரிகளாக எப்படி இருப்பது என்று கேட்ட போது. திறப்பு விழாக்களுக்கு சென்று வாருங்கள் என்ற மாதிரி. தேசியத் தலைவரின் தளபதிகளும். யுத்த நிறுத்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் துணை;ப்படைகளின் கிறாஜுவேஷன் விழாக்களில் பன மட்டைகளைப் பரிசளித்து பேருரை நிகழ்த்தும் போது. சிங்கள அரசு முதல் இந்தியா. சர்;வதேச சமுகம் வரைக்கும் எச்சரிக்கை விடுத்து. தலைவரின் தீர்;க்கதரிசனத்தை புகழ்ந்து விளாசுவார்;கள், தமிழ்ச்செல்வன் முதல் பாலகுமார்;. பால்ராஜ். சூசை. பொட்டம்மான் என்று நினைத்த மாதிரிப் முழங்கித் தள்ளுவார்;கள், அப்புறம் நம் முப்படை. விமானப்படை. ஈருடகப் படை புகழ் இளந்திரையன் பாதுகாப்புப் கவுன்சில் கதை மாதிரி நாளுக்கொரு கதையைக் கிளப்ப,,, கடைசியில் வந்து இறங்கிய குழந்தைகள் படைச் சேர்;ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பெரிய புழுகுக் குண்;டு வரைக்கும்,,,

இந்த ஆகாயப் புழுகுக் கூட்டம் ஈரைப் பேனாக்கி. பேயைப் பெருமாளாக்கும் தொழிலில் அமோகமாய் ஈடுபடும், புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிய இந்த ஆய்வாளர்;களின் வர்ண்னைகளைக் காது கொண்;டு கேட்க முடியாது, அப்புறமாய். அது புஷ்வானமானதும் இவர்;கள் வெட்கமேயில்லாமல் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தை ஆதாரம் காட்டி. புலிகள் இப்போது பிள்ளைகளைக் கடத்துவதில்லை என்பதால் சர்;வதேச சமுகம் புலிகளை அங்கீகரிக்க வேண்;டும் என்று ஆய்வு செய்யப் புறப்படுவார்;கள், அப்புறமாய்,, தட்டச்சித் தட்டச்சித் தினவெடுத்த தோள்களுக்கு வீரம் பிறந்தால்,, இருக்கவே இருக்கிறது திறந்த கடிதம்? வாழ்க்கையில் மொட்டைக்கடிதம் தவிர வேறெதுவும் எழுதியறியா ஆய்வாளர்;கள் ரொனி பிளயருக்கு ஓர்; திறந்த கடிதம். கோபி அர்ண்ண்னுக்கு ஓர்; திறந்த கடிதம் எல்லாம் எழுதி புலிகளை கொக்கென்று நினைத்தாயோ. கொங்கண்வா? என்று எச்சரிக்கை விடுவதைப் பார்;த்தால்,, அடி வயிற்றில் பயம் பற்றிக் கொள்ள,, அட,, சவால் விட்டிருக்கிறானே பாவி,, என்ன நடக்கப் போகிறதோ என்று கலங்கிப் போயிருப்பீர்;கள், ஆய்வாளரோ அடுத்த வாரம் தமிழினத் துரோகி கருhணாநிதிக்கு ஒரு திறந்த மடல் வரையப் போய் விடுவார்;,,

உடன்பிறப்பே,, ஈழத்தமிழனின் இரத்த வெள்ளத்தை கண்;ட பின்னாலும் கரையாத இரக்கமில்லாத இதயமோ உனக்கு,,
இந்த வெத்து வேட்டுக் கூட்டத்தில் ஒன்று சமீபத்தில் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவுக்கு சவால் விட்டிருக்கிறது, எப்,பி,ஐயின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை என்ற தலைப்பில் நிதர்;சனத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில்,, வள்ளிபுனத்தில் நடைபெற்ற குண்;டுவீச்சில் இறந்த உயிர்;களைக் கண்;டு உணர்;ச்சி பொங்கிய அப்பாவித் தமிழர்;களை ஏவுகணை;களைக் காட்டி அவர்;களை வாங்கத் து}ண்;டி விட்டு அவர்;களை அமெரிக்கா கைது செய்து விட்டு தங்கள் புலனாய்வு வெற்றியாகக் காட்டுகிறது என்று அறிவுக்கொழுந்து ஒன்று கதை அளக்கிறது,

இந்த அளப்பை புலிகளின் ஆதரவாளர்;களைத் தவிர வேறெந்த இளிச்சவாயன் நம்புவான்? எனவே கைது செய்யப்பட்டவர்;கள் அப்பாவிகளாம், அந்த அப்பாவிகள் ஏவுகணை; வாங்கி புலிகளுக்கு அனுப்ப விரும்பினார்;களாம், அவர்;களுக்கும் புலிகளுக்கும் தொடர்;பு இல்லையாம் என்பது தான் அந்த அறிவுக்கொழுந்துவின் வாதம், சரி,, வள்ளிபுனம் தாக்குதல் நடந்து ஓரிரு மாதங்கள், ஆனால் கைது செய்யப்பட்டவர்;களுடன் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு கடந்த நான்கு ஆண்;டுகளாகத் தொடர்;பு வைத்திருந்ததே என்ற கேள்வியைப் புலிகளின் ஆதரவாளர்;கள் கேட்க மாட்டார்;கள் என்பது அந்த அ,கொவுக்கு நன்றாகவே தெரிந்ததால். இழுத்து முழக்கியிருக்கிறது, இந்த வாதத்தை அமெரிக்காவில் இருந்து புலிகளுக்கு அரசியலமைப்பு வரையும் வழக்கறிஞர்; குறித்து வைத்துக் கொள்ளலாம், சந்தேக நபர்;களுக்காக ஆஜராகும் போது இதை ஆதாரமாகவும் காட்டலாம், வ,பி,கோ 304 படி (வன்னி பீனல் கோட்) நீதிபதி உடனடியாகவே அவர்;களை விடுதலை செய்வார்;, இவர்;கள் இதையெல்லாம் தமிழில் தானே எழுதுகிறார்;கள், ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை அங்கே தானே பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலத்தில் சம்பூர்; பின்வாங்கல் நோர்;வேயைப் பொறிக்குள் சிக்க வைத்த தந்திரம் என எழுதி விட்டு. நிபந்தனையற்ற பேச்சுக்கு சம்மதம். தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள் என்று நோர்;வேயிடம் மன்றாட முடியுமா?

சமீபத்திய சண்;டை நம்ம ஆய்வாளர்;களுக்கு ஒரே அவல் சப்ளை தான், புலிகள் வாங்கிக் கட்டிக் கொர்;டிருந்த போதெல்லாம் வெற்றிகரமாகப் பின்வாங்கிக் கொர்;டிருக்கிறார்;கள், தலைவர்; நிஷ்டை கலைக்கப் போகிறார்;, கண்டு கலங்கப் போகிறது என்று,,, குடுகுடுப்பைக் காரர்;கள் போல தலைவர்; ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, அவருடைய எதிரிகள் எல்லாம் அழியப் போகிறார்;கள் என்று உடுக்கு அடித்துக் கொண்;;டிருக்கிறார்;கள்,
எம்,ஜி,ஆர்; தன் ஆஸ்தான வில்லன்களான அசோகன். வீரப்பா. நம்பியார்; போன்றோரிடம் அடி வாங்கும் போது. இன்னாபா. இந்த கட்டையிலே போவான் வாத்தியாரை மொத்துறானே என்று குமுறும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஆறுதல் சொல்ல. மெதுவான சிரிப்புடன் பாருங்கடா. வாத்யார்; குடுக்கப் போறார்; என்று கியூறியஸ் உட்கார்;ந்திருந்த கலரிப் பக்கம் இருந்து. ரசிகர்; மன்றத் தலைவர்; பின்னால் பார்;த்துக் கூவ. காத்திருந்தது போல. உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு பொங்கி வரும் பகைவர்; கூட்டத்தை வாத்யார்; தனியே துவம்சம் செய்வார்;,,
அதுபோல. துவண்;டு நின்ற ரசிகர்; கூட்டத்தை உற்சாகப்படுத்தி இந்த ஆய்வாளர்; கூட்டம் சமாளிக்க,, தலைவரும் ரத்தத்தை துடைத்து விட்டு பந்தாடி வந்திருக்கிறார்; பகைவர்; கூட்டத்தை,விசிலடி காதைப் பிளக்கிறது, ரசிகர்;கள் கலரியில் இருந்து துள்ளிக் குதிக்கிறார்;கள், முதலாவதாக ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர்; ஆக்கிரமிப்பு நோக்கம் என புதினம் தொடக்கி வைத்திருக்கிறது, இனியென்ன,, இந்த ஆகாசப் புழுகர்;களும்,,
கொக்கென்று நினைத்தாயே கொங்கணவா,, நம்ம தலைவரைமக்கென்று நினைத்தாயோ மகிந்த சிங்களவா,, என்று பரண்p பாடித் தொலைக்கப் போகிறார்;கள்

நன்றி: தாயகம்

Friday, October 20, 2006

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த

சமூக விடுதலைப் போராளியாக மக்கள் பணிபுரிந்த மான் முத்தையா

வெகுஜனன்- வட புலத்து சங்கானைப் பட்டின சபையின் முன்னாள் தலைவரும் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் சமூக விடுதலைப் போராளியுமான நாகலிங்கம் முத்தையா தனது எண்பத்து நான்காவது வயதில் கடந்த 22-07-2006 அன்று சங்கானையில் காலமானார். மான் முத்தையா என்ற பெயர் வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பலராலும் அறியப்பட்ட பெயராக இருந்து வந்தது. உறுதியான உடற்கட்டும் நிமிர்ந்த நடையும் மட்டும் மான் என்ற அடைமொழிக்கு காரணமாக அமையவில்லை. சமூக அநீதிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவும் ஆற்றலும் அவரது இளமைக்காலம் முதல் இருந்து வந்தமை அவரை மனிதர்களிடையே மனிதனாக அடையாளம் பெறவைத்தது.

மான் முத்தையா இளமைக்காலம் முதல் பொதுவுடமைவாதியாகவும் அதன் காரணமாக சமூக விடுதலைப்போராளியாகவும் வாழ்ந்து வந்தவர். பொது வாழ்வில் சங்கானைப் பட்டின சபை உறுப்பினராகவும் பின்பு ஒரு பதவிக் காலத்தின் தலைவராகவும் பதவி வகித்து மக்களுக்குப் பணியாற்றியவர். நா. (மான்) முத்தையா சங்கானையில் அக்காலத்திய மலேயாத் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். அதன் காரணமாக இளைமைக்காலத்தில் மலேசியாவில் கல்வி கற்றவர். ஆங்கிலத்தில் போதிய புலமையும் பெற்றவர். மலையா கம்யூனிஸ்ட் கட்சி கொலனித்துவத்தையும் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வந்த அன்றைய கால கட்டத்தில் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களில் முத்தையாவும் ஒருவராகிக் கொண்டார். அதன் மூலம் அவர் மாக்சிசத்தை ஏற்று பொதுவுடமை இலட்சியங்களைக் சுமந்தவாறு இலங்கைக்கு தனது இளமைக் காலத்தில் திரும்பினார். தான் பிறந்த சங்கானை மண்ணில் தனது வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்.

அக் காலத்தில் வடபுலத்திலே பொதுவுடமை இயக்கம் தோழர் மு.கார்த்திகேசன் மற்றும் ஆரம்ப முன்னோடிகளின் தலைமையில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தது. அப் பொதுவுடமை இயக்கத்தில் இளைஞனாக முத்தையா இணைந்து கொண்டார். அவர் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார தலைமை நிர்வாகிகளின் கீழ் அத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகள் சலுகைகள் இன்றி வேலை செய்து வந்த சூழலில் முதன் முதலில் தொழிற்சங்கம் கட்டும் முன் முயற்சி எடுக்கப்பட்டது. அதனை அங்கு தொழிலாளியாகக் கடமைபுரிந்த பொதுவுடமைவாதியான எஸ்.சந்தியாப்பிள்ளை முன்னின்று செயல்படுத்தினார்.

அத்தகைய தொழிற்சங்க உருவாக்கத்திற்கு முத்தையாவும் ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களது முயற்சியில் பயிலுனராக நியமனம் பெற்ற கே.ஏ. சுப்பிரமணியமும் இணைந்து கொண்டார். இம் மூவரும் ஏனைய தொழிலாளர்களை இணைத்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ஆரம்ப தொழிற்சங்கத்தைதோற்றுவித்து கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. அதன் விளைவு இம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நிர்வா கத்தினால் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கே.ஏ. சுப்பிரமணியம் பொதுவுடமை இயக்கத்தின் வடபுலத்து முழுநேர அரசியல் ஊழியராகினார். முத்தையா வேறு தொழில் தேடினார். பின்பு சுய தொழில் முயற்சியிலும் ஈடுபட்டு திருமணமாகி குடும்ப வாழ்விலும் ஈடுபட்டார். சந்தியாப்பிள்ளை தொடர்ந்து ஒட்டுநராக தொழில் செய்ததுடன் கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டார்.

முத்தையா சங்கானைப் பிரதேசத்தில் பொதுவுடைமை கட்சியை விஸ்தரித்து வாலிபர் இயக்கத்தை கட்டினார். அக் காலத்தில் பல இளைஞர்கள் முத்தையாவின் வழிகாட்டலில் அணி திரண்டனர். அத்துடன் வட புலத்தில் பொதுவுடைமை வாலிபர் இயக்கத்தின் முதலாவது மாநாடு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கும் முத்தையா முன்னின்று செயல்பட்டார். வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பொதுவுடைமை இயக்கம் வளர்ச்சி பெற்ற சூழலில் உள்ளூராட்சி சபைகளுக்கு பல பொதுவுடைமைவாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். சங்கானை கிராமசபையிலும் பின்பு பட்டின சபையாக தரம் உயர்ந்த நிலையிலும் பொதுவுடைமை வாதிகள் உறுப்பினர்களாகினர். அதன் காரணமாக அறுபதுகளின் முற்கூறிலே சங் கானைப் பட்டின சபையின் தலைவராக மான் முத்தையா பதவி பெற்று அப்பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அக்கால கட்டத்தில் சுன்னாகம் காங்கேசன்துறை வல்வெட்டித்துறை கட்டைவேலி யாழ்ப்பாணம் பருத்தித்துறை போன்ற உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக தலைவர்களாக இடதுசாரி செயற்பாட்டாளர்கள் பதவி வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி வட புலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உரிய வழிகாட்டியாக அமைந்தது.
சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அந்த எழுச்சியும் அதன் பாதையில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. உயர்த்தப்பட்டவர்கள் என்போர் மத்தியில் பொதுவுடைமை வாதிகள் இடது சாரியினர் ஜனநாயக சக்திகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டோர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று போராடிய போராட்டங்களாகவே அவை அமைந்து கொண்டன.

அந்த வகையில் சங்கானைப் பிரதேசத்தில் தேநீர் கடைகளிலான சமத்துவம் கோரிய வெகுஜனப் போராட்டத்தில் மான் முத்தையா முன்னணியில் நின்றார். 1967 இல் இடம்பெற்ற அவ் வெகுஜனப் போராட்டத்தில் சமத்துவத்தை மறுத்து நின்ற தமது உறவினர்களான உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றார். அதன் காரணமாக அவர் பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்வெளிக் காயங்களுக்கும் ஆளாகினார். அத்துடன் சங்கானையில் அவரது வீடு சாதி அகம்பாவம் கொண்டவர்களால் அடித்து உடைக்கப்பட்டதுடன் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத உயிராபத்துச் சூழலில் குடும்பத்துடன் இடம்பெயரவும் வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் மான் முத்தையா அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் அடிபணிந்து விடவில்லை. ஒரு பொதுவுடைமைப் போராளிக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பதில் உறுதியுடனும் துணிவுடனும் செயல்பட்டமை அன்றைய நிலையில் முன்னுதாரணமாக அமைந்தது. 1966-71 கால கட்டத்தில் மான் முத்தையா ஏனைய பொதுவுடைமை வாத முன்னோடிகளுடன் இணைந்து வடபுலத்தில் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெற்றன.

தோழர் மான் முத்தையா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து கொள்ளும் இவ்வேளை அவர் விட்டுச் சென்ற பொதுவாழ்வினதும் போராட்டங்களினதும் அடிச் சுவடுகள் தெளிவாகக் கண்முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. அவரது எண்பத்திநாலு வருட வாழ்விற்கு மிகக் கனதியான அர்த்தங்களும் அடையாளங்களும் உண்டு. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் சமூக நீதி மறுப்பு களும் கொண்ட இன்றைய சமூக அமைப்பில் ஒரு பொதுவுடைமைவாதி தனது ஆற்றலைப் பயன்படுத்தி மனிதத்துவத்திற்காகப் போராடுவதில் பொதுவுடைமை பாரம்பரியத்தை இறுதிவரை மான் முத்தையா கொண்டிருந்தார் என்பது அவருக்குரிய தனித்துவச் சிறப்பாக அமைந்து கொண்டது. அதன் காரணமாகவே புதிய - ஜனநாயக கட்சி 2003 இல் தனது 25 ஆவது ஆண்டு விழாவின் போது மான் முத்தையாவையும் ஏனைய ஐந்து தோழர்களையும் மூத்த பொதுவுடைமைப் போராளிகள் முன்னோடிகள் என கௌரவித்து நினைவு விருதுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன முரண்பாடும் தேசிய இனப்பிரச்சினையும் உச்ச நிலை நெருக்கடியாகி நிற்கும் இன்றைய சூழலில் மான் முத்தையா போன்ற பொதுவுடைமைவாதிகளின் உறுதிமிக்க அரசியல் சமூகப் போராட்டங்களின் அனுபவங்கள் படிக்கப்படுவது பன்முகப் பயன்கள் தரக்கூடியனவாகும். மறைந்த நா.முத்தையா அவர்களுக்கு எம் அனைவரினதும் அஞ்சலியும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபமும் உரித்தாகுக.