Monday, October 16, 2006

புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


புலிகளின் மூர்க்கத்தனமான முன்னரங்க தாக்குதல்
129 படையினர் பலி,283 இற்கு மேற்பட்டோர் படுகாயம்
புலிகளின் பிழைத்துவிட்டேன் எனும் பிரகடனம்


-அர்ச்சுனன்

படையினருடனான பல மோதல்களில் தமது நு}ற்றுக்கணக்கான போராளிகளை இழந்துடன் மாவிலாறு, மூது}ர், சம்பூர், முகமாலை முன்னரங்க காவல் ஆகிய பகுதிகளை இழந்த புலிகள் கடும் விரக்திக்கும், கௌரவ இன்மைக்கும் உள்ளாகியிருந்தார்கள். இதனை ஈடு கட்டுவதற்கு புலிகளின் உயர்மட்ட தலைமை எத்தனை போராளிகளை இழந்தேனும் அரச படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிப்பார்கள் என நான் எனது கடந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தேன். அது மட்டுமல்லாது புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவிக்காது போனால் ஆனையிறவு முகாமினை படையினரிடம் இழக்கவேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தேன். அதே போன்று புதன் கிழமை (2006-10-11) நாகர்கோவில், முகமாலை மற்றும் கிளாலி முன்னரங்க காவல் அரனு}டாக முன்னேறிய படையினருக்கு புலிகள் விளைவித்த உயிர்சேதம் படையினரை குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்காவது ஆனையிறவினை கைப்பற்றும் நோக்கத்தினை கைவிடவைத்திருக்கின்றது. அரச தரப்பின் தகவலில் 129படையினர் கொல்லப்பட்டு 283படையினர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 74படையினரின் உடல்கள் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மேர்பார்வையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினு}டாக படையினரிடம் ஒப்படைப்பதற்காக ஒமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது அந்த உடல்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது இவ்வண்ணம் இருக்க படையினரின் மேலும் 42உடல்கள் தம்;வசம் இருப்பதாகவும் அவைகள் உருக்குலைந்த நிலையில் இருப்பதினால் அவைகளை ஒப்படைக்கமுடியாது என்றும் ஆகவே தாம் அந்த உடல்களை தகனம் செய்தாக புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஒரு முற்றிலும் நம்பகதன்மை இல்லாத ஒரு அறிவிப்பாகும். தம்மிடம் இருந்த படையினரின் 74 உடல்களை உலகத்திற்கு பெருமையோடு காண்பித்த புலிகள் அந்த 42உடல்களை காண்பிக்க முடியாது என கூறுவது சற்று அதிகம்தான். இருந்த போதும் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதின் பின்னர் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்ட சமர் இதுவாகும். இந்த தாக்குதலில் கிடைத்த மனபலத்தோடு புலிகள் வியாழக்கிழமை (2006-10-12) காலை கிழக்கில் உள்ள விசேட அதிரடி ப்படையினரின் (ளுpநஉடைய வுயளம குழசஉநஇளுவுகு) கஞ்சிக்குடியாறு முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படையினரால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதோடு நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் விசேட அதிரடிப்படையினரின் முகாமினை புலிகள் வென்றெடுத்தில்லை என்பது குறிப்பிடதக்தாகும்.

இரு பகுதியினருக்கும் தேவைபடும் இராணுவ வெற்றிகள்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில கிழக்கு பிரதேசங்களை மீட்டெடுத்த அரச படையினரின் அவசரமே முகமாலையில் அவர்களுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளது. புலிகளை படிப்படியாக பலவீனப் படுத்துவதினை விடுத்து, அரசு தெற்கில் அரசியல் நடத்துவதற்கு ஏதுவாக ஆனையிறவினை அவசரப்பட்டு கைப்பற்ற முனைந்ததின் பலாபலனே இந்த அதிக உயிரிழப்பிற்கு காரணமாகும். இரு பகுதியினரும் தமது இழப்புக்களை முதலில் குறைத்து கூறிவிட்டு பின்னர் படிப்படியாக தமது இழப்புக்களை ஒத்துக்கொள்வது வழமையாகிவிட்டது. முதலில் இதனை புலிகள் செய்து காட்டினார்கள், தற்பொழுது அரசு அதனை பின்பற்றுகிறது. கடந்த ஓகஸ்ட்மாதம் மூது}ர் கிழக்கில் உள்ள அனைத்து அரச இராணுவ முகாம்களும் தமது கட்டுப்பாடு பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் படையினரின் 10 உடல்கள் தம்வசம் இருப்பதாகவும் புலிகளின் இராணுவ பேச்சாளர் கூறினார். அவையெல்லாம் பொய்யென பின்னர் தெரியவந்தது. அதே போன்று படையினரும் முகமாலையில் 32படையினரே கொல்லப்பட்டதாக கூறினார்கள். தற்பொழுது 74 படையினரின் உடல்களை பெற்றுக்கொண்ட பின்னர் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். முதலில் கூறப்படும் எண்ணிக்கைகள் பத்திரிகையில் வெளிவரும் பொழுது மக்கள் அதனையே முதலில் நம்புகின்றார்கள். அது உண்மையா அல்லது அந்த எண்ணிக்கையினை மாற்றி கூறினார்களா என்பதையெல்லாம் அவதானித்து ஒப்பீடு செய்வதற்கு மக்களுக்கு நேரம் இருப்பதில்லை இதனால் அரசும், புலிகளும் முதலில் தமக்கு சாதகமான எண்ணிக்கைகளை கூறிவிடுகின்றனர். பின்னர் மக்களை ஏமாளிகளாக்குகின்றனர்.

முகமாலையில் முதலில் 5போராளிகளே கொல்லப்பட்டதாக கூறிய புலிகள் பின்னர் 11 போராளிகள் என கூறினார்கள். இறுதியாக தமது தரப்பில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 30பேர் காயம் அடைந்துள்ளதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் .அரச தரப்பில் 129படையினர் கொல்லப்படும் பொழுது புலிகள் தரப்பில் குறைந்த பட்சம் 70 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். 150 பேர் வரையில் காயம் அடைந்திருக்க வெண்டும் படையினர் 283 பேர் காயம் அடைந்திருப்பதாக அரசு கூறுகின்ற பொழுது குறைந்த பட்சம் 500 படையினர் காயம் அடைந்திருக்க வேண்டும். காயம் அடைந்தவர்களில் பலர் மீண்டும் இராணுவத்தில் செயல்பட முடியாத அளவிற்கு அங்கங்களை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. கொழும்பில் வீதிகளில் காவல் காக்கும் படையினரை போல் அல்லாது வட கிழக்கில் யுத்த முனையில் போரிடும் படையினர் சிறப்பு பயிற்;சி பெற்ற படையினர் ஆகும். இவர்களில் 129பேரை படையினர் இழந்தமையினை சாதாரணமாக எடுக்கமுடியாது.அ ரசு தமது தரப்பில் 129 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் பொழுது குறைந்த பட்சம் 200 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

முன்னரங்க காவல் அரண் மோதல் ஆரம்பம்

கடந்த சிலவாரங்களாக புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி முகமாலை, நாகர்கோவில், கிளாலி ஆகிய முன்னரங்க காவல் அரண்களில் இருந்து எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வந்தாகவும் தமது தற்பாதுகாப்பிற்காக அந்த பீரங்கி நிலைகளை அழிப்பதற்கு இராணுவம் முயன்றதாக அரச இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் படையினர் ஆனையிறவு முகாமினை கைப்பற்றுவதற்கான ஆயத்;தங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அவதானித்த புலிகள் தமது முன்னரங்க காவல் அரண்களை பலப்படுத்தும் முகமாக மேலதிக போராளிகளை கொண்டுவந்து நிறுத்தியதோடு இராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருந்தனர். புலிகள் ஓகஸ்ட்மாதம் 11ஆம் திகதி படையினரின் முகமாலை முன்னரங்க காவல் அரண்களை தாக்கியது போன்று மீண்டும் தாக்கமுனைகின்றார்கள் என எண்ணிய படையினர் புதன் கிழமை காலை 6மணி 30 நிமிடம் அளவில் புலிகளின் முகமாலை, நாகர்கோவில், கிளாலி முன்னரங்காவல் அரணை உடைந்து கொண்டு முன்னேற முயன்றனர். முன்னேறிய படையினரை தமது பகுதிகுள் சிறிது து}ரம் உட்புகவிட்டபின்னர் புலிகள் கடுமையான எறிகணை தாக்குதல்களையும், மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு படையினரை சுற்றி வழைத்து தாக்கியுள்ளனர். இரண்டரை மணித்தியாங்களில் புலிகள் படையினருக்கு பலத்த சேதத்தினை விளைவித்தார்கள். அவர்கள் தமது முழு பலத்தினையும் பிரயோகித்து அரசபடையினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என அரச பேச்சாளர் ஹெகலிய ரம்புக்கெல தெரிவித்துள்ளார். புலிகள் மேற்கொள்ளும் ஆயத்தங்களை விமான தாக்குதல் மூலம் சீர்குலைய செய்து வந்த இராணுவத்தினர் அதே போன்று தமது நிலைகளில் இருந்து சற்று பின்வாங்கி புலிகளின் நிலைகள் மீது விமானத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு முன்னேறியிருந்தால் இந்த உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் .விமானப்படையினரின் உதவியினை கோரிவிட்டு பின்னர் படையினர் முன்னேறியிருப்பார் களாயின் உயிர்சேதங்களை குறைத்திருக்க முடியும். அல்லாது விடில் புலிகள் தமது வடபகுதி முன்னரங்க காவல் அரண்களில் போராளிகளை குவிக்கின்றார்கள் என்பதினை அவதானித்த படையினர் அங்கு தாக்குதல் நடத்துவதினை தவிர்த்துவிட்டு கிழக்கில் ஏஞ்சிய பிரதேசங்களை மீட்கும் வகையில் வாகரை,வெருகல் பகுதிகள் மீது தாக்குதலை நிகழ்தியிருக்கலாம். கிழக்கில் இருந்து புலிகளை முற்றாக விரட்டும் திட்டத்தில் இருக்கும் படையினர் இதனை செய்திருந்தால் படையினரின் மனோபலத்தினை தொடர்ந்து உயர்நிலையில் பேணியிருக்க முடியும். இதனை விடுத்து தெற்கில் அரசியல் ஆதரவு தேடுவதற்காக ஆனையிறவு முகாமினை கைப்பற்ற முனைந்தமை அவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் (2006-10-08) ஞாயிற்றுக்கிழமை அரச படையினர் மூது}ரின் மேற்கு பகுதியினை கைப்பற்ற முனையும் பொழ்து புலிகள் அதிக எதிர்ப்பு காட்டாது பின்வாங்கியிருந்தனர். இதற்கு காரணம் மூது}ர் கிழக்கினையும் சம்பூரையும் இழந்ததின் பிற்பாடு தாம் அங்கிருந்து போரிடுவது பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதற்காக அவர்கள் பின்வாங்கியிருந்தனர். இதே போன்று புலிகள் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து பின்வாங்குவார்கள் என படையினர் கணக்கு போட்டமை அவர்களின் தவறாகும் .புலிகள் புண்ணிய பூமியென அழைக்கும் வடபகுதி கட்டுப்பாடு பிரதேசங்களை கிழக்கினை போன்று எளிதில் விடப்போவதில்லை. என்ன விலை கொடுதேனும் கிளிநொச்சியினையும் முல்லதீவினை பாதுகாப்பதற்கு புலிகள் கடும்சிரத்தை எடுப்பார்கள். நாகர் கோவிலில் இருந்து ஆரம்பமாகும் கடற்கரை பிரதேசங்களை புலிகள் படையினரிடம் இழக்க நேரிட்டால் அது ஆனையிறவு, பளை, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆகையினால் நகர்கோவில் அரணிலும் புலிகள் மிகவும் அவதானமாக இருப்பார்கள். புலிகளின் முன்னரங்க காவல் அரண்கள் முகமாலை, நாகர்கோவில், கிளாலி போன்ற இடங்களில் இருந்தாலும் அவர்களின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை நிலைகளை(யசவடைடநசல pழiவெள) சில கிலோமீற்றர்கள் பின்நகர்த்தியே வைத்துள்ளார்கள். வட பகுதி கல்முனை, பூனைகரி போன்ற இடங்களில் இருக்கும் புலிகளின் நீண்ட து}ரம் சுடும் எறிகணை பீரங்கிகளை புலிகள் படையினரின் முகாம்கள் உள்ள யாழ்நகர், ஊர்காவல்துறை ,மணடைதீவு ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து நிறுத்தியுள்ளார்கள். பூனைகரியில் இருந்து தேவைக்கு ஏற்ப பலாலி விமானதளத்திற்கு இலக்கு வைக்கும் அளவிற்கு அங்குள்ள பீரங்கி தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பளை மற்றும் ஆனையிறவு பிரதேசத்தில் உள்ள புலிகளின் நீண்ட து}ர எறிகணை பீரங்கிகள் பலாலி விமானதளத்தினை ஏட்டும் அளவிற்கு தயார் நிலையில் உள்ளது. இவைகளை செயல் இழக்க செய்து ஆனையிறவினை கைப்பற்றுவதே படையினரின் நோக்கமாகும். இதனை நிறைவேற்றுவதற்கு படையினர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். கிழக்கில் புலிகள் தமது இடங்களை விட்டு சென்றது போன்று வடக்கில் இலகுவாக விட்டு செல்லமாட்டார்கள். புலி தனது பாதுகாப்பிற்காக அவ்வப்போது பதுங்கும் இடத்தினை எப்பொழுதும் பாதுகாப்பாகவே வைத்திருக்கும்.

முகமாலையில் கிடைத்தது வெற்றியல்ல, பிழைத்து விட்டேன் எனும் பிரகடனமே (னுநஉடயசயவழைn ழக ளுரசஎயiஎயட)

கடந்த இரண்டு மாதங்களாக படையினரின் தாக்குதலில் காயம் அடைந்த புலிகள் தனது காயங்களை ஆற்றியபடி இருந்துள்ளார்கள். சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் பாய்ந்துள்ளர்கள். மாவிலாற்றில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல தோல்விகளை சந்தித்த புலிகளுக்கு தம்மை சுதாகரித்து கொள்வதற்கு இவ்வகையான தாக்குதல் ஒன்று கட்டாயமாக தேவைபட்டது. கடந்த இரண்டு மாதங்களில் கொண்டு வந்த ஆயுதங்கள் மூழ்கடிக்கப்பட்டன, கடல் பிரயாணங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின, கிழ்க்கு பிரதேசங்கள் இல்லாமல் போயின,ஆயிரம் போராளிகள் உயிரிழந்தார்கள், இவ்வாறாக பல இழப்புக்கள் புலிகளுக்கு ஏற்பட்டன. இந்த இழப்புக்களினால் புலிகளினால் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் சென்று சாதனைகளை கூறி பணம் சேகரிக்க முடியாமல் போனது. புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்கள் புலிகளின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை கொண்டு சென்று நீங்கள் வீணாக சாகடிக்கின்றீர்கள் என வேதனையும் வேகமும் கொள்ள ஆரம்பித்தார்கள், புலிகள் தோல்விகளை சந்திக்கும் வேளையியில் கிளிநொச்சியில் இருக்கு மாணவ மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பயிற்;சி கொடுத்தமை அப்பகுதி மக்களுக்கு மேலும் சினத்தினை உண்டு பண்ணியது. இது மட்டும் அல்லாது புலிகளின் வளர்ப்பு தந்தையாக இருக்கும் நோர்வே அவர்களின் பலம் குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தமை புலிகளுக்கு கௌரவ குறைவினை ஏற்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் ஓரளவிற்கு சமாளிப்பதற்கு புலிகளின் முகமாலை தாக்குதல் உதவியுள்ளது. படையினரின் 74 உடல்களை புலிகள் கிளிநொச்சிக்கு எடுத்து சென்று சமாதான பேச்சாளர்கள் வானு}ர்தியில் சென்றிறங்கும் மைதானத்தில் அடுக்கி வைத்து அதனை மக்களுக்கு காண்பித்து தமது வீரத்தினை செப்பியுள்ளார்கள். கடந்த இரு மாதங்களாக ஐரோப்பிய ,அமெரிக்க (கனேடிய) நாடுகளில் தலை குனிந்து நடந்த புலிகளின் முகவர்கள் தற்பொழுது சற்று தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து ள்ளார்கள். அடக்கி வாசித்த புலிகளின் சார்பு இணையதளங்கள் இந்த தாக்குதலை ஒரு பாரிய சாதனையாக காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். புலிகளின் போராளிகளுக்கு உளபலத்தினை இந்த தாக்குதல் கொடுத்திருக்கின்றது. பிரதானமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் உரையினை ஓரளவு தலைநிமிர்ந்து பேசுவதற்கு முகமாலை தாக்குதல் உதவியுள்ளது.

மொத்தத்தில் புலிகளுக்கு இருந்த வந்த சில நெருடல்கள் இந்த தாக்குதலினால் இல்லாமல் போயுள்ளன. ஆனால் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. முகமாலை தாக்குதல் புலிகளுக்கு வெற்றியினை கொடுக்கவில்லை, முன்னேறிய படையினரை தாக்கி விரட்டியடித்திருக்கின்றார்களே தவிர யாழ் பகுதியினை கைப்பற்றவேண்டும் என்கின்ற அவர்களில் இலக்கில் ஒரு இஞ்சினை கூட அவர்களினால் பெறமுடியவில்லை. கடந்த மாதம் முகமாலையில் படையினரிடம் இழந்த ஒரு கிலோமீற்றர் து}ரத்தினை கூட புலிகளினால் மீட்கமுடியாது போயுள்ளது. மாவிலாறு ,மூது}ர், சம்பூர் ஆகிய பிரதேசங்களை படையினர் தாக்கிய பொழுது அவர்களுக்கு அங்கு கிடைத்து வெற்றியாகும், அந்த பிரதேசங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். புலிகள் கடந்த புதன் கிழமை படையினருக்கு ஏற்படுத்திய சேதங்கள் புலிகளுக்கு இருந்த அழுத்தங்களை தற்காலிகமாக விடுவித்து இருகின்றதே தவிர விடுதலைப்பாதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை. புலிகள் தமது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வெகுவாக குறைப்பித்து காண்பித்து உள்ளார்கள். புலிகளின் ஆதரவு இணைய தளங்களும், விசுவாசிகளும் உண்மைகளை ஜீரணிக்க முடியாது தம்மை தாமே திருப்தி படுத்தி சந்தோசம் கொள்கின்ற ஒரு வகைநோயிற்கு உட்பட்டவர்களாவர்கள். நான் இங்கு கூறப்போகின்ற சில விடயங்கள் அவர்களினால் ஜீரணிக்க முடியாதவைகள் ஆகும்.

அரச தரப்பு புலனாய்வு துறையின் தகவலின் அடிபடையிலும், கிளிநொச்சியில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பெறப்பட்ட செய்திகளின் அடிபடையிலும் பார்க்கின்ற பொழுது கடந்த புதன் கிழமை முன்னரங்க காவல் அரண் மோதலில் புலிகளுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. முகமாலையில் கொல்லப்பட்ட புலிகளின் 160 உடல்கள் மட்டில் துணுக்காயிலும், கிளிநொச்சிலும் அடக்கம் செய்யப்பட்டதாக (விதைக்கப்பட்டுள்ளது) தெரியவந்துள்ளது. காயம் அடைந்த புலிகளின் 285 போராளிகள் கிளிநொச்சியில் உள்ள அரச வைத்தியசாலையிலும் ,தற்காலிக வைத்தியகூடாரங்களிலும் (அயமநளாகைவ அநனiஉயட உயஅpள) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி அரச வைத்தியசாலை காயம் அடைந்த புலி போராளிகளினால் நிறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் சக இயக்க போராளிகள் மீதும், அரச படையினர் மீதும் தாக்குதலை மேற்கொள்ளும் போது தேவைக்கு அதிகமாக போராளிகளை பயன்படுத்துவதும், அவர்களில் பலரை வீனாக பலி கொடுப்பதும் வழக்கமாகும். இதனையே முகமாலையில் செய்திருக்கின்றார்கள். காயம் அடைந்த புலிகளின் போராளிகளுக்கு இரத்தம் வழங்குமாறு கிளிநொச்சியில் உள்ள மக்கள் கேட்கப்பட்டு வருகின்றார்கள். புலிகளை போன்று அரச தரப்பும் தமது இழப்புக்களை மூடி மறைக்ககின்ற போதும், இறந்தபடையினரின் உடல்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பொழுது உண்மைகள் தெரிந்து விடுகின்றன. முதலில் 78படையினரை காணவில்லை என தெரிவித்து இருந்த படைதரப்பு புலிகளினால் 74 உடல்கள் கையளிக்கப்பட்ட பின்னர் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து உள்ளார்கள். படையினர் பொயகளை கூறினாலும் அது பின்னர் தெரியவந்து விடுகிறது. ஆனால் இரும்பு திரைக்குள் இருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் ஏற்படும் இழப்புகள் வெளிவருவது இல்லை. சிலர் அதனை ஆராய்ந்து உணமைகளை வெளியிட்டாலும் அதனை புலிகளின் விசுவாசிகள் மட்டும் விளங்கி கொள்ள மாட்டார்கள். படையினர் தரப்பில் படுகாயம் அடைந்தவர்கள் கொழும்பு இராணுவ வைத்திய சாலையிலும் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் பலாலி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 2006-10-13) பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட இராணுவ தளபதி சரத்பொன்சேகா அவரகள் காயம் அடைந்த படையினரை சென்று பார்வையுற்றுள்ளதோடு, படையினரின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வட பகுதி இராணுவ தலைமையுடன் விவாத்தித்து விட்டு சென்றுள்ளார்.

இருதரப்பினரின் படைபலமும்,இழந்த உயிர்சேதங்களும்
அரச படையினரின் தொகையளவினை புலிகளின் போராளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் படையினருக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் அதிகமானவை அல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கு பகுதிகளில் மக்களை வாக்களிக்க விடாது படையினருக்கு எதிராக கிளைமோர் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் (2005-01-01) இருந்து இதுவரையில் 664பொதுமக்கள் உட்பட மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அரச படைதரப்பில் இராணுவத்தினர் 624, கடற்படையினர் 104, பொலிசார் 83, ஊர்காவல் படையினர் 36 என்ற எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.புலிகள் தரப்பில் 1546 போராளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த கணிப்பீடு இலங்கை தேசிய பாதுகாப்பு துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .(றறற.யெவழையெடளநஉரசவைல.டம) இந்த எண்ணிக்கைகளை முற்றாக மறுக்கமுடியாது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 900 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்ப ட்டுள்ளார்கள். மாவிலாறு, மூது}ர், சம்பூர், தரவை முகாம் மீதான விமானதாக்குதல் ,கரடியனாறு விமானதாக்குதல் போன்ற சம்பவங்களில் புலிகளுக்கு கடும் உயிரழப்பு ஏற்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி புலிகள் யாழ்குடாநாட்டினை கைபற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி இராணுவத்தினரால் முறியடி க்கப்பட்டது. இதில் கடும் உயிழப்பு புலிகளுக்கு ஏற்பட்டதினாலேயெ அவர்கள் அந்த முயற்;சியினை கைவிட்டு இருந்தார்கள்.

தென்கிழக்காசியாவில் உள்ள இராணுவம் பலம் மிக்க நாடுகளான இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாட்டினை காட்டிலும் இலங்கை இராணுவத்தினரில் அதிக படையினர் உள்ளனர். பாகிஸ்தானில் ஒரு மில்லியன் மக்களுக்கு 4 ஆயிரம் படையினரும் இந்தியாவில் 1300படையினரும் உள்ளார்கள். இந்த நாடுகளை காட்டிலும் அதிகமாக இலங்கையில் ஒரு மில்லியனுக்கு மக்களுக்கு 8 ஆயிரம் படையினர் என்ற வகையில் படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் இலங்கையில் 150,000 இராணுவத்தினர் உள்ளார்கள். இவர்கள் கனரக ஆயுதங்களை (ஆரடவi-டீயசசநட சுழஉமநவள டுயரnஉhநசள,டழபெ சயபெந யசவடைடநசலஇஅழசவயசளஇடியவவடந வயமௌ யனெ யசஅழரசநன pநசளழnநெட உயசசநைசள) பாவிக்ககூடிய வகையில் பயிற்றப்பட்டுள்ளார்கள். இதனைவிட 20,600 கடற்படையினர் உள்ளனர். மேலும் ஆஐபு-23இ ஆஐஊ 24இ முகசை ளரிநசளழniஉ கiபாவநச-டிழஅடிநச, ஆகிய யுத்த விமானங்களை உள்ளடக்கிய விமானப்படையினர் உள்ளார்கள். இலங்கை பாதுகாப்பு செலவீனங்களுக்கு இதுவரையில் 700 மில்லியன் அமெரிக்க டொடலாரக இருந்த செலவீனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொஒருக்கு உயர உள்ளது. சம்பூரை கைப்பற்றுவதற்கு மட்டுமாக இரண்டாயிரம் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டு இருந்தார்கள். இந்த பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு 20ஆயிரம் படையினர் மட்டில் சம்பூரையும் அதனை அண்டிய பிரதேசங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புலிகளும் பெருமளவிலான பணத்தினை ஆயுத கொள்வனவிற்காக ஆண்டு தோறும் செலவு செய்து வருகின்றார்கள். இதுவரையில் அவர்களிடம் செயற்பட கூடிய அளவிற்கு விமானப்படையினரோ அல்லது விமானஎதிர்ப்பு பாதுகாப்புகளோ இல்லை. ஆனால் தரைபடையும், கடற்புலிகளும் கடந்த காலங்களில் பலமாக இருந்து வந்துள்ளன. கடற்புலிகளிடம் 10மைல் கடல்வேகத்தில் இருந்து 40மைல் கடல்வேகம் செல்லக்கூடிய அளவிற்கு தாக்குதல் படகுகள் உள்ளன, இவைகளில் 23 மில்லி மீற்றர் இரட்டை குழல் பீரங்கிகளும் ரடார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை விட பினாமிகளின் பெயர்களில் வர்த்தக கப்பல்கள் இருக்கின்றன. அரச படையினரின் இருக்கும் 150,000 இராணுவத்தினரையும், 20,600 கடற்படையினரையும் ஒப்பிடுகையில் புலிகளிடம் 10,000 ரைவழி போராளிகளும், 2,000 கடற்புலிகளும் மட்டுமே உள்ளார்கள். இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த இரு மாதங்களில் புலிகளுக்கு நேர்ந்த உயிரழப்பு அதிகமேயாகும்.
முகமாலை முன்னரங்காவல் அரண்களில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பட்ட மோதலில் புலிகளை காட்டிலும் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதினை அரச பாதுகாப்பு துறையினரே ஒப்புக் கொண்டுள்ளார்கள். இதனை புலிகள் தமக்கு வெற்றியென ஏனையோரை நம்பவைக்க முயற்சிக்கின்றார்கள். படையினருக்கு உயிரிழப்பினை ஏற்படுத்துவதினால் தமிழ்ஈழம் கிடைத்துவிடும் என புலிகள் கிளிநொச்சியில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை நம்பவைத்துள்ளார்கள். புலிகளின் ஊடகங்களை தவிர வேறு எந்த செய்திகளும் எட்டாது வாழும் அந்த மக்களுக்கு இது வெற்றி என புலிகள் காட்ட முனைகின்றனர். அவ்வப்போது புலிகளினால் இவ்வகையான உயிரிழப்பினை படையினருக்கு ஏற்படுத்த முடியுமே தவிர ஏனைய பிரதேசங்களை மீட்டெடுத்து அவைகளை பாதுகாத்து வைத்திருக்க முடியமா என்பதினை புலிகள் நீரூபிக்க வேண்டும்

No comments: