Saturday, December 16, 2006

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால்

சமூகப் புற்றுநோயை வளர்த்துவிட்டு உடல் புற்றுநோயால் மாண்டுபோன பாலசிங்கம்

- எஸ். மனோரஞ்சன்

-எவ்வாறாயினும், எனது மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த பெரும் அவலங்களொடு ஒப்பிடுகையில் எனது நோயானது ஒரு வெறும் துரும்பென்றே சொல்ல வேண்டும். - -அன்ரன் பாலசிங்கம்-

ஒரு மாதத்திற்கு முன்னர்; பாலசிங்கம் கடும் சுகயீனமுற்றிருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கச் சென்ற தமிழ் நெற் ரிப்போட்டர் ஒருவரிடம் பாலசிங்கம் கூறியதாக அந்த இணையத்தளம் நவம்பர் 22ம் திகதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதுமட்டுமன்றி பாலசிங்கத்திற்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப்பற்றியும் அவ் இணையத்தளம் பினவருமாறு எழுதியிருந்தது.

இந்தமோசமான புற்றுநோய் மிக அரிதாகவே வரக்கூடியதென்றும், இந்தப் புற்றுநோயால் அவரது உடலின் மிக முக்கிய பாகங்களான ஈரல், நுரையீரல். வயிற்றுப் பகுதி மற்றும் எலும்பு மச்சைகள் என்பன பாதிக்கப் பட்டிருந்ததாகவுமே இச்செய்தியின் சாராம்சம் குறிப்பிட்டிருந்தது.
பாலசிங்கத்தின் இழப்பு வேறெல்லாரையும் விட வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பேரிழப்பாக தெரியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளின் அரசியலை எதிர்ப்பவர்களும் அவரின் இழப்பால் சற்று கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். காரணம் புலிகளின் பிரதம பேச்சாளரும் மதியுரைஞருமாக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் அடிக்கடி வெளியே உதிர்த்துவிடும் கருத்துக்களால் புலிகளுக்கு ஏற்பட்ட அவமானங்களும் இடைஞ்சல்களும் பலரும் அறிந்ததே.

புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அவ்வாறான கருத்துக்களை அவர் ஏன் எதிர்க்கின்றார் என்று பலரும் தலையைச் சொறிந்து கொண்டனர். ஆனால், பாலசிங்கம் அவற்றை அறியாமல் செய்யவில்லை, அறிந்து வேண்டுமென்றேதான் செய்கின்றார் என்பதுதான் பாலசிங்கத்தை நன்கு அறிந்த பல முன்னாள் புலி ஆதரவாளர்களின் கருத்தாகும்.
தனது புற்றுநோய் பற்றியும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அவலம் பற்றியும் அவர் நோய்ப் படுக்கையில் இருந்து இறுதியாக வெளியிட்ட கருத்துப்பற்றி பிரான்சிலும் கனடாவிலும் வசிக்கும் இரு முன்னாள் தீவிர புலி ஆதரவாளர்கள் என்னிடம் பேசும்போது இப்படிக் கருத்துக்கூறினர்.
-பாலா அண்ணை அந்தக் கதைக்குள்ளையும் ஒரு முக்கிய விசயத்தை நாசூக்;காகச் சொல்ல வருகிறார். அதாவது தமிழ் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் புலி அரசியல் என்னும் புற்றுநோயும் அதனால் தமிழர்கள் பட்டுவரும் அளவில்லா துன்பங்களுடனும் பார்க்கும்போது தனக்கு பிடித்திருக்கும் நோய் சர்வ சாதாரணமானது - என்பதைத்தான் பாலா அண்ணா கூற முற்படுகின்றார் என்றனர். அவ்விருவரினதம் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
பாலசிங்கத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு அவரின் மனவோட்டம் நன்றாகப் புரிந்திருந்தது. அதேபோலத்தான் பாலசிங்கத்துக்குத்தான் பிரபாகரனின் மனவோட்டமும் மிக நன்றாகப் புரிந்திருந்தது. பிரபாகரனின் சிந்தனைப் போக்கைப்பற்றி பாலசிங்கம் அடிக்கடி பல்வேறு விதமாக பல்வேறு தொனிகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

பாலசிங்கத்தோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டிருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவருடன் பேசும்போது, இந்த முடியரசனிட்ட இருந்தும் வெடியரசனிட்ட இருந்தும் தமிழ் சனத்துக்கு இனி விமோசனமில்லை நானாவது கெதியா உவங்களிட்டையிருந்து கழரவேணும் என்றாராம் பாலசிங்கம்.

யார் பாலா அண்ணை முடியரசன்;? யார் வெடியரசன்? என்று மற்றவர் வினவ...
என்னடாப்பா முடியரசனைத் தெரியாதே. அதுதான் எங்கட கட்டைக் குத்தியன்;. வெடியரசன் தான் உந்த நாசமாய்ப்போவான் பொட்டன். அட.. தம்பி இவன் முடியரசனை திருத்தினாலும் திருத்தலாம்போல கிடக்கு. ஆனால் அந்த வெடியரசனோடயெல்லா ஒண்டும் செய்ய ஏலாமக் கிடக்கு. அவன் சுட்டுத்தள்ள நான் எல்லா உலகத்துக்க பதில் சொல்வேணும். இது இந்த முடியரசன் கட்டைக் குத்தியனுக்கும் இது விளங்குதில்லை. அவனுக்கு ஏதாவது சொல்லப்போனா...

ஒண்டுக்கும் யோசியாதையுங்கொ பாலா அண்ணை...எல்லாம் சரிவரும்.. எண்டுபோட்டு ஹீ..ஹீ..என்டு இளிக்கிறான் அந்த மூதேசி... நாய்... என்று பாலா அண்ணை அரை மணித்தியாலமாக தொலைபேசியிலை பொரிந்து தள்ளினராம்.

அன்று பாலா அண்ணை தொலைபேசியில கதைச்சதை அப்பிடியே ரெக்கோட்; பண்ணி வன்னிக்கு அனுப்பினால் அதோட பாலா அண்ணையிட கதை சரியாப் போயிருக்கும். என்றார், அந்த முன்னாள் புலி ஆதரவாளர் என்னிடம். பாலா அண்ணையொடு மிக நெருக்கமாகப் பழகியவர்கள் பலரிடமும் கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை அவர்கள் இரகசியமாக வைத்திருந்த நல்ல காரியத்தால்தான், பாலா அண்ணை இவ்வளவு காலமும் உயிரோடு இருந்தார் என்று சொன்னாலும் தப்பில்லைதான்.

மற்றொரு சம்பவம்

1990ல் இருந்து 1994வரை யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு பிரேமதாசா அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தியிருந்தது. ஆனாலும் பல பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவட்டு அங்கு சென்றுவந்தனர். அவ்வாறு சென்ற ஒரு இந்திய தமிழ் பத்திரிகையாளருக்கும் பாலசிங்கத்திற்கும் நடந்த உரையாடல் மிக சுவாரசியமானது.

பாலசிங்கம் இந்தியாவில் இருந்த காலத்திலேயே அப்பத்திரிகையாளரை பாலசிங்கத்திற்கு நன்கு அறிமுகமாதலால் அப்பத்திரிகையாளருக்கு பாலசிங்கத்தின் வீட்டில் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. அங்கும் வழமைபோல் பாலசிங்கம் தனது பிளாக் அன்ட் வைற் விஸ்கியை உடைத்துப் பரிமாறினார். பாலா அண்ணருக்கு ஓரிரு சுற்று விஸ்கி தாராளமாக உள்ளே இறங்கியதும் பத்திரிகையாளர்; பாலசிங்கத்திடம் இப்படிக் கேட்டார்.

ஆமா இப்பிடியே தொடர்ந்து யுத்தத்தை புடிச்சிக்கிட்டிருந்து ஒங்க தலைவர்; என்னதான் பண்ணப்போறாரு..மக்கள்தானே அதிகமா அழிஞ்சு போறாங்க...எனக்குன்னா ஓங்க தலைவரு என்னா சிந்திக்கிறாரன்னெ புரியமாட்டேங்குது.. என்றார்.

உடனே பாலா அண்ணர்; இடை மறித்து அடேயப்பா...அவர் மற்றவைக்குத்தான் தலைவர் எனக்கொண்டும் தலைவரில்லை நானில்லாட்டி இம்மட்டுக்கு அவர் எப்பவோ சரி. அதைவிடு... என்ன சொன்னீர் உமக்கு அவர் என்ன யோசிக்கிறார் என்றே விளங்க இல்லையோ..? அடே தம்பி... அவனோட 15 வருசத்துக்கு; மேல ஒண்டா இருக்கிற எனக்கே அவன் எந்த நேரம் என்ன செய்வான் எண்டு விளங்குதில்லை. உனக்கென்ணென்டு விளங்கிறது? என்றாராம்.

அதில்லீங்க மிஸ்டர்; பாலா... இந்தியாவையும் எதிர்த்துக்கிட்டு... உலக நாடுகளிட்டையும் கெட்ட பேர்; எடுத்திக்கிட:டு எப்பிடி ஒரு போராட்டம் வெற்றி பெறப்போவுது. யாராவது ஒருத்தரோட நட்பா இருக்க வேணாமா? என்றார் பத்திரிகையாளர்.

அட நீர் ஒண்டப்பா... காட்ட மிருகங்களை பற்றி படிச்சிருக்கிறீரா? எல்லா மிருகமும் ஏதாவது ஒன்றுடன் சேர்ந்துதான் வாழும். இந்தப் புலி இருக்குதே அது மட்டும் எப்பவும் தனியாத்தான் வாழ்க்கை நடத்தும். அதவேறந்த மிருகத்தையும் நம்பாது. அதை நம்பி வேறெந்த மிருகமும் கிட்டவும் வராது. அதமாதிரித்தான் இவங்களும்...என்றார் பாலசிங்கம்.
அப்பிடீன்னா இவங்கள நம்பி யார்தான் உதவி பண்ணப் போறாங்க. இந்தப் போராட்டம் என்னாகிறது? என்ற கேட்டார் பத்திரிகையாளர்.
இவங்களை நானே நம்பிறதில்லை...வேற யார் நம்புவான் சொல்லு பாப்பம். அட தம்பி நாங்கள் பிரேமதாசாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவரோட போய் கதைக்கச் சொன்னவனும் இவன்தான்.ஆனால் நாங்கள் முக்கியமான 6,7 பேர் அங்க கொழும்பில நிக்கையிக்க இவன் சண்டையை துவக்கி விட்டிட்டான். அண்டைக்கு அமைச்சர் ஹமீட் இல்லாட்டி நாங்கள் துலைஞ்சிருப்பம். இவனை நம்பேலாது தம்பி... என்று பாலசிங்கம் சொல்வதை பரிதாபமாக கேட்டவிட்டு அந்த பத்திரிகையாளர் திரும்பி வந்தார்.
இதெல்லாம் எதைக் காட்டுகின்றது? பாலசிங்கம் ஒன்றும் விளங்காமல் புலிகளோடும் பிரபாகரனோடும் இருந்தவரல்ல. நன்றாக எல்லாவற்றையம் தெரிந்து கொண்டு புலிகளின் சகல நாசகார அரசியலுக்கும் துணைபோனதுடன் அந்த நாசகார அரசியலை நியாயப்படுத்தி வந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே தமிழ் சமுகத்தைப் பீடித்திருக்கும் புலி அரசியல் என்னும் சமூகப் புற்றுநோயினால் தமிழ் மக்கள் படும் அவஸ்தைக்கு அவரும் பிரதான காரணகர்த்தாவாகும்.

பாலசிங்கம் பற்றி பழைய கதையொன்று

பாலா அண்ணர் என்கின்ற பாலசிங்கம் மதியுரைஞர் என்ற இந்த நிலைக்கு உயருவதற்குள் சந்தித்த சோதனைகள் பல. அவர் ஒரு சிறுநீரகத்தை இழந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் யாவரும் அறிந்த சோதனை@ அறியாத சோதனைகள் பல. அவற்றில் சில மிகச் சுவாரசியமானவை.
1985ம் ஆண்டு சென்னை வடபழனியில் நுNடுகு என்று அழைக்கப்படும் ஈழதேசிய விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் திம்புப் பேச்சு வார்த்தைகளுக்கு போவதற்கு சில நாட்களுக்கு முன் இது நடந்தது. ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களையும் இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர இந்தியா முயன்று, இறுதியில் திம்பு மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு போவதா விடுவதா என்பதில் ஆயுதமேந்திய தலைவர்களுக்குள் இழுபறி நடந்தது.

இச் சம்பவம் நடந்த அன்று திம்பு மாநாட்டுக்கு போவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நான்கு இயக்க தலைவர்களும் அங்கு கூட சம்மதித்து இருந்தனர். சிறீ சபாரத்தினம், பாலகுமார், பத்மநாபா ஆகிய மூவரும் தத்தமது இயக்கங்களின் முடிவுகளுடன் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திம்பு பேச்சுக்கு போவது ~சரி என்ற முடிவுடன் வந்திருந்தனர். அங்கிள் பாலாவும் தம்பி பிரபாகரனும் சற்று நேரம் தாமதித்தே அங்கு வந்தனர்.

எல்லோரும் அவரின் முடிவை சொல்லும்படி கேட்டனர். தம்பி பிரபாகரன் கூறியது இதுதான் நான் இப்பொழுதுதான் எனது பிள்ளையின் தலையில் (சார்ள்ஸ் அன்ரனி) பிஸ்டலை வைத்து சத்தியம் பண்ணிவிட்டு வருகிறேன். எனக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை. நான் இந்த மாநாட்டுக்கு வரப்போவது இல்லை. என்ற முடிவை சொன்னார். உடனே சிறீ சபாரத்தினமும் தம்பி போகா விட்டால் நானும் போகப்போவது இல்லை என்றார். இதைச் சொன்னதும் சகலருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அடுத்ததாக பத்மநாபாவும், தம்பியும் சிறியும் போகாவிட்டால் நானும் போகவில்லை என்றவுடன் பாலகுமார் சற்று கொதித்துப் போனார். அவர் சிறீ சபாரத்தினத்தையும் பத்மநாபாவையும் நோக்கி பொறுப்பு இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் இருவரும் இவ்வளவு நேரமும் போவதாகவே தீர்மானித்தீர்கள், இப்போது உங்கள் நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். போகாவிட்டால் வரும் விளைவு உங்களுக்கு தெரியுமா? என்று இரைய ஆரம்பித்தார்.

தொடர்ந்து சகலரும் தம்பி பிரபாகரனுக்கு நிலைமையை விளக்கி, அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். இப்போது பாலா அண்ணர் பேசத் தொடங்கினார். தம்பி, இவையள் எல்லாரும் சொல்லுறதைப் பார்த்தால் நாங்கள் போகாமல் விடுவது சரியில்லை. நாங்கள் எல்லாருமாக திம்புவுக்கு போய் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துவிட்டு வருவோம் என மதியுரை வழங்க முயற்சித்தார்.
உடனே வெகுண்டெழுந்த தம்பி பாலா அண்ணை தயவு செய்து வாயை மூடிக்கொண்டு இருங்N;கா என்ர தீர்மானத்தை சொல்லத்தான் உங்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து நீங்கள் நினைத்ததை பேச முடியாது. உங்களைப்போல எத்தனை பேரையும் நான் விலைக்கு வாங்குவேன். என்று கண்களில் கோபம் கொப்பளிக்க கர்ச்சித்தார். தம்பியின் கை அவரை அறியாமலே இடுப்பை நோக்கி போய்வந்ததை அவதானித்த பாலசிங்கம் ஒருமுறை வெலவெலத்துப் போனாராம்.

அசடு வழிய பத்மநாபாவையும் சிறீ சபாரட்ணத்தையும் பாலகுமாரையும் பார்த்த பாலா அண்ணர் நாய்க்குட்டிபோல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார். மறுநாள் பாலா அண்ணரைக் கதைத்து சமாதானப் படுத்தி மீண்டும் சகலரும் ஒற்றுமையாக திம்பு பேச்சு வார்த்தைக்கு போகும் விடயத்தை மேற்கொள்வதற்காக பத்மநாபா பாலசிங்கத்தைச் சந்திக்க சென்றார். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சென்னையில் ஒரு தொங்கலிலிருந்த கோடாம்பாக்கத்திலிருந்து மறு தொங்கலிலிருந்த அடையாறை நோக்கி தன் சக தோழர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போய்ச் சேர்ந்தார் பத்மநாபா.

பாலா அண்ணரும் ஆன்டி அடேலும் பத்மநாபாவை இன்முகத்தோடு வரவேற்றனர். அங்கிள் பாலா வழமைபோல் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க தனக்கு பிடித்தமான கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி போட்ட விஸ்கியை சுவைத்த வண்ணம் வாரும் நாபா உம்மட்ட கதைக்க வேண்டும் எண்டுதான் இருக்கிறன் என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். புத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலெயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது... விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி எப்படிக் காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் ப+மிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை.
அனரறி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை! இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அனரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்படடிருந்த சிறுவன் மூலமாகவும் அவரது வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும்; கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம்.

இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால் அவர்; நக்கிப் பிழைக்கும் நாய்தான். தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும்; ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை.
பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம்

இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவாhத்தைக்கு சென்ற பாலசிங்கம் இப்படிக் கூறினார். றுந றடைட மடைட. வுhயவ ளை ழரச தழடி... புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய உருவத்தைக் காட்டி நிற்பார்.

பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல.
கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பால சிங்கத்தின் மதியுரைஞர் பணி. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.
ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்;க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின் விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கபடும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே.

தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார். எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி. மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும.
பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன. இதுதொடர்பான விடயங்களை மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

Monday, December 04, 2006

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது

இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?

1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது தீவட்டி ஊர்வலம் கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் து}ண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் து}ண்டி ஒரு பெரிய கலவரத்தைத் து}ண்முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை இலங்கைத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும் நேசத்தையும் பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. அதே தமிழகம் பற்றி எரிந்தது மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.
ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம் அறிவு ரீதியாக இல்லாமல் உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் து}ண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும் ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு களுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக து}ண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும் பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி.க. நெடுமாறன் பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.


அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சு10ழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சு10ழலில் எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ து}ண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள் ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும் தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும் துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ அஸ்ஸாம் போலவோ ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி.க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள் நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி.மு.க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா.ம.க விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சு10ழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.

1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை து}க்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சு10ழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சு10ழல் எம்.ஜி.யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும் மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டார். எஸ்.பி.சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவன் மீண்டும் வந்தான். அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.
பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட பிந்தரன்வாலே விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம் அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும் பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும் பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.
தனது அன்னை துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது உரிய அறிவு இல்லாமல் அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ்காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.
ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும் வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும் சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சு10ழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும் உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.


ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினைசக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி.மு.கவின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி.வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களை உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால் இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி இனம் மூலம் மக்களை து}ண்டும் அரசியலை அவ்வளவாக விரும்பமாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சு10ழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர்.

மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சு10ழலில் 1983ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்குதமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் து}ண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்ணம் மக்களின் உணர்ச்சிகளைத் து}ண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?
இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும். இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும்? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா.ம.க விடுதலைச் சிறுத்தைகள், தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் து}ண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால் பொது மக்களின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களைப் புறக்கணித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும் மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும் பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும் நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் து}ண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களையும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை.


அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால் பழைய 1983போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. விடுதலைசிறுத்தைகள்,பாமக, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும் புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும். அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர். மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.
புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.


ரரக்கெட் லாஞ்சரில் இருந்து விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ்நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.
தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள் கன்னடர்கள் மலையாளிகள் அடித்து துரத்தப்படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை. தமிழ்நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது.
இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ ஒரு நாகலாந்தையோ ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா? நமக்கென்றால் வெண்ணை இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும் அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாகிஸ்தானை எதிர்க்க முடியும்? இரட்டை வேடமாகி விடாதா நமது கோரிக்கை. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம் தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது.
ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.
இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால் இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல நிதர்சனம் இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ளநரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும் இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படையாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும்இ சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் 1.இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன் சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.4. அந்த மாநிலத்துக்கு கல்வி அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்துஇ தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.


ஜெய்ஹிந்த்வந்தே மாதரம்.

http://jataayu.blogspot.com