Wednesday, October 18, 2006

'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்...


'தமிழ்புலிகளும்" பிரித்தானியாவில்; விரிந்துள்ள அவர்களின் வலைப்பின்னலும்

டொமினிக் வைட்மன்
2006 ஒக்டோபர் 18

(Global Politician இணையத்தில் வந்த கட்டுரை. தமிழாக்கம:;. இலங்கை சமாதானச்செயலகம்)

லண்டனில் அமைந்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான LLSS அமைப்பின் பேச்சாளராக டொமினிக் வைட்மென் செயற்படுகிறார் - இவ்வமைப்பு முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் மொழித்தேர்ச்சி பெற்றோர் முதல் வங்கியாளர்களை உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தடயங்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களைக் கொண்ட சர்வதேச வலைப்பின்னலொன்றாகும்.

2001 பெப்ரவரி 28ஆம் திகதி ஐக்கிய இராஜதானியில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும் அல்-குவைதா இயக்கத்துக்கும் இடையில் தளிர்விட்டு வரும் தொடர்புகள் பற்றி லண்டனில் உள்ள சர்வதேச உத்தி ஆய்வுகள் நிறுவனத்தின் வருடாந்த வெளியீடு '2005- 2006 இராணுவ சமநிலை" குறிப்பிட்டிருந்தது. இது கொள்கை அடிப்படையிலான தொடர்பாகவல்லாது, கள்ளக்கடத்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பதாகவிருந்தது என இராஜதந்திரிகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் இரகசியமாகப் பின்பு தெரிவித்தனர். இப்பல்வேறுபட்ட விடுதலைப்புலிகள் மற்றும் அல்-குவைதாவுக் கிடையிலான தொடர்புகளை நிபுணர்கள் இப்போது ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். கடல்சார்ந்த கொடுக்கல் வாங்கல்களிலும் இத்தொடர்பு நிலவுகிறது எனவும் நம்பப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் ஏந்தியிருக்கும் தமிழ் புலிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குத் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பாவித்த முதலாவது பயங்கரவாத அமைப்பாகும். கடந்த 23ஆண்டுகளில், அது இலங்கையில் பல அரசியல் தலைவர்களையும், முன்னாள் இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்துள்ளதோடு, அநேகமாக அப்பாவிப் பொதுமக்களை உள்ளிட்ட சுமார் 60,000உயிர்களை பலிகொள்வதிலும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2006 ஆகஸ்ட் 21ஆம் திகதி, பிரித்தானியப் பிரஜையான டாக்டர் முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் அவரது மனைவி டாக்டர் புஷ்பம்; ஆகிய இருவரையும் நிய10யோர்க்கில் வைத்து எப்பிஐ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். விடுதலைப்புலிகள் இனை ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்க நீதித் திணைக்கள அதிகாரயொருவருக்கு 01மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி செய்த ஏவுகணைகளையும் பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பம் தொழில்நுட்பத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காகக் கொள்வனவு செய்வதற்கு வசதிபடைக்க முயன்ற குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.

ஐக்கிய இராஜதானியில் பரந்து வாழும் தமிழ் சமூகத்திடம் இருந்து பயமுறுத்தியும் அதட்டியும் பெறப்படும் மிக அதிக அளவிலான பணத் தொகை பற்றி இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்டது பல அவதானிகளின் கண்களைத் திறந்து விட்டுள்ளது. இப்படியாக வசூலிக்கப்படும் பணம் ஆட்களைக் கொண்டு இலங்கைக்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்படுகிறது அல்லது மூன்றாம் நாடுகளில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பாவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராஜதானியில் பணம் வசூலித்தல் : முறை பற்றிய விடயம் சார்ந்த ஆய்வு

'இறுதி யுத்தத்திற்காகப் பணம் திரட்டல் - பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்கு எதிரான விடுதலைப்புலிகள்pன்; பயமுறுத்தல் (ய10.கே மற்றும் கனடாவில் விடயம் சார்ந்த ஆய்வொன்று)" என்ற தலைப்பிலான ஆய்வொன்றை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிய10மன் ரைட்ஸ் வொச் இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டது. இவ்வாய்வின் படி, பல குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிடம் இருந்து 2000ய10ரோ முதல் 100,000 ய10ரோ வரையிலான தொகைகள் கேட்கப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள விடுதலைப்புலிகளின் முகப்பு அமைப்பான 'பிரித்தானிய தமிழ் இயக்கம்" நெட்வெஸ்ட் வங்கியிலுள்ள அதன் கணக்குக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்போது அவர்கள் கேள்விக்கொத்தொன்று மூலம் தமிழ் சமூகத்தினரிடம் அவர்கள் குடும்ப விபரம், வருமானம், இலங்கையில் அவர்கள் குடும்பம் பற்றிய விவரம் போன்றவற்றைக் கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். கொடுப்பனவுகளைச் செய்ய மறுத்தால் பின்வரும் விளைவுகளில் ஏதுமொன்றை எதிர்நோக்க நேரிடும். இலங்கையிலுள்ள உறவினர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவார். பணம் கொடுக்க மறுப்பவரே கொலை செய்யப்படுவார்.

சுருக்கம்

விடுதலைப்புலிகள் 2001 இல் ஐக்கிய இராஜதானியில் தடை செய்யப்பட்டதானது அவர்களின் நடவடிக்கைகளில் ஒரேயொரு மாற்றத்தையே விளைவித்தது. அவர்களது செயலகம் மற்றும் முகப்பு அமைப்புக்களின் பெயர்களை அவர்கள் மாற்றி வழமை போல் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.இன்று அவர்கள் கடன் அட்டைக் களவு முதல் கள்ளப் பணத்தைச் சுத்திகரித்தல், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல், சர்வதேச போதைப் பொருள் வர்த்தகம் போன்ற இன்னோரன்ன துறைகளுக்கு வியாபித்துள்ளதோடு, இலாபகரமான கப்பல் போக்குவரத்துப் பின்னலொன்றையும் பேணி வருகின்றனர். முக்கியமாக ஐக்கிய இராஜதானி மற்றும் கனடாவில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அபகரித்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைளின் மூலம் ஐக்கிய இராஜதானியில் இருந்து மாத்திரம் ஆண்டொன்றுக்கு சுமார் 10மில்லியன் ய10ரோ வந்து சேர்கிறது.

ஐக்கிய இராஜதானி நகரப் பொலிஸ் பிரிவின் பயங்கரவாதத்துக்கு எதிரான கட்டளைப் பீடத்தின் கூற்றுப்படி, இந்நடவடிக்கைள் பற்றி அவர்கள் அறிந்திருந்த போதிலும், 'இஸ்லாமிய பயங்கரவாதம்" பற்றிக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஆளணியின் குறைவு காரணமாக முட்டுக்கட்டைகளை எதிர் நோக்க அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயங்கரவாதம் எனப் இப்படிப் பிரித்துப் பார்ப்பதனால், ஐக்கிய இராஜதானி, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இன்னும் பல நாடுகள் தடைசெய்துள்ள பயங்கரவாதக் குழுக்கள் பொதுவாக ஐக்கிய இராஜதானியில் தடையின்றிச் செயற்படுவது வருந்தத் தக்கதொரு விடயமாகும்.

பிரித்தானிய காட்டும் சகிப்புத் தன்மை பயங்கரவாதத்தைப் போசிக்கிறது.

இலங்கையில் தமிழ் புலிகள் மேற்கொண்டு வரும் கிளர்ச்சியினால் ஏற்பட்ட சச்சரவுகள் இப்போது பிரித்தானியாவுக்கும் வியாபித்து, பல பயங்கரத் தாக்குதல்களுக்கு அது வழிவகுத்துள்ளது. ஐக்கிய இராஜதானியில் வசிக்கும் தமிழ் சமூகம் தொடர்புபட்ட 16 கொலைகள் 2005 ஆம் ஆண்டில் மாத்திரம் நேர்ந்திருக்கின்றன,சர்வதேச ரீதியாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் திரு. சார்ல்ஸ் அன்ரனி பெல்பாஸ்ட் பல்கலைக் கழகத்தில் இப்போது கல்வி கற்கும் மாணவன் என்பது கவனிக்கத்தாகும். இப்பல்கலைக் கழகத்துக்குச் சேர்வதற்கு அவருக்கு ஐஆர்ஏ இன் மார்ட்டின் மக்குயின்னிஸ் உதவியுள்ளார். அதற்கான காரணம், இலங்கையில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக 'நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு நடவடிக்கை" என்பதாகும்.

இன்னும் மோசமானது.

1995 ஆம் ஆண்டு முதல், மூன்று விடுதலைப்புலிகளின் பிரத்தானிய தரும ஸ்தாபனங்களும் தமிழர் வீடமைப்பு இயக்கமும் 8மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சேகரித்தன. இவை ஐக்கிய இராஜதானியில் தர்ம ஸ்தானங்கள் மற்றும் ஒரு வீடமைப்பு இயக்கம் என்று பதிவு செய்யப்பட்டு சட்டப்படியான அந்தஸ்தை அவை பெற்றிருந்ததால், உள்நாட்டு மற்றும் மத்திய அரசாங்கத்தின் மான்யங்களை அவை பெறக்கூடியதாக இருந்தது.

1995ஆம் ஆண்டு தொடக்கம் வரி விலக்களிப்புடன் புனரமைப்புக்கான தர்மக்கொடை என்பதன் மூலம் பிரித்தானியாவில் இருந்து விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்கு சுமார் 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் போய்ச் சேர்ந்திருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இக்குழுக்கள் ஓரளவு தொண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதில் சந்தேகமில்லை என்பதோடு, வன்னிக் கானகத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் அகதிகளுக்கான நிவாரண உதவியை வழங்குகிறது. 'ஹொட் ஸ்பிரிங்" என்ற சஞ்சிகைக்கு எழுதிய விடுதலைப்புலிகளின்; செயற்பாட்டாளர் சார்ல்ஸ் சோமசுந்தரம், இந்த தர்மங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் சிந்தனைப் போக்கில் உருவானவையே எனக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய உதவி அமைப்புக்களான ய10என்எச்சிஆர், ஐசிஆர்சி, ஒக்ஸ்பாம் போன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடும் போது, இவ்வாறான நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன (பிரித்தா னியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற 2.5மில்லியன் ய10ரோவின் சிறியதொரு அளவேயாகும்). இச்சர்வதேச அமைப்புக்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கும் விடுதலைப்புலிகளினருக்கும் இடையேயுள்ள தொடர்பினை அறிந்திருப்பதால், அவை தமிழர் புனர்வாழ்பு கழகத்தை விட்டு விலகிச் செல்கின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் தர்ம நடவடிக்கைகள் அவர்களது முக்கிய நோக்கமான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிதி சேர்ப்பதை மறைப்பதற்கு மேற்கொள்ளப்படுவதாகும் என பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பற்றிய கனேடிய செனட் சபைக் குழுவின் பாதுகாப்பு நிபுணர் டொன் கிரேசி குறிப்பிடுகிறார். வன்னிப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொள்ளும் சிறிதளவு நடவடிக்கைகளைப் பலவாறாகப் பெரிசு படுத்தி விடுதலைப்புலிகள்pன்; கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஊடகங்கள் பரப்புரையொன்றை மேற்கொண்டு, வன்னிக் காட்டுப் பகுதியில் செயற்படும் மிகப் பெரிய அரச சார்பற்ற அமைப்பு தாங்களே என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்குக் காட்ட முனைகிறது. இப்படிச் செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்காக மேலும் நிதிகளைச் சேகரிக்க அவர்கள் விளைகின்றனர்
www.Thenee.com

No comments: